இயர் ஆப் ஸ்பெசல் மீல்ஸ் 2011 TO 2012

>> Tuesday, November 27, 2012


ஆடு திரும்பல் பேட்டிகுமார்


என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.

பலாசக்கை காப்பிபெவிக்கால்குமார்


இவர் தன் கையில் இருக்கும் பஸ் டிக்கட்டின் பின்புறம் கூட ஜோக் எழுதி பல பத்திரிக்கைக்கு அனுப்பி வெளியிடாமல் திருப்பி அனுப்பியது மட்டும் திருப்பதி மலையை விட உயரமாக இருக்கும். முன்னால் ஆல்ரவுண்ட் பிளாக்கர் இப்பொழுது டுவிட்டரில் மட்டும் கவனம் செலுத்துகின்றார். ஒரு நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார் அதுல 100க்கு 175 சதவீதம் காப்பி பேஸ்ட்…..இவர் போன்ல ஒன்லி மிஸ்டு கால் மட்டும் போகும். இவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட "சண்டைன்னாலும் சம்சாரம்ன்னாலும் கால்ல விழுந்திருவேன்..!"  அப்படின்னு உண்மைய சொல்லுற நல்ல மனுசன்.

'அநியாயத்துக்கு நல்லவன்' தமன்னாகுமார்


சென்னை பாஷையில் எழுதி படிப்பவர்களை அவ்வப்போது நாக்கு சுளுக்கவைக்கும் வித்தையில் வல்லவர். அநியாயத்துக்கு நல்லவர், போஸ்டர் ஒட்டும் முனுசாமி! ஷகிலா படத்தின் போஸ்டரை தெரியாத்தனமாக இவர் வீட்டுக்கு எதிரே ஒட்டியதால் அவரை திருத்துகின்றேன் பேர்வழி என்று பேசியே திருத்தி இப்பொழுது அவர் வேலையில்லாமல் இருக்கின்றார்…..! "என் கைல மாட்டுனா படவா பிச்சுவாவ.. வாயில வுட்டு ஆட்டப் போறேன்" என்று சொல்லிக் கொண்டு போஸ்டர் முனுசாமி காண்ட்ல கீரார் நைனா அந்தாண்டை போய்க்கினாத..ஆங்!, 

அப்ப..அப்ப…அரசியல் உள்குத்து எழுதி கிச்சுகிச்சு மூட்டுவார், ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ் பிரியாணி என்பார். பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற பட்டத்தைக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடாஷாப் பீதாம்பரகரன்


அஜித் படம் மொக்கையாக இருந்தால் இயக்குனர் தவறென்றும், விஜய் படம் மொக்கையாக இருந்தால் விஜய் தவறென்றும் மாற்றி மாற்றி விமர்சனம் போடுவதில் வித்தகர். புல் டைட்ல படத்துக்கு போயிட்டு காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…

புனுகு பூனை கக்கா ஆராய்ச்சியில் நீண்ட நாட்கள் இருந்ததால் எப்படிப்பட்ட கப்பையும் எதிர் கொள்ளும் தீரம் மிக்கவர். சில கமெண்ட்ல எதிராளியின் டவுசரை முழுக்க கழட்டுவதால் நிறைய பிரபலங்கள் இவரிடம் ஜாக்கிரதையாகவே பழகுகின்றனர். கேப்டனின் அதிதீவிர கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!

பெட்டிக்கடைக்காரன் வால்மார்ட்டில் குஜய்குமார்


இரண்டு வருடம் ஓய்வில் இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட், யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக் கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும் நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர். எல் கே ஜியில குழந்தைய சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக பேதி டாகுடர் அண்ணன் குஜய்குமார். இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாபூனை விம்ரின்


மதம் சார்ந்த விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று ஆகிவிட்டது. வரலாறு, சினிமா என கலந்து கட்டி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமி. மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன் லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், ஆனால் மூக்கு வளரவில்லை. அடிக்கடி தும்மல்தான் வருகின்றது வேறு நல்ல பிராண்டு மூர் மார்க்கெட்டில் தேடிக்கொண்டிருக்கின்றார், பல விவகாரமான விசயங்களை பலகாரமாக படைப்பதில் வித்தகர்…..

டிஸ்கி : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே..! நீங்கள் நினைப்பவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனைத்தும் மொக்கை நகைச்சுவையே..!நோ....பீலிங்ஸ்....நோ....66A

அபாயகரமான அறிவிப்பு 
இது தொடரும்.........
:-)

Read more...

வௌங்காதவன் பய(ப்புள்ள) பயடேட்டா

>> Thursday, November 22, 2012


பெயர் : வெளங்காதவன்

இயற்ப் பெயர் : நாட்டுகொரு நல்லவன்

சொந்தப்பெயர் : வெறியாயிருவேன்....

தொழில் : ஏராளமான ஆணி பிடுங்குதல்

உப தொழில் : பிடுங்கிய ஆணிகளை எடைக்குப் போடுதல்

நண்பர்கள் : அரசியல் பேசுபவர்கள்

பிடித்த அரசியல்வாதி : கேப்டன் ம்ம் அஸ்க்கு புஸ்க்கு ஒபாமா

பிடிக்காத அரசியல்வாதி : தமிழன் தலையில் மிளகாய் அரைப்பவர்கள் அனைவரும்

பொழுது போக்கு : போன் போடுவது

கடுப்பாகுவது : நக்கீரன் எனக்கு போன் போடுவது

சாதனை : பதிவு எழுதுவது

சமீபத்திய சாதனை : நடுங்கியபடி காவியதாய்க்கு கடிதாசி எழுதியது

நீண்ட நாள் சாதனை : பயப்படாமல் தலீவரை நக்கலடித்தது

நீண்ட நாள் விருப்பம் : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆகோனும்

பிடிக்காதது : குஜராத்தில் மது விலக்கு….

பிடித்தது : மே.வங்கத்தில் மது விலக்கில்லாதது

நெருங்கிய நண்பர்கள் : எனக்கு போன் செய்பவர்கள்

எதிரிகள் : ஸ்மைலி கமெண்ட்டை எதிர்ப்பவர்கள்

ஆசை : திடீர்ன்னு பிளாக் எல்லாம் டெலிட் ஆயிறனும்

முயற்சிப்பது : கவிதை எழுத, ஆனால் வருவது வெறும் காற்று மட்டுமே

பொறாமைப் படுவது : ஊர்ல நல்ல வேலை கிடைச்சவங்க..!

வருத்தப்படுவது : ஊர்லியே குப்பை கொட்டுறவங்களைப் பார்த்து

ஆச்சர்யப்படுவது : இன்னும் எவ கிட்டியும் மாட்டாதது

பயப்படுவது : கல்யாணப் பேச்சு

எதிர்கால லட்சியம் : சாகித்திய அகடாமி,புக்கர்.

இப்ப விரும்பி படித்துக்கொண்டிருப்பது : லாண்டரி பில்லுகள்

Read more...

ஆர்.கே.செல்வமணி சூப்பிப் போட்ட பனங்கொட்டை!-துப்பாக்கி

>> Thursday, November 15, 2012


ஹிஹி! பட்டாளத்தில் வந்த செல்லக்கிளி தீப்தி நம்பியார்...! விஜய் தங்கச்சி கேரக்டர்..!
ஆர்கே செல்வமணி, விஜய்காந்த் கூட்டணி நன்றாக சூப்பிப் போட்டுத் துப்பிய பனங்கொட்டையை கழுவி பதப்படுத்தி கண்ணு மூக்கு வெச்சு அழகான ஒரு பொம்மை செஞ்சிருக்கின்றார் முருகதாஸ், ஆனாலும் ஓவர் சென்டிமென்ட், பஞ்ச் டயலாக் போன்ற வழக்கமான விஜய் படத்தில் இருக்கும் வன்கொடுமைகள் இதில் இல்லை, அதற்காகவே முருகதாஸ் வீடு இருக்கிற திசை பக்கம் ஒரு கும்புடு போட்டுக்கலாம். ஆனாலும் பாருங்க அழகான திருஸ்டிப் பொட்டு நம்ம காஜல் அன்ட் ஜெயராம். வேகமாக போய்க்கொண்டிருக்கும் கதைக்கு ஸ்பீடு பிரேக்கர் மாதிரி இரண்டு கேரக்டர்கள்….வரும் போதெல்லாம் எரிச்சல் வருகின்றது. பீர் குடிக்காமையே அடிக்கடி யூரின் வருது.

கதைன்னு பார்த்தா ஏக் லைன் கூட இல்லை ராணுவத்தில் இருக்கும் கேப்டன் ஜெகதீஸ் ரிலேட்டிவ், பிரண்ட்ஸ், அம்மம்மா....அப்பப்பா  என யாருக்கும் தெரியாத ரகசியமான ஒரு அமைப்பு "ரா" மாதிரி அதுல இருக்கிறாரு...! பன்னண்டு இடத்துல குண்டு வைக்கும் ஸ்லீப்பர்களை ட்டிஸ்யூம்…..ட்டிஸ்யூம்ன்னு ஒரே டைம்ல விஜய் அன்ட் கோ போட்டுத்தள்ளுது, இவர்களுடைய தல தீவிரவாதி வருகிறான், திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரி தீவிரவாதி மிலிட்ரி விளையாட்டு விளையாடி, கடைசியில புரட்சித்தலைவர் மாதிரி மூனு அடி வாங்கிய பிறகு, வாய் ஓரத்தில ரத்தத்தை துடைச்சிட்டு, கில்லி மாதிரி உடைஞ்ச கை, கால்களை "சிங்கிரிபாளையம்" மாவுக் கட்டு போடாமையே சரி பண்ணிட்டு சித்தவைத்தியர் விஜய் வில்லனை அடிச்சு நாட்டை காப்பாத்துறாரு.... பட் இந்த சாதாரண கதையை கடைசிவரை கொட்டாய்ல கொட்டாவி வர வைக்காமல் முருகதாஸ் நேர்த்தியாக தீபாவளி மிட்டாயா கொடுத்திருக்கின்றார்....!

இந்த படத்தில எனக்கு பிடிச்ச விசயம் விஜய் அன்ட் கோ 12 பேரைப் போட்டுத் தள்ளுவது, விஜய் நாயை வைத்து தங்கையை கண்டுபிடிப்பது, எனச் சின்ன…சின்ன….விசயங்களை நாம் கணிப்பதற்கு வேறு திசையில் காட்சியை நகர்த்தியிருப்பது முருகதாஸ் அன்ட் கோவின் உழைப்பு தெரிகின்றது.

மீசைய மட்டும் முறுக்கி விட்டுட்டு அம்மாஞ்சி மேஜர் ஜெயராம் (அடப் பாவமே….!) லீவுல வந்த ஆர்மி நண்பர்கள் எல்லாரும் டிஸ்யூம்….டிஸ்யூம்ன்னு தீவிரவாதிகளைச் சுடப் போக, உயர் அதிகாரி ஜெயராம் காஜலோட சப்பாத்தி சுடப் போயிட்டாரான்னு ஒரு கேள்வி வருது. விஜய பிடிக்கலைன்னு சொல்லுகின்ற மேட்டர் பொண்ணு ஜோக் பழசு...கண்ணா அதர பழசு! முடியல....! ஹாரிஸ் மாமா...! ஹாரிஸ் மாமா...! ரெக்கார்டை மாத்துங்க.....! திரும்ப...திரும்ப....பாடற நீன்னு நாங்க வடிவேல் ஜேக்குல வர்ற சங்கிலி முருகன் மாதிரி கதற வைக்காதிங்க மாமா..! பிளீ..............ஸ்! தமிழ்நாடு ரசிகன் பாவம்!
தாரவி சப்இன்ஸ்பெக்டர் சத்தியன் ஒரு சப்பைக் கேரக்டர் காமடியனாக போட்டது சினிமாவுக்கு வேனா ஓகே..! மும்பையில் டான்களின் அட்டகாசம் அதிகமாகும் போதெல்லாம் மும்பை வாலாக்கள் ஒரு தமிழனத்தான் கமிஷனராகவும், உயர் அதிகாரிகளாக நம்ம ஆளுகளைப் போடுவாங்க..., டான்கள் வாலைச்சுருட்டிட்டு ஓடுருவாங்க..., இல்ல அலுமினிய குண்ட நெஞ்சில வாங்கிட்டு மர்கையா ஆயிருவாங்க….காலரை தூக்கிவிட்டுக்கங்கப்பா……! டமில் நாட் போலீஸ்!

காஜல் அழகான டால் மாதிரி, ஊறுகாய் மாதிரி வந்தாலும் நடனத்தில் அதுவும் முக்கியமாக கூகுள் பாடலில் கலக்கியிருக்கு அம்மணி! அழகு தேவதையைக் கூட ரசிக்க விடாமல் வேகமாகச் செல்லும் திரைக்கதைக்கு காஜல் தேவையேயில்லை.......பல ஏராளமான லாஜிக் மீறல்கள்.....கிராபிக்ஸ் ஓட்டை, உடைசல் இருந்தாலும் நல்லா ஈயம் பூசியாதால் பளபளக்குது இரண்டரை மணி நேரம் டைம்பாஸ் துப்பாக்கி.


Read more...

தினம்...தினம்...தீபாவளி கொண்டாடியவர்கள்!

>> Tuesday, November 13, 2012



தீபாவளி என்பது வடநாட்டு பண்டிகை, கொடநாட்டுப் பண்டிகை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்க....எந்த பண்டிகையா...? இருந்தா என்ன நமக்கு சந்தோசம் தருதா தன் குழந்தைகள் சந்தோசமா இருக்காங்களா அது போதும் என்று பல காமன்மேன்கள் தத்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், இந்த தீபாவளி பண்டிகை பணக்கார குழந்தைகள் தங்கள் சந்தோசத்தை பட்டாசுகளில் வெடித்து காட்டிக் கொண்டிருக்க அவர்கள் வெடித்ததில் வெடிக்காததை பொறுக்கி எடுத்து வெடித்து சந்தோசப்பட்டும் ஏழைக் குழந்தைகள் ஏக்கத்துடன் ஒரு தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, அந்த ஏழைக் குழந்தை பெரியவனாகிய பிறகு தன் குழந்தைகளும் நம்மைப் போல் ஏங்கித் தெருத்தெருவாக வேடிக்கை பார்க்கக் கூடாது என்று ஏராளமான வெடியை, வாங்கித் தந்து வெடிக்கும் போது எதாவது ஒரு குழந்தை வேடிக்கை மட்டும் பார்க்க வரும். ஆகவே இது சுழற்சிதான்.

திருப்பூரில் இன்று முதலாளியான நண்பன் போனஸ் கொடுக்கனும் வசூல் ஆகலைன்னு புலம்பறான், ஒரு காலத்தில் நானும் அவனும் போனஸ்க்காக காத்திருந்த போது "வருசம் பூரா வேலை வாங்குறானுக சீக்கிரம் போனஸை கொடுத்தா போவமல்லோ" என்று முதலாளியை திட்டியவன் இன்று அவனை எவனோ திட்டிக் கொண்டிருப்பான் என்று புரியாமல் புலம்புகின்றான்.

பண்டிகைகள் என்பது இந்தியாவில் மட்டும் சமதர்மமாய் இருப்பதில்லை அது எம்மதப் பண்டிகைகள் என்றாலும் ஒன்றே..! புத்தாடை, இனிப்பு, நல்ல உணவு, இதுவே பண்டிகை என்றாகிவிட்டது, வெளிநாடுகளைப் போல் ஒயின்,ரம் விஸ்கி, ஒரு பெக் அடித்து சியர்ஸ் சொல்லி விடிய..விடிய வீதிகளில் ஆட்டம் போடும் கலாச்சாரம் இந்தியாவில் இல்லை,அதனால்தான் பணம் இருப்பவர்களையும் இல்லாதவர்களையும் பிரித்துக் காட்டுகின்றது, பண்டிகைக் கொண்டாட்டங்கள் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்றாலும் குழந்தைப் பருவத்தில் மூன்று மாதங்ககளுக்கு முன்பாகவே பண்டிக்கைக்கான நாளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் காலண்டரைப் பார்த்து ஏங்கித் தவித்த குழந்தைதான் நானும் ஒரு காலத்தில்.

அன்றைய எண்ணெய்க் குளியல் வெறுப்பேத்தியது! இன்று அதுவே மருத்துவம் என்று விரும்பி செய்கின்றேன், வெடி! வெடி! என ஏங்கிய மனசு....!இன்றைய தூக்கத்தைக் கெடுப்பதால் எரிச்சலாக இருக்கின்றது, ஆனாலும் இந்த குழந்தைகளின் மகிழ்ச்சியைக் காணும் போது கோ ஆப் டெக்ஸ் துணியோடு விளையாடிய அன்றைய தீபாவளியை நினைக்க வைக்கின்றது. தூங்கிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நாயின் காதருகில் வைத்த அனுகுண்டின் சத்தத்தில் வெகுண்டு ஓடியதுதான் நான்கு நாட்கள் கழித்துதான் திரும்பி வந்தது! அந்த அப்பாவி ஜீவன்!

விளையாட்டாக கழுதைக்குட்டியின் வாலில் கட்டி விட்ட சரம்வெடியில் மிரண்டு பயந்து தெரித்து ஓடிய கழுதைக்குட்டி ரோட்டோரம் இட்லி விற்றுக் கொண்டிருந்த கிழவியை தள்ளிவிட்டு ஓடியது கிழவி வசைமாரி பொழிய ஒரு தாத்தா "கிழவி உன் இட்லிய தின்னிருக்கும் கழுத அதான் வசமா இன்னிக்கு பழி வாங்கிருச்சு..." என்று ஜோக்கடித்துக் கொண்டே உருண்டு ஓடிய பாத்திரங்களை எடுத்துக் கொடுத்தார். கிழவி கழுதைக்கு சொந்தக்காரரிடம் போட்டுக் கொடுக்க சலவை துணி கொடுக்க வந்தவர் எங்க வீட்டுல போட்டுக் கொடுக்க மாத்து வாங்கியது.

எப்பவும் லூசான டவுசர் போட்டுக் கொண்டு அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு திரியும் யோகா எங்க மாமா பத்த வச்ச வானம் கடைசி நேரத்தில் குடை சாய்ந்து அவன் டவுசருக்குள் புகுந்து கொள்ள டவுசரை விட்டுவிட்டு ஓடினான் எல்லாரும் சிரிக்க......! அவனைப் பிடித்து டவுசரை மாட்டிவிட்டு "எங்கடா குஞ்ச காணம் வானம் கொண்டு போயிருச்சு போல....."என்றார்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள். அவன் அம்மாவிடம் போய் "அம்மா...அம்மா....வானம் என்னதை தூக்கிட்டுப் போய்ச்சு" என்றான். பிறகு விளையாட்டாக டவுசர்ல வானம் விட்டுருவே...என்று மிரட்டினாலே அழுது ஓடிவான். இதைப் போன்ற பல சம்பவங்கள் பலதும் நினைவில் மங்குவதில்லை 

கல்லுவெடின்னு ஒன்னு இருக்கும் இப்ப தடை பண்ணிட்டாங்க......களிமண் வச்சு பெசைஞ்சு உருண்டையா வச்சிருப்பாங்க செவுத்துல இல்ல தரையில அடிச்சா டமார்ன்னு காது பொளக்கும்.பிடிக்காத ஆளுகளை பயமுறுத்த தகுந்த வெடி அது....! சைக்கிளை ஒருத்தன் ஓட்ட, ஒருத்தன் கேரியர்ல உக்காந்துட்டு டவுசர் பாக்கெட்ல வெடிய வெச்சுக்குவோம்....இரவில் அவன் நடந்து போயிட்டு இருக்கும் போது பின்னாடியே போயி எதிரியோட காலடியில வீசுனா அவ்வளவுதான் அலரியடிப்பானுக....! நாங்க சைக்கிள்ல பறந்துருவோம். அதே மாதிரி ஓலை வெடி முக்கோண வடிவில் இருக்கும் அதுவும் தடை பண்ணிட்டாங்க வெடிச்சா காது ஜவ்வு கிழியும் இரண்டுமே ரொம்ப ஆபத்தானதாக இருந்ததால் தடை செய்யப்பட்டது.

பழைய வீட்டு பரணைச் சுத்தம் செய்த போது கிழவிகள் வெற்றிலை கொட்டும் கொட்லா மாதிரி சிறிய உருவத்தில் கனமான இரும்பில் ஒரு வித்தியாசமான பொருளாக இருக்கவே எடுத்து என் தாத்தாவிடம் கேட்டேன் இது என்ன ?என்று வாங்கிப் பார்த்தவர் இதுதான்டா எங்க பட்டாசு என்றார் எப்படி என்று கேட்டபோது கந்தகத்தை வாங்கி வந்து குழியில் சிறிது போட்டு உலக்கை மாதிரியானதில் அடிச்சா டமார்ன்னு வெடிக்கும் என்று கொள்ளுப் பட்டாசைப் போட்டு வெடித்துக் காட்டினார்......சுயமான வெடியை சிலர் தயாரிப்பார்கள் இரண்டு இரும்பு வாசர்களின் நடுவே கொள்ளு பட்டாசை நிறைய வைத்து போல்டு நட்டுப் போட்டு முறுக்கி தரையில் அடித்து வெடிப்பார்கள்.

கோவில் திருவிழாவின் போது திரியே இல்லாத வானத்தை சாதாரணமாக கையிலே வைத்து பற்ற வைத்து வீசுவார்கள், அப்படி ஒருவர் ஒரு திருவிழாவில் ஒத்தைக் கையுடன் வெடித்துக் கொண்டிருந்தார். விசாரித்தேன் வெடி தயார் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்ப்பட்டு மணிக்கட்டுடன் கையிழந்த போதும் அந்த தொழிலை கர்ம சிரத்தையுடன் செய்து கொண்டிருக்கின்றார்....வேறு வேலை அவர்களுக்கு தெரியாது அரசு அவர்களுக்கு காப்பீடு மாதிரி எதாவது உதவி செய்யலாம்.

மண்ணில் புதைத்து ஒரு வெடி வைப்பார்கள் ஊரே அதிரும் பூகம்பம் வந்த மாதிரி! திருச்சூர் பூரம்  திருவிழாவில்  பிரசித்திப் பெற்றது அந்த வெடி கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல கட்டிடங்கள் விரிசல் ஏற்ப்பட்டதால் பூரத்தில் அந்த வெடியின் சக்தியை குறைத்து வெடிக்கின்றார்கள். அது வெடிக்கும் போது காலிலிருந்து ஒரு அதிர்வலை தோன்றி மூளையை அதிர வைத்து நிற்கும் அது ஒரு பரவசம் என்றே கூறலாம் ஆனால் அரசாங்கம் கட்டிய பல பாலங்கள் பொடிந்து உதிர்ந்து விடும் என்பதால் தடை செய்து விட்டது, சட்ட விரோதமாக கிராமங்களில் வெடிக்கின்றார்கள்.

எங்க வீட்டுக்கு கிணறு வெட்டலாம் என்று முடிவு செய்தார்கள் ஆயிபாளைத்துக்காரர் என்று ஒருவர் இருந்தார் கிணறு வெட்டுபவர், அவரைக் கூப்பிட்டுச் சொல்ல பூசையெல்லாம் செய்து குச்சி மாதிரி எதையோ வைத்து நீர் ஓட்டம் பார்த்து கிணறு வெட்டத் தொடங்கினார், அவர் சுமார் ஒரு அம்பது அடி தோண்டியிருப்பார் ஒரு பெரிய பாறை குறுக்கிட்டது வேட்டுத்தான் போடனும் என்று சொல்லி விட்டார் கந்தகம் மருந்து, டெட்டனேட்டர் அன்றைய காலக்கட்டத்தில் சுலபமாக கிடைத்தது. சாதாரணமாக சைக்கிள் கேரியரில் வைத்து வாங்கிக் கொண்டு வந்தார், தோட்டாவை துளையிட்டு டெட்டனேட்டரை வைத்து பாறையில் ஆங்காங்கே ஓட்டை போட்டு அதில் வைத்து மெல்லிய ஒயரை இணைத்து கிணறுக்கு வெளியே பல மீட்டர் தூரம் கொண்டு வந்து சைக்கிள் டைனமோவில் இணைத்து எல்லாரும் ஒளிந்து கொண்டு சைக்கிளை வேகமாக சுற்றினார்கள்கள். ஒரு அதிர்வில் பாறை சுக்கு நூறாக உடைய தண்ணீர் ஊற்று உடைய கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிய கையெட்டும் தூரத்தில் தண்ணீர் மோந்து....மோந்து குளிப்போம், குடிப்போம். வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் குளிச்சியான கிணற்று நீரை ஒரு சொம்பு மோந்து குடித்து தேவாமிர்தம் என்பார்கள்.

நான் முதன் முதலாக ஒரு மிகப்பெரிய வெடியை காதுக்குள் ஒரு அரை மணி நேரம் அடைக்கும் ஒரு பேரழிவைப் போன்ற சத்தத்தை கேட்டது அன்றுதான் அதன் பிறகு நமது நாட்டில் வெடித்த பல வெடிகள் மற்றும் போர்வெலெ் கம்பனிகள் இந்த கிணறு வெட்டுபவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து விட்டது. அவர்கள் இப்பொழுது வேறு வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டார்கள்...! தினம்...தினம்...தீபாவளி கொண்டாடிய அவர்கள் இன்று எங்கோ ஒரு மூலையில் முடங்கி படுத்துக் கொண்டிருப்பார்கள்....இன்று நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த வெடிச் சத்தம் பல ஞாபகங்களை அவர்கள் மனதில் கிளறிக் கொண்டேயிருக்கும். 

Read more...

I-T ACT SECTION 66 A - நமது கவலைகளும், கோரிக்கைகளும்.

>> Monday, November 5, 2012

நண்பர்களே! நம்முடைய சுதந்திரமான கருத்துகளைக் கூறும் போது பத்திரிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுவது கூட நம்மை கைது செய்து மூன்றாண்டுகள் சிறை வைக்க முடியும் என்கின்ற வகையில் இருக்கின்றது. இச் சட்டத்தை திருத்தி ஊடகங்களுக்கு இணையான சுதந்திரத்தை இணையத்தை இந்தியாவில் பயன்படுத்தும் அனைவருக்கும் வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு ஐயா தருமி அவர்களின் முயற்சியால் பதிவிடப்பட்டு தத்தம் வலைத் தளங்களில் அனைத்து பதிவர்களும் பதிவிட்டு அரசுக்கு, மற்றும் ஊடகங்களுக்கும் கவனஈர்ப்பை கொண்டு வரக்கூடிய முயற்சியில் நானும் நமது பல நண்பர்களும் பங்கு கொண்டிருக்கின்றோம், நீங்களும் நாளை மாலைக்குள்  பதிவிட்டு நம் ஒற்றுமையை உலகிற்கு பறை சாற்றுவோம்...வெல்லட்டும் வலைப் பதிவர்கள் ஒற்றுமை


 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும்(http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP