”அஞ்சரைக்குள்ள வண்டி”- திரைவிமர்சனம்(A)

>> Wednesday, March 28, 2012


ணக்கம் நணபர்களே! இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..! பார்த்தது "கோபி சாந்தி தியேட்டர்" (இப்ப அநியாயமா இடிச்சிட்டாங்க) "கில்மா" படத்துக்கென்றே நேர்ந்து விட்டது இந்த தியேட்டர். 

அதுலதான் கணேசன் என்கிற என் நண்பனுடன் பார்த்த்தேன். கணேசன் ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பொறம்போக்கு, பல கில்மா படங்களை தலையில் துண்டைப்போட்டுக் கொண்டு பார்ப்பதில் கில்லாடி! சிறிது கால் ஊனமுற்றவன் அதனால் ஆசிரியர்கள் யாரும் அவனை அடிக்க மாட்டார்கள் ஆனால் சின்னச்சாமி ஆசிரியரோ அவனை கதறகதற பின்னி எடுத்துவிடுவார், ஆட்டோபக்ஸ் மாதிரி லாவகமாக அடியில் இருந்து தப்பிப்பான் அதனால் தன் இரண்டு கால் இடுக்கிலும் அவனை இடுக்கிக் கொண்டு குமுறுகுமுறுன்னு குமுறுவாறு! இவ்வாறு குமுறிக்கொண்டிருந்த வேளையில் அவர் தொடையை கடித்து விட்டான் அவர் அய்யோ.அய்யோ என்க் கதறினார்.

துணியே இல்லாம யானை இப்படிபட்ட செக்ஸியான காட்சிகள் நிறைந்த படம்

கடுப்பான தலைமை ஆசிரியர் டிசி கொடுத்து அவனை துரத்திவிட்டார், தன் தந்தையின் "ரேடியோ ரிப்பேர்" கடையில் ஐக்கியமாகிவிட்டான் சின்னசின்ன கோளாறுடன் வரும் "ரேடியோ" சுத்தமாக அவுட் ஆக்கும் விஞ்ஞானியாகி விட்டான். பொதுமக்களிடமும் மாத்து வாங்கிக்கொண்டு இருந்த சரித்திர புகழ் வாய்ந்த நண்பன் கணேசன்தான் எனக்கு இந்த படத்தை அறிமுகப்படுத்தினான் இருவரும் படத்திக்கு போனோம். துண்டுடன்…… இனி விமர்சனம்.

எழுத்து போட்டார்கள் ஜிலேபிய பிச்சு போட்டமாதிரி ஒன்னும் புரியலை(நீங்கள் வெண்ணை விமர்சனத்திக்கு வாடா என்பது எனக்கு புரிகிறது) அந்த ஊர்ல கில்மாவான பிகர் "ஷகிலா" கல்யாணம் ஆயிருச்சு, புருசன் வேலைக்கு ஆவுல... அதனால அம்மணி வேற ஒரு பர்னாலிட்டியான "சுரேஸ்கோபி" மாதிரி ஆள கரைக்ட் பண்ணுது அவரும் புருசன் இல்லாதப்ப வந்து கில்மாவா இருந்துட்டு போயிடுறாரு, இரண்டு பேரும் ஈருடல் ஓருயிரா ஆயிடறாங்க ஊருக்கு வருகிற ஒரே பஸ் சரியா மாலை 5.30க்கு வருது அதுல ஓடிப்போகத் திட்டமிடுறாங்க, ஓடிப்போகும் போது புருசன் கிட்ட மாட்டிக்கிறாங்க. புருசன் கள்ளக்காதலுனுடன் சண்டை போட்டு மனைவியை மீட்டு வந்து அவன் பெண்களை விபச்சாரத்திக்கு விற்கும் புரோக்கர் என்கிற உண்மையை கூறி மனைவியை திருத்துகிறார் இருவரும் அணைத்துக் கொள்கிறார்கள் 
படம் சுபம்!

பொன்னர் சங்கருக்கு இது தேவலாம்

மனம் மகிழ்ந்த படத்தின் வசனங்கள்

1.தம்பி ஊருக்குள்ள புதுசா யாருப்பா நீ? 

கோழி புடிக்க வந்தம்ங்க...

அடுத்தமுறை அதே பெரியவர் தம்பி கோழி புடிச்சிட்டியா..?

கோழி புடிச்சிட்டேன் ஆனா வெடக்கோழிதான் கிடைச்சது

2.ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ...... ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ......
 ஸ்ஸ்ஸ்ஆஊஊஊ.....  ம்ம்ம்ம்மாமா......ஸ்ஆஆஆஆஆஆஆஆ

3.   உன் கண்ணும் உதடும்தான் அழகு!

வேற எதுவும் அழகு இல்லையா? 

வேற.......

காந்த கண்ணழகி! 

இயக்குனரிடம் சில பாலான கேள்விகள்

1.படம் நார்மலா போயிட்டு இருக்கு சீன் வரும் போது மட்டும் சவுண்ட் அதிகமாகிவிடுகிறது  ஏன்.....? பிளீஸ் டெல் மீ.......?

2.அப்புறம் படக்காட்சியெல்லாம் தெளிவா இருக்கு கில்மா வரும்போது மட்டும் கீறல் அதிகமா இருக்கு ஏன்....? 

3.படத்தில கில்மா முடியாமலையே அடுத்த காட்சிக்கு போயிடுறீங்க எடிட்டிங் மிஸ்டேக்....? இல்ல ஆபரேட்டர் மிஸ்டேக்! 

4.ஆமா உங்களுக்கு ஷகிலாவை தவிர வேற நடிகையே கிடைப்பதில்லையா? 

5.படத்தில் ஷகிலாவைத் தவிர எல்லாரும் உம்மணாம் மூஞ்சியாவே இருக்காங்க ஏன்? 

இந்த படத்தை குழந்தைகள் கூட பார்க்கலாம், இப்ப வருகிற தமிழ் படத்தை விட கில்மா குறைவுதான்....

ஆனந்த விகடன் மார்க் : 5.30

குமுதம் ரேன்ங் : சுமார்! பிட்டே இல்லை!

என்னுடைய கருத்து : வீட்டுல மாட்டியதுதான் மிச்சம்! அடி வாங்கியதுதான் பலன்! இந்தப் படம் பார்த்த காசுக்கு சரோஜாதேவி புத்தகம் வாங்கியிருக்கலாம்....!

நீ நனைந்ததில் எனக்கு வெப்பமாக இருக்கிறது

Read more...

பக்கி தக்காளி VS மக்கி மனோ+ பேய்!

>> Tuesday, March 27, 2012



பக்கி தக்காளி காலையில் ஆபிஸ்க்குள் நுழைஞ்சதும் தாய்லாந்து அசிஸ் டெண்ட் பிகரு பஞ்சு மிட்டாய் கலருல ஜிகுஜிகுன்னு சார்ட் ஸ்கர்ட்டு, லோடாப்புல (சிபி அண்ணே! ஜொள்ள துடைங்கோகுட்மார்னிங் சார் என்றாள் குட்மார்னிங் என்றபடி தன் அறைக்குள் போனார் பக்கிபக்கியின் எசமான் போன் அடித்தார்

பக்கி.... யு.... கோ... டு ...தி... பஹ்ரைன்! மீட் தி அனிகாவ்ரோகியாகோ(என்ன எழவுபேருடா இது கொய்யால

பக்கிக்கு ஒரே (இல்லை இரண்டுசந்தோசம் ஒன்னு பஹ்ரைன் போனாமானோவ பார்கலாம்! இரண்டு சப்ப மூக்கு பாங்காங்காரியும், தாய் லாந்துக்காரியும் பார்த்து, பார்த்து, (பார்பதோடு மட்டும் கெய்ஸ் பக்கி ரொம்ம நல்லவருங்கோ!) சலிச்சு போன கண்ணுக்கு விளக்கெண்ணை ஊத்திகிட்ட மாதிரி குளுகுளுன்னு அமெரிக்காகாரிமொராக்கோகாரின்னுபார்க்கலாம்.

இந்த மனோ பய வேற எனக்கு நியூஸ்லாந்துகாரி தோழி இருக்காக ஜெர்மன்கார தோழி இருக்காக என்று கோவை சரளா ரேஞ்சுக்கு போஸ்ட்டா போட்டு கொல்லுது! என்னதான் அப்படி பயபுள்ள பண்ணுது பார்த்துட்டு வரலாமுன்னு குஷியா கிளம்பினாருங்க அதுதான் பக்கி செஞ்ச முத தப்புசரி பக்கி கூட நாமளும் பயனம் செய்யலாம் வாங்க
சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்(மியூசிக்குங்கோ)

கெனாய்ல இருந்து பஹ்ரைன் ரொம்ம தூரம் பிளைட்டு பறக்குது பக்கி கண்ணைமூடி தூங்கினாப்புல மனோ போட்ட பதிவுல பேயை  பத்தி இருந்தது ஞாபகம் வந்தது, அட எத்தனை வியட்நாம்காரிக மூஞ்ச பார்த்தும் பயப்படுல போயாவது ஒன்னாவது நாதாரி சேராத சரக்ககுடிச்சிட்டு பேயி நாயின்னுட்டுநாயத் திங்கிற ஊர்ல இருக்கிற நமக்கு பேயாவது ஒன்னாவது
ங்கொய்யால….என் பலதை சிந்தித்தவாறு தூங்கிப்போனார் பக்கி.

பிளைட்டுல நல்லா தூங்கின பக்கியை அழகான அமெரிக்காகாரி எழுப்பினாள் பாலபட்டி வந்திருச்சா என்கிற மாதிரி பஹ்ரைன் வந்திருச்சா என்றவரை வினோதமாக பார்த்தாள் (எல்லா பிகரும் ஏங்க பக்கிய இப்படி பார்க்குது?) ஹிஹி என ஜொள்ளுவிட்டபடியே பக்கி இறங்கினார்(தக்காளிக்கு இன்னும் டவுன்பஸ் பழக்கம் போகலை நீர்மூழ்கி கப்பல்ல போனாலும் சீட்ல உக்காந்தா கொர்ர்ர்தான்)

அனிகாவ்ரோகியாகோ (சத்தியமா இத காப்பி பேஸ்ட்தான் பண்ணினேன்) சப்ப மூக்குகாரனை சந்திச்சு ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு, ஒரு ஏழு மணியிருக்கும்..., ஒரு வாடகை டாக்ஸி புடிச்சிட்டு ஹோட்டல் போய் சேந்தாரு நம்ம ஆளு.


மனோவுக்கு ரொம்ம சந்தோசம் தொந்தி முட்ட இரண்டும் கட்டிக்கிச்சுக மனோ ஆலமரத்தை கட்டி பிடிச்ச மாதிரி பாதிதான் முடிஞ்சதுயேய் மக்கா வா நம்ம நண்பர்கள் கிட்ட அறிமுகப் படுத்துகிறேன் என்று ஹோட்டல் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்….பயபுள்ள எல்லாம் பாய்ஸ்....ஒரு கேர்ள்ஸ் கூட காட்டுல....(வாய திறந்து கேட்கவா முடியும்) அதுல அரபி ஒருத்தன் பக்கிய மேலையும் கீழையும் பார்க்குறான், அவன் யாருடா தக்காளி... முறைக்கிறா என்ற பக்கியிடம் அவன்தாண்டா முதலாளி என்றார் மனோ....கொய்யால சேக்குக்கு என்ன பர்த்தா எப்படி தெரியுதாம்...(ஆமா ஓனர்ன்னா பொளந்து வச்சிகிட்டு நடந்தா எப்படிங்கற சிவா பிளாக் ஏன் ஞாபகத்திக்கு வருது?)

அப்படி இப்படி என்று நண்பர்கள் இருவரும் பதிவுலம் பற்றி எல்லாம் கதைத்து முடிக்க மணி பத்து ஆச்சு லைட்டா….ஒரு ஸ்மால போட்டுட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு இருவரும் ரூமுக்கு போனார்கள்

பக்கி இன்னொருத்தருக்கு போன் செய்தார்... 

ஹலோ டேய் கீமா ச்சே கில்மா நாயகா...

அடங்கோ...என்றா...எப்போ எதுக்கு போன் பண்ண...

இல்ல நான் மனோ கூட இருக்கேன்...

ஹிஹி அவன நம்பி போனியா...உன்னைய கவுக்க போறான் பாரு...என்னைய இங்க அப்படித்தான் கவுத்தான்...

ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல...பிகர்ஸ் எல்லாம் டாப்பு..

அப்போன்னா உனக்கு ஆப்பு...

போடங்கோ...(போன் துண்டிக்கப்பட்டது..!)



பக்கிக்கு மனசுல கீழ சாப்பிட்ட மீன் முள்ளு மாதிரி இருந்த விசயத்தை அப்பத்தான் துப்பினாரு மனா பேய் இருக்குன்னு போஸ்ட் போட்டையே அது எந்த ரூம் என்றார்...அப்படியே பிட்டையும் போட்டாரு நண்பியெல்லாம் எங்க மக்கா என்று 

ஹ ஹ ஹ ஹ என்று சிரித்தார் மனோ(பய புள்ள எதுக்கு சிரிக்குதோ) காலையில அறிமுகப்படுத்துகிறேன் மக்கா என்றார்..மனோ(மனோவா கொக்கா)அப்புறம் போட்டாருங்க பாருங்க பிட்டு பக்கி கைகால் எல்லாம் லேசா நடுங்குச்சு.

அய் மக்கா கவலை படாதிங்கபேய்க் களுதை அது பாட்டுக்கு வரும் போகும் பயப்படாதிங்க அது இந்த ரூம்தான் என்று கூறி மனசுல கிலி! எலி! புலி! எல்லாத்தையும் கிளப்பிட்டாருகொய்யால….பக்கி தைரியசாலிதான் ஆனா பேய்ன்னா பயம் இல்லைதான்எம்மாம் பெரிய கொம்பனுக்கும் சுடுகாட்டை கடக்கும் போது லைட்டா ஒரு பயம் வரும்…..அங்கயே..பாய விரிச்சு படுக்கிற நிலமை வந்தா (யோவ் விடுங்கய்யா மீ பாவம்)

அப்படியே படுத்தாரு தூக்கம் வரல மனோ படுத்தவுடன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

அப்படியே படுத்துகிடந்தவரு நல்லா தூங்கிட்டவர் சரியா பண்ணிரன்டு மணி விழிச்சிட்டாரு தூரத்துல ஒரு நரி ப்பர்ர்ர்ர்ர்ன்னு ஊளையிட்டது ஆங் நரி ஊஊஊன்னு தானே ஊளையிடும்? 

இது ஒட்டகம்….அப்புறம் பார்த்தா மனோ குறட்டை விடுறாரு...இரண்டும் மிக்ஸ் ஆனதுல பக்கிக்கு பேதிய கிளப்பிருச்சு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா…..ஒரு நிமிசத்தில பயந்திட்டேன்என்று மனசை தேத்திக்கிட்டு வாய் எல்லாம் வரண்டு போச்சுதண்ணி குடிப்போம் என்றபடி ரூம் மூலையில் இருந்த வாட்டர் கேன்ல இரண்டு டம்ளர் தண்ணி குடிச்சிட்டு திரும்பியதும்... எதிர்ல பேபேபேபேய்ய்ய்ய்ய்ய்என்று அலறிவிட்டார் பக்கி….



"அப்புறம் பார்த்தா மனோ"

எலேய் மக்கா நான்தான்லே.சரியான.பயந்தாங்குள்ளியா இருக்கியேலே.என்றவர் எனக்கும் தண்ணி தாகமா இருக்கு என்று இரண்டு மூன்று டம்ளரை குடித்தார்

எனக்கு இனி தூக்கம் வராதுமூதேவி சத்தம் இல்லாம வந்து பின்னாடி நிக்குது…..ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு….டிவியாவது பார்க்கிறேன் என்று டிவிய ஆன் பண்ணினார் 

நானே வருவேன்….என்கிற பேய் பாட்டு அட கொய்யால நமக்கு தகுந்த மாதிரி இதுவேற என்றபடி வேறு சேனலை மாற்றினார் அதுல ஏதோ இங்லீஸ் படம்100 பேய்க குழியிலிருந்து எழுந்து ஊஊஊஊஊ என் ஊளையிட்ட படி கைகள் இரண்டையும் விரித்த படி வருது கடுப்பான பக்கி டிவிய ஆப் பண்ணிட்டு படுத்தார் விடிய..விடிய பேயும் வரலை பக்கியும் தூங்கல…..(ஆனா மூனு வாட்டி பாத்ரூம் போனாருங்க)

காலையில எழுந்து வேகமா குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு கிளம்பினாரு பக்கி அட இருப்பா நியூஸ்லாந்து நண்பிய அறிமுகப்படுத்துகிறேன் என்றார் மனோ!

நீ எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்என்ன ஆள விடு என்று வியட்நாமை நோக்கி பறந்தது பக்கி.

டிஸ்கி1 : அந்த பேய் எதிர்பாராமல் தூக்கத்தில் மனோவை இருட்டில் கண்ணாடியுடன் பார்த்து பயந்து ஓடிவிட்டதாம்.

டிஸ்கி1 : பக்கிக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விட்டதாம், வியட்நாமில் மளையாள மாந்திரிகர் இல்லாததால், ஒரு சீன மந்திரவாதியை வைத்து மந்திரித்து தாயத்து கட்டியபிறகு இப்பொழுது ஓரளவு பரவாயில்லை என்று தகவல்!


Read more...

மெட்ராஸ சுத்திபார்க்கப்போறேன்...டுயாலோ...டுயாலோ...

>> Sunday, March 25, 2012



நம்ம ஆளு நாட்டாமை முன்னாடி போய் நிக்கறாரு!

அய்யா...!

என்னடா பசுபதி! எதையோ தொலைச்ச மாதிரி நிக்கிற...

ஆங்! ஒன்மில்லிங்கய்யா...சென்னை போலாமின்னு இருக்கிறேன்!

என்னது சென்னையா எதுக்கு?

ஒரு கிடார் வாங்கோனுங்க!

எடே! என்னடா பசுபதி...! நீ இங்க வீட்டுலியே ஊருப்பட்ட ஆடு இருக்க கிடா வாங்க சென்னை போகோனுமா?

அய்.......யா கிடா இல்லிங்கோ! கிதாருங்கோ! மியூசிக் பொட்டிங்க...

என்னடா பசுபதி வீட்டுல ஒரு கருப்புபொட்டிய வெச்சி இருபத்திநாலு மணி நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கிறது பத்தாதா....காதுல மைக்க மாட்டிக்கிட்டு திருவாத்தானாட்ட சிரிக்கிறது என்னடா நினைச்சிட்டு இருக்கிற ராசுக்கோலு!

அய்.....யா எனக் இல்லீங்! என்ற பையனுக்குங்!

அப்புடியா! என்ற பேரனுக்கா.....பெரிய எளையராசாவா வருவானாக்கும் என் பேரன்! போயிட்டு வா பசுபதி என்ற வண்டிய எடுத்துட்டு போ!

இல்லிங்கய்யா நான் ரயில்ல போயிட்டு வந்திடறனுங்க...



சென்னை வந்தார்....நம்ம ஆளு!

போனை எடுத்தார் டயலினார்...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஹலோ யாரது? எதிர் முனையில

ஹஹஹஹஹ! நான் தான் ............சென்னை வந்துட்டமில்ல...உன்னைத்தான் பார்க்க வந்துட்டு இருக்கிறேன்!

அய்யொ! தலை நான் திருப்பதியில இருக்கிறேன்!

யோவ்! என்ன கதை வுடுறியா நீதான் பெரியார் பேரனாச்சே! திருப்பதியில வுனக்கு இன்னா.... வேலை?

நான் கோயிலுக்கு வரலை இங்க ஒரு வேலையா வந்தேன்!

என்ன வெளையாடுறியா ங்கொய்யால.... மலையில சரக்கு கடை லேது என்கிட்டியே டக்கால்டியா!

அட நம்புயா!  திருப்பதியில ஒரு வேலை டிஸ்டர்ப் பண்ணாதியா...

நான் வித்துவான் ஆகுறது இந்த தத்துவத்துக்கு புடிக்கலை....அடுத்து ஆங் அவரேதான்...



அடுத்து போன் செய்தது...ஆ....மூ....க்கு ஆனா விவரமா போன் போட்டார் நம்ம ஆளு!

ஹலோ! நாங்க இரயில்வேயிலிருந்து பேசுகிறோம் உங்களுக்கு இரயில் கண்டெக்டர் வேலை கொடுத்திருக்கோம் உடனே வெளியூர் பஸ் ஸ்டேன்டுக்கு வாங்க...அப்பாயின்மெண்ட் ஆர்டர் இருக்கு ஒரு ஆப்பாயில் வாங்கிட்டு நேரா வாங்க வாங்கிக்கலாம்.....

யோவ்! டுபுக்கு உன் எருமைக்குரல் எனக்கு தெரியாதா? என்னையே காலாய்க்கிறியா இரு வருகிறேன்...என்றார் ஆ...மூ...

வாய்யா..வாய்யா..!

சிறிது நேரத்தில் வருகிறார் ஆ..மூ...,அவருடன் ஹோட்டல் பவனும் வருகிறார்,இவரை பார்த்ததும் ஹோட்டல் பவன் ஓடப் பார்த்தார்..! ஆ...மூ...வின் பல்க் பிடியை விட்டு தப்பிக்க முடியாமல் மாட்டிக்கிட்டார்...மூவரும் தம்பூரா வாங்க....சீசீ கிதார் வாங்க கடைக்கு போனார்கள் டொயிங்...டொயிங்....



Music Instrument விற்கிற கடைக்குள் நுளைந்தார்கள்..

வாங்க சார் என்ன வேணும்? என்ற கடைப்பையனிடம் ஆ..மூ...தம்பூரா வேணும் என்றதை கேட்ட கடைப்பையன் ஜெர்க் ஆனான்!

யோவ்! தம்புரா இல்லையா கிடார்! என்றார் நம்ம ஆள்!

அதாங்க...! சரஸ்வதி வெச்சிருக்குமே அதுதானே! இது பவன்!

மைக்கேல் ஜாக்சன் வெச்சிருப்பார்ய்யா.......

அது மைக்குதானே! என்றார் ஆ..மூ...

அய்யோ ஆண்டவா இந்த ஞானசூனியங்கள் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டியே!

ஆமா...! இவுரு பெரிய தியாராஜபாகவதரு....

அதற்குள் கடைப்பையன் கிதாரை கொண்டு வந்து கொடுக்கிறான்...ஆ..மூ...உற்சாகம் அடைந்து எங்கேயும்..எப்போதும்.....டுரிடுரியோரியோயோயோ...எசப்பாட்டு பாடிக்கொண்டே டுயிங்..டுயிங்..என்று கிதாரை வாசித்துப்பார்க்கிறார்! பவன் அவரை சமாதனப்படுத்தி ஒரு இசைக்கச்சேரியை தடுத்து விடுகிறார்.

அடுத்து கீபோர்டு...! காட்டுங்க என்கிறார் நம்ம ஆளு!

டென்சன் ஆன ஆ..மூ..யோவ் ஆர்மோனியப்பெட்டின்னு சொல்லுயா...என்கிறார்!

யப்பா! சாமீ! முடியலை...! எதையோ ஒன்னு நம்ம ஆளு அதைவிட டென்சன் ஆகிறார்...!

கீபோர்டு வர அதையும் வாங்கிக்கொண்டு மீண்டும் இரயில் நிலையத்தில் வழியனுப்ப வருகிறார்கள்! அங்கே இரயில் வரும்வரை சும்மா இருப்பானே என்று மூவரும் கச்சேரியை ஆரம்பிக்க....

மக்கள் பீதியுடன் இவர்களை பார்க்க...

இரயிலும் வந்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைக்கின்றது

கிதாரையும் கீபோர்டையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு
நம்ம ஆளு இசைக்கனவுடன் தூங்க....இரயில் சிதம்பரத்தை நோக்கி சிக்புக்சிக்புக்.................

டிஸ்கி : விரைவில் ஒரு இசைப்பதிவு வரலாம் எல்லாரும் பிளாக்க விட்டே ஓடிப்போயிருங்க...



Read more...

மாசி சீட்டு நுனியில ஊசி!

>> Friday, March 16, 2012

நம்ம அண்ணன் கோவை மணி ரொம்ம நாளைக்குப் அப்புறம் தயாரிச்சு, கிச்சாங்கற டைரக்டர் இயக்கிய படம் மாசி! ஆக்சன் கிங் ரசிகர்களுக்கும் நீண்ட நாளைக்கு பிறகு ஒரு விருந்து! விருந்து ஓக்கே வேட்டு சத்தம்தான் கொஞ்சம் ஓவர். தெலுங்கு வில்லன்ஸ், வில்லிஸ் ஆல் பேரும் படத்தில ஆஜர் !படத்தோட கதை ரொம்ம சிம்பிள் கொஞ்சூண்டு வேட்டையாடு விளையாடு, கொஞ்சூண்டு காக்க...காக்க.....என மிக்ஸ் செய்த காக்கா கக்கா போன கதை...



நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் (ஆரம்பிச்சிட்டாங்க) நம்ம என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் அர்ஜுன், அவருடைய ஜோடி (மனைவி) ஆன்ட்டிய?! சுட்டு கொல்றாங்க.....கோவம் வந்த  அர்ஜுன், ரவுடிகளை சும்மா இடைவேளை வரைக்கும் குருவி சுடற மாதிரி பொட்டு..பொட்டு என்று ரவுடிகளை சுட்டுகிட்டே இருக்காருங்க....அப்பாலிக்கா மும்பையில் இருந்து கொண்டு இங்கே சென்னையில் ரவுடியிசம் செய்யும் நாகாவாக கஜினி வில்லன் ஒரு கேங், சென்னை காசி மேட்டுல இருந்து கொண்டு ரவுடியிசம் செய்யும் பொன்னம்பலம், அவருக்கு உதவும் ஹோம் மினிஸ்டர் கோட்டா சீனிவாசராவ், என் இரண்டு குரூப் இவிங்க சண்டை நடக்கின்ற போதே குறுக்க அர்ஜுன் புகுந்து துவம்சம் பண்ணுகிறார் நம்மளையும் சேர்த்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா........முடியலை!

இந்த ஆன்ட்டிதான் முதல் ஜோடி....

எதிர்பாராத சதியில  அர்ஜுன், கைது செய்யப்படுகிறார், நாகா அவரை விடுதலை செய்ய உதவுகிறார், அம்மாம் நேர்மையான போலீஸ் டக்கென்று ரவுடிகளுக்கு வேலை செய்கிறார், பொன்னம்பலம் குரூப்பை அடியோடு காலி செய்கிறார், பொன்னம்பலத்தை மட்டும் உயிரோட விடுகிறார், பொன்னம்பலத்தை கொல்ல வரும் நாகா தம்பி பொன்னம்பலத்தை கொன்றவுடன், நம்ம அர்ஜுன் அவனையும், ஹோம் மினிஸ்டரையும் கொல்லறார். ஆத்திரம் அடைந்த நாகா சென்னை வருகிறார் லபக்கென்று தமிழ்நாடு போலீஸ் புடிச்சிக்குது.....ஏன் தமிழ்நாடு போலீஸ் மும்பை போய் புடிக்க முடியாதா? அப்படியெல்லாம் கேட்கப்படாது!

அப்புறம்  அர்ஜுனை துப்பாக்கியில சுட்டுவிடுகிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும்  அர்ஜுன் அவரோட  ஜுனியர் உதவியால... நாகா கதைய முடிக்கிறார் கதை புரிஞ்சுதா....? புரியலையினா விடுங்க! எனக்கும் புரியலை!

இரண்டாவதா வர்ற ஆன்ட்டி!
கோவாலு அழுத இடங்கள்

முதல் ஜோடி ஒரு ஆன்ட்டி கில்மாவா வருது ஒரு ரீலில் கொன்னுடுறாங்க நான் கூட கதைநாயகின்னு நெனைச்சு தேம்பி..தேம்பி....அழுதேன்

இரண்டாவதா ஒரு ஜோடி(ஜிகிடி அல்ல) பாப்பாவும் ஆன்ட்டிதான் அப்ப அப்ப வருது. ஒரு டூயட் வேற....!அந்த பாட்டு போட்டப்ப தியேட்டரில் நான் மட்டும் தான் இருந்தேன் (திருப்பூர்ல தியேட்டர் உள்ள சிகரட் விற்பனை கிடையாது) அதை நெனைச்சு குமுறி குமுறி அழுதேன்...

வீட்டுக்கு வந்தும் அழுதேன்...ஏன் தெரியுமா டொமார்..டொமார்....துப்பாக்கி சத்தம் படம் முழுவதும் கேட்டுகிட்டுடே இருந்தா காது வலிக்காதா? காதுக்குள்ள கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்ங்

நல்லெண்ணைய  பூண்டு போட்டு நல்லா காய்ச்சி கொஞ்சம் காதுக்குள்ள விட்டுட்டுப் படுத்தேன் இப்ப தேவலாம்....படம் பார்த்திட்டு வந்ததும் நக்கீரன் போன் போட்டாரு எங்க போனே என்று கேட்டார் "மாசி" படத்திக்கு போனேன் என்று சொன்னேன் என்னமோ சொன்னாரு என்னனு சத்தியமா கேட்கலைங்க.....

Read more...

தந்தையர் தேசம்!

>> Friday, March 9, 2012




உடல் நிலை சரியில்லாத பொழுதுகளில்..
என் மகனை தோளில் போட்டுக் கொண்டு
ஆறுதலாக நடக்கும் போது!
கண்ணீர் சொரிகின்றது
என் மகனின் மீதான
பாசத்தினால் மட்டுமல்ல...
என் தந்தையின்
நினைவுகளாலும்தான்...

Read more...

மகளிர் தினம்!?

>> Wednesday, March 7, 2012



Read more...

"கோடிஸ்வரன் நிகழ்ச்சிக்குப் போன பூபாலு!?"

>> Tuesday, March 6, 2012


வணக்கம் மக்களே! இன்னிக்கு நான் கதை சொல்லப்போறேன் பூபாலு கதை, ரொம்ம நல்ல பைய அவன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவன் வாழ்க்கைய புரட்டி சப்பாத்தி, பூரி, ஆம்லெட், ஆப்பாயில், எல்லாம் போட்டிருச்சு.....கதையக் கேளுங்க.......

ங்க ஊர்ல பூபாலு..பூபாலுன்னு ஒர்த்தன் இருந்தான் (ஒரே ஆளுதான்)அவன் வடிகட்டிய முட்டாளைவிட... வடிகட்டிய நாயர் கடை டீ மாதிரி! அவன் படிச்சது பெரிய படிப்பு என்ன தெரியுமா...? ஒன்னாம் வகுப்புல ஒருவருசம், இரண்டாம் வகுப்புல இரண்டு வருசம், மூனாவதுல மூனு வருசம், நாலாவதுல நாலு வருசம்,அஞ்சாவதுல அஞ்சு வருசம் அஞ்சாம் வகுப்பு முடிக்கறதுக்குள்ள பையனுக்கு 19 வயசாயிடுச்சு...! பயலுக்கு அரும்பு மீசையே வந்திடுச்சு...! இதுக்கு மேல படிச்சா ஸ்கூலுக்கு அவமாணம்ன்ட்டு வாத்தியார்களெல்லாம் சேந்து கழுத்த பிடிச்சு தள்ளிய மாதிரி பாஸ் பண்ணிவுட்டுட்டாங்க....

Read more...

பிரிவின் வலி!

>> Saturday, March 3, 2012




Read more...

அட்ராசக்க சிபி,கேரளா சேச்சி, ஜாங்கிரி! பூங்கிரி! கதகளி!

>> Thursday, March 1, 2012


சிபிக்கு ரொம்ம நாளா கார் வாங்கனும்ன்னு ஆசை! எந்த கார் வாங்குறது என்று குழப்பம், நம்ம சம்பத் கிட்ட போன் போட்டு கேட்டு மாருதி ஆல்டோ வாங்கலாம் என்று முடிவு செய்து, கார் ஷோரூம்க்கு போறார். 

அங்க ஒரு மளையாள சேச்சி கார் பற்றி சொல்லுது! நம்ம ஆளு என்ன நினைச்சார்ன்னா நமக்கு காரை பற்றி எதுவுமே தெரியாத மாதிரி காட்டினா ஏமாத்திருவாங்க (சத்தியமா காரணம் இதுதான் சேச்சி கிட்ட சீன் போடலை)

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP