வெள்ளை புறா ஒன்று......ஏங்குது கையில் வராமலே...

>> Tuesday, November 29, 2011




நான் செல்வியை பார்த்தது எப்போது நினைவுபடுத்திபார்த்தேன் திரும்பி பார்க்கின்றது, என் மனம் என் தங்கையின் திருமணத்தின் பொருட்டு மாப்பிள்ளை பார்க்க போன போது மாப்பிளையின் தங்கையாக அறிமுகமானவள் மாநிறம்தான்...!என்றாலும் அழகாக இருந்தாள்!  அவள் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது, அவளைப்பற்றி யாரிடம் கேட்பது திருமணம் ஆகாதவள் என்றாள் யாரிடமாவது கேட்கலாம்! திருமணம் ஆனவள் போல் இருக்கிறாளே...எப்படி கேட்பது...தயக்கம்...

ஆனால்..! புரோக்கர் தானே அவளைப்பற்றி கூறியதும் அவள் மேல் பரிதாபம் வந்தது, சந்தோசமாகவும் இருந்தது,காரணம்! அவளுடைய கணவன் பெங்களூருவில் பைனான்ஸ் வைத்திருந்த போது அளவுக்கு அதிகமாக குடித்து மாரடைப்பு வந்து இறந்து விட்டான், சிறிய வயதிலேயே விதவையானாள் செல்வி, அவளுக்கு மூன்று வயதில் குழந்தையொன்றும் உள்ளது, என் மேல் எனக்கே கோபம் வந்தது மைத்துனரின் தங்கை நாம் ஏதாவது தவறாக நடக்க தன் தங்கையின் வாழ்வே பாதிக்குமே....

ஆனாலும் மனம் ஒரு குரங்கு எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கின்றோமோ..! அது நம் முன் நிழலாடுவது மனித இயல்பு, செல்வியின் நினைவு வந்து பலநாள் தூக்கத்தை கெடுத்தது.... திருமணத்தின் போது நிறைய பேச சந்தர்ப்பம் கிடைத்தது பல விசயங்களைப்பேசினோம் எங்களை யாரும் தவறாக நினைக்கவில்லை...

இரண்டு மூன்று நாள் பழக்கத்தில் செல்வியுடன் உரையாடியதில் அவள் தனிமையை வெறுக்கிறாள் உறவை நாடுகிறாள் என அறிந்தது கொண்டேன் என் ஆண் என்கின்ற மிருகம் விழித்துக்கொண்டது நான் ஆசையை என் தங்கையின் திருமணம் முடிவதற்க்குள் கூறிவிட்டேன் சுருக்கமாக... உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று. 

அவளும் எதிர் பார்த்திருப்பாள் போல் எதுவும் சொல்லவில்லை சிரித்துக்கொண்டே அதற்க்கென்ன செய்துட்டா போச்சு என்று சாதாரணமாக கூறிவிட்டாள்.. என்றாலும் பிடிகொடுக்கவில்லை.... ஒரு மாதம் ஓடியது தெரியவில்லை நான் அவ்வப்போது என் தங்கையைப் பார்க்க போகும் போது அவளைக் கேட்பேன் நான் சொன்னது என்ன ஆச்சு? என்று சிரித்துக்கொண்டே போய்விடுவாள்...

ஒரு நாள் வெளியூரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என்வீட்டார் அவள்வீட்டார் அனைவரும் சென்று விட்டனர், அவளை மட்டும் விட்டுவிட்டு ஏனெனில் மாடு,கறவை நிறைய இருப்பதால் தண்ணீர் கொடுக்கவேண்டும், கடலை செடி நல்லா புடுங்கற நிலையில இருக்கு மாடு,கன்னு நுளைந்தால் உழைப்பெல்லாம் வீணாகிவிடும் நானும் இதே காரணத்திற்காக இருந்து விட்டேன்...

செல்வி என் செல்பேசியில் அழைத்தாள், பையனுக்கு உடம்பு சுடுது மருத்துவமனைக்கு போகனும் வருகிறீர்களா? என்றாள் நானும் போனேன்... நெருப்பாக கொதித்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினோம், குழந்தைக்கு ஒரு ஊசியைப்போட்டு விட்டு ஒன்றும் பயப்படவேண்டாம் குளிர்ஜுரம்தான்... உங்கவீட்டுக்காரரைப்போய் மருந்து எழுதி தரேன் வாங்கிட்டு வரச்சொல்லுங்க என்றார் என்னைக் கைகாட்டி அந்த நேரத்திலும் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்....

மருந்து,மாத்திரை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம்... சரி! நான் கிளம்புகிறேன் என்றேன், இரவாயிருச்சு... இருந்துட்டு காலையில போங்க... என்றாள் பரவாயில்லை நான் போகின்றேன் என்றேன் இருங்க நிறைய பேசனும் உங்ககிட்ட... என்றாள் செல்வி

இரவு தோசை சுட்டுப்போட்டாள், ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக செய்யும் தொட்டுக்க தக்காளியும் கத்திரிக்காயை நன்றாக சுட்டு கடைந்து செய்வார்கள், அதைத்தான் அவளும் செய்திருந்தாள், தேங்காய் சட்னியும் அதுவும் தேவார்தமாய் இருக்கும் விரும்பி உண்ணும் நான் அன்று என்ன பேசப்போறாளோ என்றைய சிந்தனையில் உணவில் மனம் ஒட்டவில்லை.

நான் சாப்பிட்டு விட்டு கைகழுவி விட்டு கையை துடைத்துக் கொண்டு சமையறைக்குள் நுழைந்தேன், தோசை சுட்டுக்கொண்டு இருந்தாள், அவள் முதுகில் திட்டுதிட்டான வியர்வை படிந்திருந்தது அவளின் அழகு என்னை என்னவோ செய்தது, என்னையறியாமல் பின்னால் கட்டிபிடித்து விட்டேன், அவள் அதிர்ந்து போனாள் அப்படியே அவள் உதட்டில் முத்தமிட்டேன் சிறிது திமிரிய அவள் என் உறுதியான விவசாயம் செய்யும் உடலின் அனைப்பை விடுவிக்கமுடியவில்லை...

விடுவிடு இங்க வேண்டாம் என்றாள், நான் பிடியை விட்டேன் கருகிய தோசையை எடுத்து குப்பையில் போட்டாள், அடுப்பை அனைத்தாள் அவளின் படுக்கை அறைக்கு சென்றாள் அவள் உடையனைத்தும் களைந்தாள் சிற்பி செதுக்கிய நிர்வாண சிலையாக படுக்கையில் விழுந்தாள் வா....என்றாள் வானத்தில் உலவி வந்த சந்திரன் மேகங்களுக்கிடையில் மறைந்து கொண்டான்.. இரு உயிர்களின் சங்கமத்தினைப்பார்த்து வெக்கப்பட்டுக் கொண்டு,  தூரத்தில் நரி ஊளையிட்டது, கிணற்றின் ஓரம்...இரண்டு பாம்புகள் புனர்ந்து கொண்டுருந்தது கணவன் இறந்து இரண்டு வருடம் பொத்திவைத்திருந்த காமம் தலைவிரித்து சாமியாடியது இரவு முழுவதும்....

அதற்க்கு பின் என்னால் செல்வியை மறக்கமுடியவில்லை... ஊரே எதிர்த்து நின்றாலும் அவளைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன், செல்வியின் மகன் என்னோடு நன்றாக ஒட்டிக்கொண்டான், அப்பா! என்று கூட அழைக்க ஆரம்பித்து விட்டான் மெதுவாக என் பெற்றோரிடம் நான் செல்வியை திருமணம் செய்து கொள்வதாக கூறினேன் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் பிறகு ஒரே மகன் ஆசைப்படுகிறான் நம்ம பொண்ணு அங்க வாழ்ந்திட்டு இருக்கு என சமாதானமாகினர்... என் பெற்றோர் உறவினர் ஒருவரை அழைத்து விசயத்தைக்கூறி, பொண்ணு கேட்க கூறினார்கள் அவரும் போனார்... 

செல்வியின் குடும்பம் இதைக் கேட்டதும் வானுக்கும்...பூமிக்கும்... குதித்தனர், என் தங்கையை அடித்து உதைத்து என் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள், எத்தனையோ பேர் எடுத்துக்கூறினார்கள்.. செல்வியின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை, அவ.....அப்படி அவனை கல்யாணம் பண்றதா...இருந்தா பையனை விட்டுட்டு போகட்டும்.. என்றார் என்னடா இவன் முட்டாளா இருக்கிறானே பொண்ணின் வாழ்க்கை மீண்டும் தொடங்குவதை தடுக்கிறானே என்று குழம்பினார்கள், அதற்க்கான விடையை செல்வியின் உறவினர் கொண்டுவந்தார் இறந்து போன கணவன் வீட்டுக்கு ஒரே மகன், அவர்களுடைய ஏராளமான சொத்து செல்வி மணமுடித்தால் கிடைக்காது, கணவன் இறந்தபிறகு கணவன் வீட்டிலேயே இருந்த செல்வியை அவளுடைய அறுபது வயது மாமனார் தவறாக நடக்க முயற்சித்துள்ளார், அதனாலதான் செல்வி இங்கே வந்து இருக்கிறாள்...எங்கள் காதல் விவகாரம் அறிந்த, செல்வியின் மாமனார் செல்வியின் தந்தையிடம்.. உம் பொண்ணு வேற எவனாயாவது கட்டிக்கிட்டா சொத்தையெல்லாம் எங்க சொந்தக்காரங்க யாருக்காவது எழுதிவைச்சிருவோம் என்று மிரட்டியிருக்கார்.. அதனால சொத்துக்கு ஆசை ப்பட்டு திருமணத்திற்கு மறுக்கிறார் என்று கூறிவிட்டு செல்வி ஒரு கடிதம் கொடுத்தாள் என்று கடிதத்தைக் கொடுத்தார்... அதை பிரித்து படித்தேன்...

அன்புள்ள
      ஜெ.....நான் இப்ப எங்க மாமனார் வீட்டுல இருக்கின்றேன், செத்துபோகலாம் என்று நினைக்கின்றேன், என்னால் அதுகூட  முடியவில்லை...,என் மகன் அனாதையாகிருவானே....என் புருசன் உயிரோடு இருந்தபோதும் நான் மகிழ்ச்சியா இருந்ததில்லை தினமும் குடிச்சிட்டு வந்து என் மேலேயே.... வாந்தி எடுப்பான், மது நாத்தம் குடலை புரட்டும் அவனோடு உறவை வைச்சிருக்கின்ற நிமிடம் நரகம், அவன் கூட உறவுக்கு மறுத்தா இரத்தம் வருகின்ற அளவுக்கு அடிப்பான்....செக்ஸ்ங்கரது நரகம்ன்னு நினைச்சிட்டு இருந்த எனக்கு, உன் மழைச்சாரல் போன்ற தழுவல் என்னை மெய்மறக்க செய்தது வாழ்க்கையில் நான் சந்தேசமா இருந்தது நாம் உறவு கொண்ட நேரங்கள்தான் ஜெ...

அதைவிட கொடுமை ஒரு பெண்ணான நான் சொல்லக்கூடாது...சொல்லுகின்றேன் எங்க அப்பா என் மாமனாரிடம் கொண்டு வந்து விடும் போது, என் கிட்ட என்ன சொன்னார்.. தெரியுமா? உனக்கு உடம்பு சுகம் வேணுன்னா... உன் மாமனாரிடம் அட்ஜெஸ்ட் செய்துட்டு போங்கறான், அதுக்கு என்னை பஸ்ஸ்டேண்டுல நிறுத்தி விபச்சாரம் செய்யலாம்...

அப்பனே...எம் புள்ளைய அனுபவிச்சுக்கோன்னு சொன்னா...கிழவன் சும்மாயிருப்பானா.....வழுக்கட்டாயமா இரண்டுமுறை.....என்கொடுமை எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது நீ...நல்ல பெண்ணா பார்த்து திருமணம் முடிச்சிட்டு நல்லாயிரு சீக்கிரம் என்னை மறந்திரு அதுதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது...

கடிதத்தைப் படித்தவுடன் எனக்கு ஆத்திரம் தலைக்கேற என் பைக்கை வேகமாக எடுத்து செல்வியின் வீட்டுக்கு போனேன் பதற்றத்திலும்,ஆத்திரத்திலும்... வேகமாக சென்ற எனக்கு வளைவு ஒன்றில் வந்த டிரேக்டரை கவனிக்க மறந்துவிட்டேன்...உறுதியான பம்பர் என தலையில் பட்டு தூக்கிஎறிந்தது என்னை நினைவு என்னை விட்டு மெல்ல மெல்ல மறந்தது.... 

நினைவு திரும்பியபோது, டெட்டால் வாசனையுடன் மருத்துவமனையில் இருந்தேன் தலைமேல் ஏதோ பாரத்தை வைத்தமாதிரி இருந்தது... சிகரெட் குடிக்கனும் போல இருக்குது, யாரும் தரமாட்டிங்கறாங்க... எங்க அம்மாகிட்ட கேட்டேன் அழுவுது எல்லா ஏன்? அழுவுறாங்க... நான் ஏன் அடிக்கடி ஜிங்கிடிஜிங்கான்னு... சொல்றேன் செல்வி நல்லாருக்கா... என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க ஜிங்கிடிஜிங்கா....அண்ணே ஒரு பீடி இருந்தா கொடுங்கண்ணே....ஜிங்கிடுஜிங்கா.....வாத்தியார் பையன் சுரேசு எனக்கு பீடி வாங்கிக்கொடுத்தது... நாலு இட்லி சாப்பிட வாங்கிக் கொடுத்தது இரண்டுதான் சாப்பிட்டேன் இரண்டு செல்விக்கு வேணும்மல்ல செல்வி மகன்..இல்லை...இல்லை...என் மகன்.....சாக்லெட் வாங்கி கொடுக்கனும், இப்போதெல்லாம் இரண்டு பேரையும் பார்க்கவே முடியலை ஏன்? ஜிங்கிடிஜிங்கா....

..........................
என்னது என் கதையா? சொல்லறதா...கேட்டுக்க.... ஆனா..
சாயந்திரம் கோட்டர் வாங்கி கொடுப்பியா? 

...........................

வாங்கி கொடுக்கிறியா சரி அப்ப சொல்லுகிறேன் கேட்டுக்க....

அந்த சந்திரன்,கெட்டதும் பெண்ணால.....அந்த இந்திரன் கெட்டதும்....பெண்ணால......



(தலையில் அடிபட்டு காதில் இரத்தம் வந்ததால் மனநோயாளியாகப் போனார் ஜெ....அவரே சொன்ன கதை அவர் பார்வையில்... வாத்தியார் பையன் சுரேசு நான்தான்)


கதைகள் தொடரும்.....



Read more...

படம் பார்த்து கதை சொல்...

>> Monday, November 28, 2011



ஏம்பா ஆட்டுக்கால் பாயா இருக்கா?

எங்க ஆயா வேனா இருக்கு கூட்டிட்டுபோறியா


சரக்கு ஓவாராயிச்சோ.....


எனக்கு நாக்குல சனி அதான்


பஸ் கட்டனம் ஏறிருச்சு...சைக்கிள் ஓட்டிப்பழகறேன்...


கெய்யால டாஸ்மாக் சரக்கு போதையே இல்லை
பாரின் சரக்க சீக்கிரம் கொண்டு வாங்கடா....


ஸ்கூல்ல எல்லாரும் திட்ராங்க Fannyன்னு...


நானும் ரொம்ப நேரமா படிக்கிறேன்......சரத்குமார பற்றி
நியூஸ் ஒன்னு கூட இல்லை


மக்கா நிறைய ஜோக்குக்கு சிரிக்கிற மாதிரியே எத்தனை நாளைக்கு
நடிக்கறது


யோவ் எந்த பண்ணாடையா கண்ணாடிய பின்னாடி மாட்னது
இங்க தான் ஒரு வடை வெச்சேன்....


நான் இப்பிடியே போறத விட டூவீலர்ல போறது கஸ்டம்


இந்த வாகனமும் குடும்பஸ்த்தனும் ஒன்னு...


ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு கடீசீல என் மூக்கை
கடிச்சிட்டியே....


லவ்ல நாங்க பிசி


ஆமை குஞ்சு...அவிச்சு வச்சிருக்கு


இந்தப்படம் எந்த தியேட்டர்ல ஓடிச்சு...

திஹார் மல்டி காம்ப்ளக்ஸ்ல....


இது இப்ப ஓடிட்டு இருக்கற படம்


கரைக்டா கண்டுபிடிச்சிட்டிங்க சிபியோட பூனைதாங்க....


உப்பை தின்னியல்ல ஓட்டு போட்டு
தண்ணி குடிக்கனும் தமிழா!!


நல்ல வேளை நாம மனுசனா பொறக்கல.....


கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....


டேய் தம்பி ஒன்னுக்கடிக்காதடா குறி பார்த்து சுட முடியாது...
தெரியும் அதா அடிக்கிறேன்


காப்பி வித்......யாரோ?


என் செல்லம்ல..... தங்கமல்ல....ஓட்டை மட்டும்
போட்டுட்டு வா...நீ..பிரியாணிதான்..


இங்க என்ன சூட்டிங்கா நடக்குது...?


யோவ் பால் விலை ஏறுனதுக்கும் நான் மரம்
ஏறுனதுக்கும் சம்மதம் இல்லைய்யா...


ஓவர் பாரம் ஏத்தினா இப்படித்தான்
ஓவரா ஓட்டு வாங்கினாலும் இப்படித்தான்...

ரைட்டு


அடடடா.....


பகைக்கு உதாரணமா பூனையும் நாயும்ன்னு யாருய்யா சொன்னது
மலையாளியும் தமிழன்னு செல்லுங்கப்பா....

இந்த படங்கள் கூகுலிருந்து பெறப்பட்டது ஒன்று மட்டும் எங்க கைவண்ணம்
கண்டு பிடிப்பவர்களுக்கு 850 ரூபாய் மதிப்புள்ள BLOGGER T SHIRT FREE
-----------------------------------------------------------------------------------------


Read more...

நீயும்....நானும்.....யாகுவும் யாராகியும்..!

>> Sunday, November 27, 2011

ஓடை ஒரு வழிப்பாதையில்
தனியாக நீ போகையிலே
தாவி முன் நின்று காதலுரைக்க
முடியவில்லை....

ஆள் யாருமற்ற வேளையில்
என் தேவி நீயென....
கூவி விளிக்க முடியவில்லை....

நீன்டு கிடக்கும் நெடுஞ்சாலையில்
ஆசை தீர நெடுநேரம்
பேசிச்செல்ல..இடமில்லை...

கூட்டத்தில் நான் வரும் பொழுது
என்னை மட்டும் நீ பார்க்கும் போதும்
உன்னிடம் பேச எனக்கு சக்தியில்லை...

தூது போக அன்னம் வேண்டாம்
ஒரு அனிமேசன் காகம் போதுமே
அதற்க்கும் கூட என் மொழி
புரியவில்லை....

என்னவள் வரும் போது
கனைக்கும் சிரிக்கும் பிராணிகளை
வாய்திறந்து திட்ட திரானியில்லை...

கடற்கரைக் காற்றில்
என் மடியில் நீயிருக்க...
உன் கற்றைக் கூந்தலை
கலைத்த காற்றினை
வசைபாடி கவிதையெழுத...
நீ விமர்சிக்க... எனக்கு
உரிமையில்லை....

குறைந்தது ஒரு முத்தம் தந்திட
எனக்கு வழியுமில்லை
இணையத்தில் பழகி
இதயத்தில் இடம் பிடித்த
என்னவளே...எப்போது
வருவாய்...என் ஆசை
நிறைவேற்றிட...



(இந்த கவிதை முற்றிலும் கற்பனையானது இணையத்தில் காதலிக்கும் காதலர்கள் சில விசயங்களை இழக்கிறார்கள் என்று
சிந்தித்தபோது தோன்றியது நான் நல்லவனுங்க....)

Read more...

தில்லாலங்கடி பொண்ணு ஏமாந்த பையன்

>> Saturday, November 26, 2011


காதல் கதைகள்....





அன்புள்ள.. என் இனிய நண்பர்களே! இதில் வரும் கதைகள் கற்பனையல்ல நிஜம்!! நம் வாழ்க்கையில் சந்தித்து இருக்கலாம்! செய்திதாள்களில் படித்துஇருக்கலாம்! யாரோ கூறியதை கேட்டு இருக்கலாம்! இப்ப நாம பார்க்க போகின்ற கதை..' ஒரு சின்னபெண் உற்றார்,உறவினரை மட்டும் ஏமாற்றாமல்
மணமகனான தாய்மாமனை ஏமாற்றியது அவர் என் நண்பர்.

ராம் மிகவும் சிரமப்பட்டு சுயதொழில் மூலம் உழைத்து, வீட்டைகட்டி தங்கை திருமணத்தினை தனியொருவராக சிறப்பாக நடத்திமுடித்த பொறுப்பான எந்த கெட்டபழக்கம்இல்லாத ஒரு நல்ல பையன், அவருக்கு திருமணம் நடத்த அவர்களின் பெற்றோர் ஏறாத கோவில் இல்லை, ஜோசியர் இல்லை, செய்யாத பரிகாரம் இல்லை, எங்கேயும் பெண் அமையவில்லை, அதனால் அவர்கள் நெருங்கிய உறவினர், ராமின் அத்தையின் மகள் வினிதாவின் ஜாதகத்தினை பார்த்தபோது பொருந்திவர திருமண ஏற்பாடு நடந்தது.

வினிதா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார் திருமணம் உடனே வேண்டாம்! நான் கல்லூரியை முடித்துவிடுகிறேன் பிறகு வைத்துக்கொள்ளலாம் எனக்கூறவும், வீட்டாரும் சரியென்று ஏற்றுக் கொண்டார்கள்.

ராம் வினிதாவுக்கு மொபைல் ஒன்றைவாங்கிக்கொடுத்தார், இருவரும் ஜாலியாக ஊர் சுற்றினார்கள் போன் பில் ராம் வினிதாவுக்கு மட்டும் மூவாயிரம், நாலாயிரம், கட்டினார், சுடிதார் மட்டும் இரண்டாயிரத்திற்கு மேல்தான் வாங்கி கொடுத்தார், திருமணத்திற்க்காக மண்டபம் பார்த்தாகிவிட்டது பத்திரிக்கை அடித்து ஊரெல்லாம் கொடுத்தாகிவிட்டது பட்டுபுடவை மட்டும் பதினைந்தாயிரத்திற்கு பொண்ணுக்காக ராம் தேடி தேடி ஒவ்வொன்றாய் காதலுடன் செய்தார்.

பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தா பற்றிக்கொள்ளுமே அதுபோல எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் சினிமா பார்த்துக்கொண்டு வருகையில் வண்டி பஞ்சராக ஒரு இரவு உறவினர் வீட்டில் தங்கியபோது உணர்ச்சி வசத்தில் இருவரும் உறவும்வைத்துக்கொண்டார்கள், இத்தனைக்கும் வலிய கட்டாயப்படுத்தி உறவுகொண்டது வினிதாதான், காதலுடன்,காமமும் கைகோர்த்துக்கொள்ள எப்படா திருமணம் நடக்கும் என ஏங்கினார் ராம்.

திருமணத்திற்கு ஆறு நாட்கள் இருக்கும் சூழ்நிலையில்... ராமின் செல்லுக்கு வினிதாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.. "ஸாரி ராம்" என்று எதற்க்காக இது என குழம்பிய ராம் வினிதாவின் செல்போனுக்கு போன் செய்தான் வினிதாவோ போனை எடுக்கவேயில்லை, என்ன பிரச்சனையோ? என்று வினிதாவின் வீட்டுக்கு சென்றான் அங்கு அனைவரும் அழுதுகொண்டு இருந்தனர்.

என்னாகியது? என்று தன்மாமாவிடம் வினவினான்

நம்மளையெல்லாம் ஏமாத்திட்டு போயிட்டாளுப்பா சண்டாளி என அழுதார்...
என்ன ஆச்சு விவரமா சொல்லுங்க....

மாப்பிளை அவ கல்லூரியில் ஒருவனை காதலித்து இருக்கிறாள், மூன்றாம் ஆண்டு முடிந்தவுடன் திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று இருந்திருக்கின்றார்கள் அதற்க்குள் நிறைய வரன் தேடி வர எங்கே திருமணம்
முடித்துவிடுவார்கள்... என பயந்து உன்னை திருமணம் செய்வதாக சம்மதித்து படிப்பை முடித்து விடடாள், காவல் நிலையத்தில் இருந்து திருமணம் முடித்துக்கொண்டு எனக்கு போன் செய்கிறாள், நாங்க இப்பத்தான் சென்று தலைமுழுகிவிட்டு வருகிறொம் என்று அழுதார்.

ராம் நொந்து போனார் நம்மை ஒரு பெண் பகடைகாயாக பயன்படுத்திவிட்டாளே என அழுதார், அழுது என்ன பயன்? கவுரமான அந்தஸ்த்திலிருக்கும் ராம் ஒரு தொழிலதிபர், திருமணம் நின்று போனால் யாரும் மதிக்க மாட்டார்கள், கேவலமாக எதிரிகள் பேசுவார்களே என புலம்பினார்.... கவலை வேண்டாம் அதே தேதியில் பத்திரிக்கை கொடுத்ததுகொடுத்ததாக இருக்கட்டும் வேறுபெண்ணைப்பார்த்து திருமணம் முடித்து விடலாம் என நண்பர்கள் கூறினார்கள், அதன்படியே ஒரு புரோக்கரை பார்த்து நிலைமையை கூறி பத்தாயிரம் பணத்தைக் கொடுத்து கூடவே ஒரு காரும் அனுப்பி தேடகூறினோம், புரோக்கரும் ஒரு மணிநேரத்தில் நல்ல தகவலோடு வந்தார் 

ஒரு கிராமத்தில் மாப்பிளைக்கு வலிப்பு நோயிருப்பதையும், மறைத்து அதுவிமில்லாமல் உடல்உறவும் கொள்ளக் கூடாது என்கின்ற மருத்துவர் கூறியதையும் மறைத்து, பிறகு அந்த பெண்ணின் உறவினர் கூறியதால் திருமணம் நின்று போயிருந்த சுதா என்கின்ற பெண்ணை புரோக்கர் கூறினார், அதேதேதியில் திருமணம் நடந்தது வினிதாவைவிட சுதா படிப்பில்லை என்றாலும் குடும்பத்தை நிர்வாகிப்பதில் திறமை மிக்கவராகும் அன்பான ஒரு மனைவியாகவும் இருக்கின்றார் அவர்கள் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம்

இந்த கதையில் வினிதாவின் நிலைப்பாடு என்ன? காதலனுடன் கை கோர்த்து இந்த கபடநாடகம் ஏன் நடத்தவேண்டும்? தன்னுடைய படிப்பும் முடியவேண்டும்! காதலனையும் கைப்பிடிக்கவேண்டும்! ராமுடன் கொண்ட உடல்உறவு அவளின் ஆசைக்கு தன்னையறியாமல் உதவியதுக்கு பரிசா?இதற்க்கு பெயர் காதலா வேறுபெயர் அதை செல்லவிரும்பவில்லை... மொத்தத்தில் "கற்பு" என்பது சிலருக்கு சும்மா...! சும்மாவுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது, அதுபோலவே....நேர்மையாக ராமிடம் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினால் அவனே திருமணம் முடித்துக்கொடுப்பானே
அது மாதிரியான கேரக்டர்தான் ராம், ஆனால் ஜாலியாக ராம் பணத்தில் காதலனுடன் போன் பேசமுடியாது வேண்டியஉடை கிடைக்காது உயர்தர உணவகங்களில் உண்ணமுடியாது இதற்க்கு உலகின் பழமையான தொழில்
செய்பவர்கள் மேல்.... 



டிஸ்கி : விதி யாரை எங்கு சேர்க்கவேண்டுமோ! அங்கு சேர்க்கும்!!

கதைகள் தொடரும்.....


Read more...

கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....

>> Friday, November 25, 2011




வெளியூரில் இருந்து மூன்று நண்பர்கள் ஒரு கல்லூரியில் படிக்க வருகிறார்கள், ஒரு வீடு எடுத்து மூவரும் தங்கிக்கொள்ளலாம், வாடகையை மூன்றாக பங்கிட்டுக்கொள்ளலாம்..' என ஒரு புரோக்கரை பார்க்கின்றார்கள் அவரும் ஒரு வீட்டைக்காட்டுகிறார், வீடு மூவருக்கும் பிடித்து போக.. முன்பணமாக ஆளுக்கு 100 போட்டு, ரூ300 தருகிறார்கள். 

புரோக்கரும் வீட்டுஉரிமையாளரிடம் சென்று முன்பணத்தைக் கொடுக்கிறார் அவர் 50 ரூபாய் வைத்துக்கொள் 250 மட்டும் போதும் என கொடுக்கின்றார், புரோக்கர் திரும்பி வந்து இந்தாங்க வீட்டு உரிமையாளர் 250 மட்டும் போதும் என கூறிவிட்டார் மீதியை கொடுக்கின்றார், மிகவும் நன்றி வீடு பிடித்துக் கொடுத்தமைக்கு என்று அவருக்கு 20.00 ரூபாய் தருகிறார்கள், மீதி 30 ரூபாயை மூன்று பேரும் பிரித்து ஆளுக்கு 10 ரூபாயாக வைத்துக் கொள்கிறார்கள்.

கணக்கு எழுதும் போது குழப்பம் வருகிறது எப்படி? ஆளுக்கு 90.00ரூபாய் செலவு மூன்று பேருக்கு சேர்த்து 270.00 ரூபாய் புரோக்கருக்கு 20.00ரூபாய் மொத்தம் 270+20=290 மீதி 10.00 ரூபாய் எங்கே?


Read more...

சீனியர் சூப்பர் சிங்கர் டாப் 3

>> Wednesday, November 23, 2011









இந்த கேலிசித்திரத்தை வலைதளத்தினர் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் தேவைப்படுவோர் மெயிலில் தொடர்பு கொள்ளவும்

Read more...

நூலகமும் என் நினைவுகளும்...

>> Saturday, November 19, 2011


"நூலகம் இல்லாத ஊரில் இருப்பது நரகத்தில் இருப்பது போன்றதாகும்”
ஏதோ அறிஞர் கூறியது நான் நூலகமே இல்லாத ஊரில்தான் பிறந்தேன், ஆனால்! படிப்பு ஆர்வம் எப்படி எனக்கு வந்தது, சிந்தித்து பார்க்கையில்
வியப்பாகத்தான் உள்ளது, 


நான் வாழ்ந்த சூழ்நிலை, படிப்பாளிகள் நிறைந்த சூழ்நிலை, நிலச்சுவானான என் தாத்தாவின் நண்பர் முதுகலை வரலாறு படித்தவர் அட வரலாறுதானே..! என எள்ளிநகையாடாதிர்கள் அவர் படித்தது "பிரிட்டீஸ்" அரசாண்டகாலத்தில், இப்போதைய ஈரோடு மாவட்டம், அப்போதைய கோவை ஜில்லா, ஆட்சியாளர்களால் பவானியை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள், அங்கு ஊராட்சிகோட்டையிலுள்ள ஒரு கோட்டையில் வரிவசூல்  செய்யப்பட்டது, பவானி நகரத்தின் அதிகாரியாக இவரை நியமனம் செய்தது வெள்ளைஅரசு, அவரது தந்தையான பெரியகவுண்டருக்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் பண்ணையம், நூறு ஆட்களுக்கு மேல் பண்ணையாட்கள், எம் மவன் படிச்சது பண்ண கணக்க பார்க்க வெள்ளைக்காரனுக்கு சலாம் போடுகின்றதுக்கில்லை.. என்று மிரட்டியதில் நியமன படிவத்தை கொண்டு வந்த தலையாரி ஓடியேவிட்டான், அவர்தான் எனக்கும் என் அண்ணனுக்கும் படிக்க கற்றுக்கொடுத்தவர் அவர் பெயர் யாருக்கும் தெரியாது சின்னவர் என்றால் தெரியும்.


கிராமத்து வயாதானவர்கள் சுவாரஸ்யமானவர்கள், எனக்கு பள்ளிபடிப்பில் துளிகூடவிருப்பம் இல்லை, ஓவியம் வரைவது, நாடகம் போடுவது,என்று சுற்றிக்கொண்டு இருப்பேன், என் தாயும்,தந்தையும் ஆசிரியர்கள் என்றால் நம்பமாட்டிர்கள்! ஆங்கிலம் என்றால் எட்டிகசப்பான எனக்கு தமிழ் பிடிக்கும் ஆனாலும் எழுத்துபிழையென்பது என்னால் திருத்தமுடியாது, 

சின்னவருக்கு ஒரு குணமுண்டு புத்தகம்,பத்திரிக்கை எதுவென்றாலும் யாராவது சின்ன பயல்களை படிக்க கூறி..! கண்மூடி வானொலி கேட்பது போல் கேட்பது அவருக்கு பிடிக்கும், அப்படி எனக்கு அறிமுகமானதுதான் தினதந்தி,தினமலர்,குமுதம்,ஆனந்தவிகடன்,மாலைமதி,ராணி,கிரைம்நாவல்,பாக்கட்நாவல் அதிலும் கல்கண்டு சுவையான பல செய்திகளைக் கொண்டது
ஆனந்தவிகடனில் வரும் அட்டைபட ஜோக், அதன்வண்ண ஓவியம் புத்தகத்தின் வாசனை மனசு சிலிர்க்கும் நினைவுகள் அவை..

கிரைம் நாவல்களிலும்,ஒரு சில இதழ்களிலும் வரைந்து கொண்டிருந்த அரஸ் ஓவியங்கள் என்னை மிக கவர்ந்தது எனக்கூறலாம், மாருதியின் பெண் ஓவியம் பெரும்பாலும் பெரிய கண்களும்! அழகானவையாக இருக்கும்,ஜெயராஜ் அவர்களின் கோட்டோவியம் "செக்ஸியாக" இருக்கும்,
மனியம்செல்வத்தின் வாட்டர்கலர் ஓவியம் கதை பேசும், சில்பியின் கோயில் ஓவியங்கள் நுணுக்கமானவை, ஆனந்தவிகடன் மதன் கார்டூன் வரைவதில் திறமையானவர் சரி சொல்லவந்தது என்ன அதைவிட்டுட்டு எங்கங்கோ போகிறோமே...

நான் படிக்கும் பள்ளிக்கு கிட்டதட்ட ஒரு ஐந்து கிலோமீட்டர் சைக்கிள் பயணம்தான் என் தாயின் மறைவுக்குபிறகு எங்களுடைய அம்மாவின் அப்பா தாத்தா வீட்டுக்கு வந்தோம், அங்குதான் படித்தோம், அது ஒரு அழகியகிராமம் உண்மையில் நகரம் படித்தவர்களை உருவாக்குகின்றது, கிராமம் கலைஞனை உருவாக்குகின்றது என்பது உண்மை, ஏரிகளும்,மீன்கள் துள்ளும் ஆறுகளும், வெள்ளந்தியான மனிதர்களின் சிலேடை பேச்சுகளும் பல கதைகள் சொல்லும், கெட்டவார்த்தைகளை சாதரணமாக பேசும் கிராமத்துமக்களின் நேர்மை! நாகரிகமாக பேசும் நகரத்தில் உள்ள ஒரு சிலருக்கு இல்லை...

பள்ளிவிட்டு வரும் வழியில் ஒரு நூலகம் இருக்கின்றது, எனக்கு தெரிந்து அன்பாக பேசுனதை பார்த்திராத ஒருவர்தான் நூலகர், அதுவும் அவருக்கு பள்ளி மாணவர்கள் என்றால் எரிந்தெரிந்து விழுவார், ஏன்? என்று கேட்டபோது...!அப்பொழுது கேட்கமுடியாது! நான் பெரியவன் ஆனதும் ஒருமுறை கேட்டேன்
அவர் கூறியதை கேட்டதும் அதிர்ந்து விட்டேன், இந்த பசங்க அறியபுத்தகத்தை படிக்க கொடுத்தா அதுல உள்ள படங்களுக்காகவும்,முக்கிய குறிப்புகளுக்காகவும் சில பக்கங்களை கிழித்து எடுத்துவிடுவார்களாம், பின்னால் படிப்பவருக்கு பயன் இல்லாமல் செய்துவிடும் என்றார்

உறுப்பினராக சேருவதற்கு 15 ரூபாய் கட்டணத்தை நான் ஒவ்வோரு பைசாவாக சேர்த்து மூன்று மாதம் கழித்து உறுப்பினராக சேர்ந்தேன், கலைஞரின் பொன்னர்சங்கர்,சாண்டில்யனின் சரித்திரநாவல்கள், பாலகுமாரனின் தண்ணீர்த்துறை,இனிது...!இனிது...!காதல்...!இனிது.! இலக்ஷ்மி அம்மாளின் குடும்பகதைகள் நம்மை கதைகளத்திக்கு அழைத்துச்செல்லும்.

 ஜீனியர் விகடனில் தொடராக வந்த சுஜாதாவின்மீண்டும் ஜீனோ...,"ஜீனோ" நாய் கேரக்டர் எத்தனை பேருக்கு ஞாபகம் உள்ளது, கமலை வைத்து சங்கர் ரோபோ எடுப்பதாக செய்திகள் வந்த போது கண்டிப்பாக ஜீனோ கேரக்டர் வரும் "விஷுவலில்" பார்க்கலாம் என்று இருந்தேன் படம் டிராப் ஆகிவிட்டது! 
ரஜினி நடித்த எந்திரன் மீண்டும் ஜீனோவோடு ஒப்பிடும்போது ஒன்றுமேயில்லை...சுஜாதாவின் கதையை அப்படியே எடுத்திருந்தால் படம் முடிந்திருக்காது என நினைக்கிறேன்... அதற்க்கு ஜேம்ஸ் கேமரூனால் மட்டும் முடியும் இந்திய அளவுக்கு ஓகே...

தினமும் சைக்கிளை எடுத்துக்கொண்டு நூலகம் சென்று படித்துவிட்டு வந்தால்தான் மனம் நிம்மதியாக இருக்கும், சிறிது நாட்களில் எங்க ஊருக்கு
நூலகம் வந்தது ஆனால் நான் அங்கு இல்லை, திருப்பூர் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டேன்.

நூலகம் என்பது தாயின் மடிபோன்றது, அமைதியான சூழல் விரும்புகின்ற புத்தகத்ததை படிக்கும் வசதி, இன்றைய தலைமுறைக்கு நூலகத்தின் அருமை தெரியவாய்ப்பில்லை ஒரு சிலர் மட்டும் படிக்கின்றார்கள்,இனையத்தில் தேடினால் எதுவும் கிடைக்கின்றது, அம்மையார் அவர்கள் நூலகத்தை மாற்றியமைக்கு இன்றைய தலைமுறையிடம் பெரிய எதிர்ப்பு எழவில்லை! இதுவே 80 க்கு முன் என்றால்...ஒரு மாபெரும் எதிர்ப்பு அலை ஓங்கியிருக்கும்! என்ன கூறுகிறீர்கள் என் வயதையொத்த நண்பர்களே எனக்கு 35 வயதாகிறது.

Read more...

பெட்ரோல் விலை கூடிப்போச்சு...டும் டும் டும்... அம்மா சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும்...(கார்ட்டூன்)

>> Friday, November 18, 2011



Read more...

காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II

>> Thursday, November 17, 2011


"யாரும் மனோ! வருத்தம் கொள்ளமாட்டார்கள்”


(இந்த பதிவு என் இனிய நண்பர்கள் விக்கியுலகம் விக்கி & அட்ராசக்க..சிபி 
இருவருக்கும் டெடிகேட் என்பதை கூறிக்கொள்ள கடமை பட்டிருக்கின்றேன் யுவர்ஆனர்)





-------------------------------------------------------------------------------------------------
ஆமா...கையில் அறிவாளோடு "நாஞ்சில்மனோ"அண்ணாச்சி," யாரைத் தேடிக்கிட்டு இருக்கின்றார்.?!

நம்ம மக்கு மன்னன், மனோஅண்ணாச்சியோட பதிவுல இருந்த "டப்பா டப்பா வீரப்பா" பாடலை கவிதைன்னு நினைச்சு மனோஅண்ணாச்சிக்கு "பொற்கிழி" கொடுத்திருக்கிறாரு, உடனே பக்கத்துல இருந்த சிபியும்,விக்கியும்
மன்னா அது குழந்தைப்பாடல், என்று போட்டுகொடுத்துட்டாங்க..!அதான்....தேடிக்கிட்டு இருக்கின்றார்
-------------------------------------------------------------------------------------------------
என்னய்யா இது நம்ம சூர்யஜீவா அண்ணன் எப்பவும் கோவப் படமாட்டாரு அரசர கன்னாபின்னான்னு திட்டி விட்டு போகிறார்

ஓ..அதுவா...மன்னர திட்டி ஒரு பதிவு போட்டிருந்தார், அதை படிக்காம கூட பிண்னூட்டத்தில் "சூப்பர் நல்லாயிருக்குன்னு" போட்டிட்டார் அதான் கான்டாயிட்டாரு
-------------------------------------------------------------------------------------------------
ஏன்? நமது மன்னர் அண்டை நாட்டு மன்னர் FOOD ஆபிசரை பார்த்து இந்த நடுங்கு நடுங்கறார்...

வீம்புக்குகென்று ஒரு முறை நம் மன்னர் அவர் நாட்டின் மீது படையெடுத்துள்ளார், ஆனால் தோல்வியடைந்து, புறமுதுகு காட்டி ஓடி வந்த, நம் மன்னரை விடாமல் துரத்திவந்து பெல்ட்டால் அடிபின்னிவிட்டார்,
ஒரு மாதமாக குப்புறப்படுத்துகிடந்தார், அதான் நம்ம மன்னருக்கு அவரைக்கண்டாலே பயம்...
---------------------------------------------------------------------------------------------------
மன்னா ஏன்... கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்துள்ளீர்கள்?

அமைச்சரே நம்ம கருன் வாத்தியார்கிட்ட டுயூசன் படிக்கலாம்ன்னு என்னையும் சேர்த்திக்குங்க என்றேன்
நான் முதியோர் வகுப்பு எடுப்பதில்லைன்னு கூறிவிட்டார்
-------------------------------------------------------------------------------------------------
மன்னருக்கு என்ன ஆச்சு இரண்டு நாளா லேப்டாப்பை தொடல...

அதையேய்யா....கேட்குற நம்ம தமிழ்வாசி பதிவை படிச்சிட்டு சும்மா வரவேண்டியதுதானே.. நீங்க தமிழ்வாசின்னா! நாங்க என்ன இந்திவாசியான்னு! நக்கலா கருத்து போட்டிருக்கிறார், இனி பதிவுபக்கம் வந்தே...சானிய கரைச்சு மூஞ்சில ஊத்திருவேன்னு தமிழ்வாசி திட்டி ரீப்பிளே போட்டிருக்கின்றார், அதான் தலைவர் அப்செட்...
------------------------------------------------------------------------------------------------------------


முதல் பாகம் படிக்காதவர்களுக்கு




Read more...

காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள்

>> Tuesday, November 15, 2011




மகாராஜா ஏன் சிபி'யை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்?

கில்மா பட விமர்சனத்தில மாகாராணி படத்தை போட்டிருக்கின்றார் அதனால்தான்
------------------------------------------------------------------------------
மிஸ்டர் விக்கி நீங்கள் மன்னர் அந்தபுற படிக்கட்டில் தவறி விழுந்து தாவாகட்டை பெயர்ந்து விழுந்ததை கிச்சிளிக்காஸ் என்று வெளியிட்டதுக்கு தண்டனையாக ஆப்பிரிக்க வண்டை வாயில் போட்டு நீங்கள் நெளிவதை வீடியோ எடுத்து விக்கிளிக்காஸ் என்று மன்னரின் பதிவில் போட உத்தரவிடுகிறேன்...
----------------------------------------------------------------------------------------
அரசே எந்த தவறும் செய்யாத அப்பாவி வந்தேமாதரம் சசியை ஏன் இருட்டு கொட்டடியில் அடைத்துவிட்டீர்கள்

பின்ன என்னயா காப்பி பேஸ்ட் செய்யமுடியாதபடி HTML கோடு போட்டு பதிவு போட்டு என்னை பதிவு போடமுடியாம பண்ணிட்டார் அதான்
----------------------------------------------------------------------------------------
மன்னா எதற்காக கிடங்கில் இத்தனை HIT பூச்சி மருந்து

எந்த பதிவ பார்த்தாலும் HITS வேண்டும் HITS வேண்டுமென்று கூறுகிறார்கள் அதான்
-----------------------------------------------------------------------------------------
மன்னா ஏன் அரண்மனை வைத்தியர் நடுங்கிக்கொண்டு நிற்கிறார்

நம்ம கனினியில வைரஸ் வராமல் இருக்க ஆன்டிவைரஸ் போடனுமாம் போடுய்யாங்கற ஒரு மணி நேரமா முழிச்சிட்டு நிற்கின்றார்
------------------------------------------------------------------------------------------
இந்த நிரூபனை பார்த்தீர்களா அமைச்சரே என் வீரத்தைப்பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன் எழுத்து பிழை ஏதாவது உண்டா என பார்க்கக் கூறினேன் கட்டுரையின் முடிவில் யுடான்ஸ் என்று ஒரு லோகோவை வைத்து விட்டு சென்றுவிட்டார் என் வீரம் பொய் என்றல்லவா ஆகிறது...

அய்யோ மன்னா அது ஒரு திரட்டி
--------------------------------------------------------------------------------------------------------
அமைச்சரே சீக்கிரம் வாருமய்யா இங்க பாருங்கள் ராஜபாட்டை ராஜா ஒரு படத்தை பதிவில் போட்டு இருக்கிறார் பார்க்கவே கோரமாக பயமாக இருக்கின்றது

மன்னா மன்னிக்கவும் அது தாங்களுடைய புகைப்படம்தான்..
----------------------------------------------------------------------------------------------------------
மன்னா ஏன் கோபமாய் இருக்கின்றீர்

பின்ன என்ன ராணி நான் இந்த நாட்டுக்கே அரசன் என் பெயரை போடுவதுக்கு பதில் இனையத்துல எங்க பார்த்தாலும் கோகுல் மனதில்..கோகுல் பெயரையே போட்டிருக்கிறார்கள்

மன்னா..மன்னா அது கோகுல் அல்ல கூகுள்...
-------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே எத்தனை நாளைக்குத்தான் அரசியல்வாதிகளையும் சினிமா நட்சத்திரங்களையும் கலாய்ப்பது நாம என்ன குறைஞ்சா போயிட்டம் நம்ம நண்பர்களை நாமதான் கலாய்க்கனும் யாராவது நண்பர்களுக்கு இந்த பதிவு மன வருத்தத்தை அளிக்கும் என்றால் தெரிவிக்கவும் பதிவு நீக்கப்படும் மன்னிப்பும் கேட்கப்படும்

Read more...

செவ்வாய்கிழமை சிரிக்க....சிரிக்க....சிரிப்பு வரல நான் பொருப்பு இல்ல

>> Monday, November 14, 2011




ஏம்பா இந்த தலைவர் பண்ணினது ஓவர்தான்..!

என்ன சொல்ற...

ஆமாப்பா தெருவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பெயர் வைச்சிருக்காங்கன்னு
பெயர்த்து எடுத்து சென்னையில இருந்து திருச்சியில கொண்டு வைக்கசொல்லி உத்தரவுட்டிருக்காரு...
-------------------------------------------------------------------------------------------------------------

என்னப்பா இது மருத்துவமனைக்கு நடுவே தண்டவாளம் போகுது

உனக்கு தெரியாதா இது போன மாசம் வரைக்கும் இரயில் நிலையமா இருந்தது
இந்த மாசம் மருத்துவமனையாக்கிட்டாங்க....
--------------------------------------------------------------------------
ஏங்க நம்ம புள்ளைய பாருங்க கொலுபொம்மையை மாத்தி மாத்தி வைச்சிட்டு
இருக்குறா

விடுடி வருங்காலத்தில CM ஆயிடுவா....
---------------------------------------------------------------------------
நம்ம தலைவரோட பையன் அவருமாதிரியே இருக்கான்..!

எப்படிச் சொல்ற...

ஆசிரியர் மதிப்பென் குறைவுக்கு விளக்கம் கேட்டதுக்கு தமிழர்கள், தமிழறிஞர்களே, சொல்லட்டும் அப்படிங்கறான்...
----------------------------------------------------------------------------


சார் கல்யாணத்திக்கு வந்த உங்க பையன் விஜயகாந்த் ரசிகரா இருக்கலாம் அதுக்காக இப்படியா?

என்ன சார் என்ன ஆச்சு?

நடப்பது முதலிரவு அங்க வந்து எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க அப்படிங்கறான்
-------------------------------------------------------------------------------------------

Read more...

குழந்தைகள் தினவிழா...

>> Sunday, November 13, 2011


Thank you google



அம்மா கேளாய்...! அம்மா கேளாய்..!
இது என் தாலாட்டு- உன்னை
உறங்கவைப்பதற்கு அல்ல!
மரத்து போன உன் உணர்வுகளை
உசுப்பியெழுப்ப கேளாய்....!

குழந்தைகள் யாவரும்'
"கற்க கசடற" என்பது
வள்ளுவர் வாக்கு,
நானதை தூக்கியெறிந்து விட்டு
பின்னலாடை தொழிலகத்தில்
பிசிறு வெட்டியே...!
பின்னலாகிப்போனேன்!

பல விதமான உடைகள்
உலவுமிடத்தில் வேலை...!
எனக்கு மட்டும் ஏன் கந்தலாடை?
நெய்பவனுக்கு கோமணம்!
என்பது சீருடையல்ல...
அவனின் வறுமை...வறுமை...

"கந்தலானாலும் கசக்கிகட்டு"
எங்கே கசக்குவது?முடியவில்லை
தண்ணீரும் விலை கொடுத்து
வாங்கும் கேவலம்!
நம் நாட்டில் மட்டும் உண்டு
அப்படியே கசக்கினாலும்
என் உடை வேஸ்ட்க்கும்
போகாது...போகாது...

தந்தையின் வருமானம்
தமிழகத்தின் அவமானம்
மதுக்கடைக்கு...
அம்மாவின் சொற்பம்
கந்துவட்டிக்கு...
என் பற்று சோற்றுக்கு...
பிறகு என்ன புத்தாடை
அது வெறும் நிராசை...
ஆகவே...அம்மாக்களே
குழந்தைகளை படிக்க
வையுங்கள்...

------------------------------------------------------------------------------------------------------------
இந்த குழல் ஊதும் கண்ணனையும் ரசியுங்கள்




Read more...

கள்ளக்காதலால் ஒருவன் ஞானியாக முடியுமா?



து என்ன கேள்வி? கள்ளக்காதல் வைத்திருந்த திருவண்ணாமலை சாமியார் தெரியும் கள்ளக்காதலால் ஞானியானது யார்? கதை கேளுங்கள்

"உஜ்ஜைனி" என்கிற நாட்டை ஒரு அரசன் மிகச்சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தான் யார் கண்பட்டதோ தெரியவில்லை நல்ல அரசனான அவன் அடங்காப்பிடாரியான ராணியைக் கொண்டிருந்தான் அவள் பேரழகி கண்டவுடன் காமம் கொள்ளவைக்கும் அதரங்களையும் பெரியகண்களையும் இடை சிறுத்து சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் புறத்தின் அழகால் வசீகரித்த இராணி அகத்தில் சிறந்தவள் அல்ல அழுக்கு நிறைந்தவள் அவளிடம் அடங்கியிருப்பவர்கள் வாழமுடியும் எதிர்ப்பவர்களின் தலை உடம்பில் இருக்காது அவள் இத்தனைக்கும் உயர்குடி பெண்ணும் அல்ல தாசிகுலத்தை சார்ந்தவள் காமத்தில் திளைக்க துணைதேடினான் அரசன்.." இல்லறத்தாளை தேடாமல் இழுத்தவுடன் படுக்கும் வேசியை இராணியாக்கியதின் விளைவு மக்களின் நிம்மதி போனது

மதியில்லாத மன்னனிடம் அறிவுரை கூறலாம்! மங்கையின் போதையில் இருப்பனிடம் எப்படி கூறுவது? அறிஞர்கள் தவித்தனர் அந்த சூழ்நிலையில்... 

தென்னகத்திலிருந்து வந்தார் ஒரு சாமியார் கோவணம் கையில் கரும்பு உடலெங்கும் திருமன் திருவாயில் எப்பொழுதும் உச்சரிக்கும் நமச்சிவாயம் நமச்சிவாயம் என்கின்ற மந்திரம்.

அரசர் வருகிறார் அரசர் வருகிறார் என்று கூவிக்கொண்டு ஓடினான் சேவகன் மக்கள் ஒதுங்கி நின்றனர் நமச்சிவாயத்தை உச்சரிக்கும் அடியவருக்கு நிலையில்லா வாழ்வை கொண்ட மனிதனை மன்னனான அவனின் வருகை சலனப்படுத்தவில்லை சஞ்சலப்படுத்தவில்லை நடுரோட்டில் நடந்து வந்தார்

காவலர் பிடித்து தள்ளினர் அசையவில்லை அஞ்சவுமில்லை அரசன் பரதேசியைப்பார்த்தான் யார் நீ? வினவினான்

நீ...மானிடன் நான்...மானிடன் உமக்கு தெரியாதா? கண்களில் கோளாறா?

ஆத்திரம் தலைக்கேற எங்கிருந்து வருகிறாய்?

தாயின் கருப்பையிலிருந்து!

எங்கே போகின்றாய்?

இறப்பதக்கு!

இங்கே என்ன வேலை போய் சாகவேண்டியதுதானெ!

ஹஹஹ நீ..மட்டும் சாகாமல் வாழப்போகிறாயா?

ஒழுங்காய் பதில் சொல் கேட்பது யாரென்று தொரியுமா?

ஈசனை தவிர யாரையும் எனக்குத்தெரியாது

கடும் கோபம் கொண்ட அரசன் அவரை சிறையில் அடைத்தான்

மாலையில் அரசன் பரதேசிக்கு இவ்வளவு திமிரா? என சிந்தித்தவாறு
சிறைச்சாலை கொட்டிலுக்கு வந்தான் நான் கேட்கின்ற கேள்விக்கு சரியாக பதில் கூறிவிட்டாள் உன்னை விடுவித்துவிடுகிறேன் !"என்றார் அரசன்..

காமத்தைவிட சிறந்த ஞானம் உண்டா?

காமத்தை துறந்தவன்தான் ஞானம் பெறமுடியும்

நான் காமத்தினை படித்தவன் ஆண்மையில்லாதவன்தான் காமத்தை வெறுப்பான்

முட்டாள் நீ...காமத்தில் சிறந்தவன் என்றால் உன் மனைவி கோரமான குதிரைக்காரனுடன் ஏன் உறவு வைத்துக்கொள்கிறாள்

அரசனின் ஆத்திரம் அதிகமானது எங்கிருந்தோ வந்தவன் தன் மனைவியைக்கேவலமாக பேசியதும் மனதை கோபம் கொள்ள வைத்தது இவனை கழுவிலேற்றுங்கள் என உத்தரவிட்டார் அப்போது பாடினார்


கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்
தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை
எப்படி நானம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே

நீ இரவு அவள்தரும் எதையும் குடிக்காதே உறங்குவதைப்போல் நடி என்ன நடக்கின்றது என்று காலை சொல் என்றார் அவர்

"அந்த மூடனை இழுத்துச்செல்லுங்கள்" என்று உத்தரவிட்டு  வந்தவரின் மனம் அடியவரின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது இராணி பள்ளியறைக்கு வந்தாள் அவள் கொடுத்த மதுவை குடிக்காமல் உறங்குவதுபோல் நடித்தார் 

நள்ளிரவில் அவர் கூறியதுபோல் ராணிபக்கத்தில் இல்லை மெதுவாக எழுந்து குதிரை லாயம் பக்கம் போன அரசன் அதிர்ந்தான் முழுநிர்வாணமாய் அருவருப்பான குதிரைக்காரனுடன்  படுத்துக்கிடந்தாள் ராணி 

ஓடினார் சிறைச்சாலைக்கு அய்யா என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறியழுதார் கண்ணீர் விட்டார் நாடு பதவி அனைத்தையும் துறந்து வெறும் கோவணத்துடன் அடியாரின் சீடராய்சென்றார் அவர்தான்
பத்ரகிரியார் அந்த அடியவர் பட்டிணத்தார் எனும் திருவெண்காடர்

நன்றி : அர்த்தமுள்ள இந்துமதம் ஞானம் பிறந்தகதை, செவிவழி கேட்டல்


Read more...

முதல் காதல்

>> Friday, November 11, 2011


பதினெட்டு வயது இளமீசை துளிரும்
இனிய வசந்த கால வயது
இதில் இடம் மாறினால்
இருண்ட பள்ளத்தாக்கில்
இடரும் அபாயம் அதிகம்
இருந்தும் இடம் மாறினேன்
அது இனிமையான விபத்து
அதுதான் காதல்...

காதல்... என்கிற வார்த்தையை
உச்சரித்துப்பாருங்கள்
இந்தவயதில் தேனாய் இனிக்கும்
தவறு என சொல்லும்
மற்றவரை எரிச்சலோடு எரிக்கும்..!

எனக்கு வயது இருபது!
அவளுக்கு வயது பதினாறு!
எனக்கு பக்கத்து வீடு
என் வாலிபவயதில்
காதல் விதை தூவிய
"தேவலோக தேவதை"

முதன்முதலாய் "பாலகுமாரனின்"
தண்ணீர்துறையுள்ளதா? என்றாள்
என்னிடம் இருந்தது எடுத்துக்கொடுத்தேன்
மிகவும் நன்றி இதைத்தான்
தேடினேன் கிடைத்து விட்டது
இனி அடிக்கடி புத்தகம்
வாங்க வருவேன் என்றாள்
என் பெயரைக்கேட்டாள்
பற்றி எரியும் "பாஸ்பரஸாய்"
இருந்த என் மனதை
அவள் உரசிய வார்த்தையில்
பற்றி எரிந்தது நிசம்

பிரபஞ்சனையும், வைரமுத்துவையும்,
மு.மேத்தாவையும் அலசினோம்
நான் எழுதிய கவிதை
கவிதையாய்! இல்லையென்றாலும்
பொய்யாய் நிறைகூறி
ஊக்கப்படுத்தினாள்
அந்த தேவதை
என் படுக்கையில்
"நெருஞ்சி" முட்களாய்
அவள் நினைவுகள் 
குத்திக்கெண்டிருந்தன
அவளை சிந்திப்பதிலே
பொழுதும் போயிற்று....

காதல் அர்த்தம் என்ன?-நான்
அது நான்காவது வேதம்-அவள்
அதன் பலன் என்ன?-நான்
இரு மனங்களின் வேள்வி-அவள்
கேள்வியை நிறுத்திவிட்டு
அவள் கண்களைப்பார்த்தேன்
என்க்குள்ளே ஒரு வேள்வி எரிகிறது
உனக்கு தெரியுமா?
எரிகிறது சுட்டெறிக்கின்றது
அதை அறியாதவளா நான்...
அந்த சந்தன சிலை
என் மார்பில் சாய்ந்தது
இருவர் மனம் காற்றில்
லேசாகி மிதந்தது

நாங்கள் சுற்றாத இடமில்லை
பேசாத வார்த்தைகளில்லை
என்னை கடைசிவரை
காப்பாற்றுவாயா என்றாள்
இறந்தும் உன் பின்னே
வருவேன் என்றேன்

பச்சமலை அடிவாரத்தில்
அவள் வச்சதிருநீர் என்
கண்ணில் விழ துடைத்து விட
வந்தவளின் பெண் வாசம்
என்னை மயக்க இருக
அனைத்து கொடுத்த
முத்தம் முன்னூறு ஜென்மம்
எடுத்தாலும் மறக்காது

உடல் நலம் சீர்கெட்டு
படுக்கையில் நானிருந்தபோது
என்னருகிலமர்ந்து கண்ணீர்
விட்டாள் என் கண்மணி
அதன் சக்தியால்தான்
மீண்டுவந்தேன்

எங்களூர் ஆற்றங்கரையின்
ஈரக்காற்றில் அவள் மடியில்
நான் அவள் முகமோ என்னருகில்
முத்தங்கள் பறிமாறிக் கொண்டாலும்
காமத்துக்கு மட்டும் கடிவாளம் 
போட்டுக் கொண்டோம்

என் திறமை 
மத்தாப்பை பற்றவைத்த 
தீக்குச்சி என் காதலி
அவள் கால் கொலுசு
சங்கீதம் கேட்காமல்
எனக்கு பொழுது
விடியாது...

என் காதல் ராணி
படிக்கவேண்டும்
என்பதற்க்காக பல
"பாக்கெட் நாவல்களை"
வாங்கி "பாக்கெட் மணி"
காலியானது
அவளுக்கு கவிதை
பிடிக்கின்றது என்பதக்காகவே..!
கவிதை எழுத கற்றுக்கோண்டேன்

எங்கள் காதல் விவகாரம்
கிசுகிசுவாய் கசிந்து
ஊர் வாய் மெல்ல
அவலாகி அரைத்து
அவள்வீட்டாரின் காதுக்கு
அவசரமாய் சென்றது

உறவினர் வீட்டுக்கு
அழைத்து செல்வது போல்
அவளை அழைத்துச்சென்றது
அன்போடு அல்ல
வெட்டகொண்டுசெல்லப்பட்ட
ஆடென அறிந்தாள்
அதிர்ந்தாள் அதிர்ந்துஎன்ன
செய்ய புலிகூட்டத்க்கு முன்
மான்னென்ன செய்யமுடியும்
மஞ்சள் பூசிய புதுத்தாலியுடன்
திரும்பி வந்தாள் 
அவள் நினைவாக என்னிடம்
இருப்பது சில கவிதைகளும்
அவளின் முத்தங்களும்தான்



Read more...

குழந்தை தொழிலாளி

>> Thursday, November 10, 2011


[சில குழந்தை தொழிலாளிகளை தொண்டுநிறுவனம் மீட்கசென்றபோது சில
சிறுவர்களின் நிலைமை கொடுமையானது அவர்களின் வருமானத்தில்தான்
குடும்பமே மூன்று வேளை உண்கிறார்கள் தந்தையிழந்த நோய்வாய்ப்பட்ட
தாயிக்கு பதிலாக பணிக்கு வந்த குழந்தைகள் என மனதை உருக்குவதாய்
இருந்தது]


thank you google



சிறுவர் தொழிலாளியை
ஒழிப்போம் என்பதைவிட
அவர்களுக்கு பனிநேரம்
முடிந்தபின் பாடம் கற்பிப்போம்
ஆசிரியரை அந்த முதலாளியை
அமர்த்தச்செய்வோம்

அவனுக்கு புதிய தொழில்
முறைகளை புரிய வைப்போம்
கருத்திற்கு "காரல்மார்க்ஸையும்"
அகிம்சைக்கு "காந்தியடிகளையும்"
வீரத்திற்கு "பகத்சிங்கயும்"
புரியவைப்போம்
புன்னகைக்கும் கள்ளமில்லா
சிரிப்பில் "ஜாதியில்லா"
கல்வி கற்க வைப்போம்

புத்தன்,ஏசுவும்,முகமதுநபியும்
அன்பையே போதித்தார்கள்
மதவேற்றுமை வேண்டாமென
பிஞ்சு நெஞ்சில் பதியவைப்போம்
அவன் சமூகத்தில் மனிதனாய்
போற்றப்படவேண்டும்
சமூகவிரோதியாய்
தூற்றப்படக்கூடாது
இவர்கள் நம் நாட்டின்
வருங்காலத்தூன்கள்
அவை மன்னால் அல்ல
எஃகால் அமைக்கப்படவேண்டும்...

[இன்று குழந்தை தொழிலார்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது
நான் சொல்வது திருப்பூரில்,இந்த கவிதை முதலாளிகளுக்கு ஆதரவாக 
இருப்பதாக தோழர்கள் கூறினார்கள்]

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP