Showing posts with label சந்திப்பு. Show all posts
Showing posts with label சந்திப்பு. Show all posts

எட்றா வண்டிய....வாமு கோமு ஊட்டுக்கு......!

>> Thursday, July 11, 2013


சில நாட்களாகவே “குட்டிப்பிசாசு” என் காதுமடலை கடிக்கின்றாள் முணுமுணுப்பாக ஏதோ கூறிக்கொண்டேயிருக்கின்றாள், அவளின் வாயில் பான்பராக் வாசம் எப்பொழுதும் இருக்கின்றது, “சரோஜா” வேறு தீப்பிடித்த காயங்களோடு கருகிய வாசனையுடன் வருகின்றாள் இது எதாவது பில்லி சூனியமா...? இவளுகளை இந்தாளு எப்படிய்யா சாமாளிக்குறாரு...என்கின்ற கேள்வி சில நாட்களாக என் மனதை குடைந்து கொண்டேயிருக்கின்றது.

பாலியல் கதைகளைப் பொறுத்தவரை விந்து வருவதற்கு முன்னிருந்தே ஒரு ஆணிற்கு அதுவும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பெரிசுகள் சிலேடையாகவும், அண்ணன்மார்கள் கிணறு, குட்டையில் உக்கார்ந்து உண்மையும், புனைவும் கலந்து கூறிவந்த கதைகள், ஒரு கிளர்ச்சியும், சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. வாமு கோமுவின் பல கதைகள் திருப்பூரின் மாவட்டத்தை சார்ந்த பாலியல் பிரச்சனைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன என்று நான் நினைக்கின்றேன். அதில் பல பாத்திரங்கள் நாம் கேள்விப்பட்டவைகளாகவும், பழகியவைகளாகவும் இருப்பதும், மிக நுட்பமான பார்வையில் படைப்புகளை படைக்கும் பாங்கும், கொங்கு வட்டார வழக்கை எந்த சமயத்திலும் அனாயசமாக எழுத்துகளில் புகுத்தும் நுட்பம் கண்டு நான் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றேன். அந்த மனிதரை சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இரவுவானம் சுரேஷ்க்கு நீண்டநாட்களாக இருக்கின்றது. 

அதனால் கிளம்பிப் போனோம் வாய்ப்பாடி கிராமத்தை நோக்கி விஜயமங்கலம் இரயில் நிலையம் ஒட்டியபடியே வீடு,நாவல்களில் வர்ணிப்பதைப் போன்ற ஒரு அழகான கிராமம்! கிராமத்து மனிதராக எங்களை அன்போட வரவேற்றார், பல விசயங்களைப் பேசினார் ஒரு மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை, நாங்கள் ஹென்றி ஷாரியர் எழுதிய 'பட்டாம்பூச்சி' பிரஞ்சு நாவல் தமிழ் மொழி பெயர்ப்பு ரா.கி.ரங்கராஜன் நர்மதா பதிப்பு வெளியிட்டிருந்தது அதை வாங்கிகொண்டு சென்றோம் இது குமுதத்தில் தொடராக வந்தது.அவருடைய “கள்ளி” கிடைக்கவில்லை அதனால் “மங்கலத்து தேவதைகள்” வாங்கினேன்! ஏற்கனவே வாங்கி நான் படிக்காமலே ஒரு நண்பன் வாங்கிச்சென்றது திரும்பி வரவில்லை அதனால் மீண்டும் வாங்கினேன். அன்போட என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார் வார்த்தைகளில் மட்டுமல்ல.... கொங்கு மண்ணுக்குறிய அன்பு நிறைய அந்த மனிதரிடம் இருந்தது, பழகுவதற்கு இனிமையான நல்ல எளிமையான மனிதர்.

வாமு கோமுவின் வலைத்தளம் : http://vaamukomu.blogspot.in/

வாமு கோமுவின் முகநூல் : https://www.facebook.com/vaamukomu?fref=ts

Read more...

என் பெயர் கல்யாணராமன்!

>> Saturday, September 1, 2012



இந்த பதிவுலகம் பல விசித்திரமான பதிவுகளை கண்டிருக்கின்றது..! புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கின்றது...! இந்த பதிவு விசித்திரமானதும் அல்ல...!எழுதிய நானோ..! கொஞ்சம் விசித்திரமானவன்.!   இங்கே பாருங்கள்..! என் தலையில் கொம்பு முளைத்துக் கொண்டிருக்கின்றது.

பல காலம் பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் சாதாரண ஜீவன்களில் நானும் ஒருவன். தமிழ்மணத்தில் இணைத்துப் பார்த்தேன். இண்ட்லி,யுடான்ஸ் என்று இணைத்துப் பார்த்தேன் எலக்கியம் என்று பிதற்றினேன்...திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூட த.ம.4 எனக் கருத்திடவில்லை அய்யகோ..! என்ன கொடுமை.

வெறுத்துப் போய் கூகுள் பிளஸ் பக்கம் ஒதுங்கினேன்... ஏழுமலை, ஏழுகடல் தாண்டி ஒரு மரம்! மரத்தினில் ஒரு பொந்து, பொந்தினில் ஒரு மடல், ஏதோ பதிவர் சந்திப்பாம்...! எனக்கு ஏது? நேரம் தம்பி! அதைப் படிக்க... அதனால் விட்டுவிட்டேன்....ஆனாலும் வேகின்றது என் கும்பி!

எங்களால் முடியாததை யாரோ...?சாதிக்கின்றார்கள் அவர்களுக்கு யார் கொடுத்தது அத்தாரிட்டி! அவர்கள் எதையாவது அறிவுப்பூர்வமான செய்து வைக்க நாங்களும் அறிவாளிகள் என்று உலகம் நம்புமே...! அதை நாங்கள் விரும்பவில்லை...!

சந்திப்பு, சென்னை, பதிவர், நாய்நக்ஸ் இந்த பெயர்களை கேட்டாலே எனக்கு வாந்தி...வாந்தியாக வருகின்றது. பேதி நிற்காமல் போகின்றது....! மற்றும் இதில் கலந்து கொண்டவர்களில் இருவரை மட்டும் எனக்குத் தெரியும் ஒன்று உ.த, இரண்டு மண்டபத்தின் வாட்ச்மேன் தாத்தா?!

பதிவர் சந்திப்பிலே எப்படி போண்டா தரலாம்...? அதுவும் சட்னியோடு.... யார் இந்த அதிகாரம் கொடுத்தது...? சாம்பாரிலே முருங்கக்காய் எப்படிப் போடலாம்....? கில்மா பதிவர் சிபிய வைத்துக்கொண்டு.....! அடல்ட் கார்னர் கேபிளை வைத்துக் கொண்டு....! யார் இந்த அதிகாரம் கொடுத்தது...?

அட்லீஸ்ட் என்னை மூத்த பதிவர்கள், இளையபதிவர்கள், என்றில்லாமல் நட்டநடுசென்டர் பதிவர் லிஸ்டிலாவது சேர்த்திருக்கலாம் இந்த பதிவுலகம்..! செய்ததா...? செய்யவில்லை..!

கடைசிக்கு ஒரு குருவி காலிலாவது கட்டித் தூது அனுப்பியிருக்கலாம்.....! செய்ததா...? செய்யவில்லை..! கேட்டால் நான் வறுத்து தின்றதாக கூறுகின்றார்கள்.

என்னை அந்தியூர் வெற்றிலை, கும்பகோணம் கொட்டைப்பாக்கு, வைத்து அழைத்திருக்க வேண்டும்! என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்....செய்ததா இந்த பதிவுலகம்..? செய்யவில்லை.....!

அதனால் கடுப்பில் ஓடினேன்.....ஓடினேன்.......ஓடினேன்.......ஓடினேன்....... சென்னையின் எல்லை வரை ஓடினேன்..! கடல் வந்து விட்டது. கால் உவாய்க்கு சுண்டல் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டேன்...!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Read more...

மரம் வெட்டுவதும் ஒரு கொலைதான்....

>> Sunday, May 27, 2012

யோகநாதன் அவர்களின் உரை முதல் பாகம்! படிக்க கிளிக் செய்யவும்




முதல்பாகத்தின் தொடர்ச்சி........


ஜெயசந்திரன் என்கிற நண்பர் தமிழ்நாடு கிரீன் பவுன்டேஷன் செகரட்டரி அவர் வந்து ஆறுதலா ‘நான் உனக்கு பக்கபலமா இருக்கிறேன்' அப்படின்னு சொல்லுறாரு...அப்புறம் மரம் வெட்டிய இடத்தில வீதியில இருக்கிற விளம்பர பிளக்ஸ் போர்டை எடுத்து அதுல ஒரு பேப்பர ஒட்டி “இங்கு மரம் வெட்டப்பட்டது அரசு கண்டு கொள்ளுமா?” அப்படின்னு எழுதி வைத்து விடுவேன்.

Read more...

சென்னை யூத் பதிவர் சந்திப்பும்! பின்னே நாங்களும்!

>> Tuesday, May 22, 2012


13ம்தேதி! இல்ல...இல்ல....20ம்தேதி! என சிவக்குமார் அதிமுக அமைச்சரை அம்மா மாத்துகின்ற மாதிரி தேதிய மாற்ற, வேறு வழியில்லாம பிளைட்ல போகவேண்டியதா போச்சு! என்னங்க ஙே! என்று முழிக்கிறீங்க? பிரபல நிறுவனத்தின் ஆம்னி பஸ்தான் பிளைட் மாதிரி ஓட்றாங்க தரையில டயர் படுவதேயில்லை,பறக்குதுய்யா...பறக்குது எங்கயாவது டச் ஆச்சு! மர்கையாதான்...! யப்பா சாமீ! புள்ள குட்டிகாரங்க...இதுல போகாதிங்க....! 

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP