அதடு-என்கின்ற ஆண்மையை தொலைத்த நாய்!

>> Tuesday, June 2, 2015

அதடு என்று ஒரு பெயரா..? என நீங்கள் கேட்கலாம், இந்தப் பெயரை எப்படி நான் இவனுக்கு வைத்தேன் என்று தெரியவில்லை....ஆனால் அதடு என்றழைத்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓடி வருவான். அவன் ஓடி வரும் போது சத்தம் வராது...பூனைப் பாய்ச்சலும் காற்றைக் கிழிக்கும் வேகமும் ஒரு வேட்டையனுக்கு மிக்க அவசியம்.
அவன் வரும் வேகம் எனக்கே சில சமயம் பயம் தரக்கூடியதாக இருக்கின்றது. வேட்டை நாய்களை தேர்ந்தெடுப்பதில் பல நுண்ணிய விசயங்கள் இருக்கின்றது முழு கருப்பு நிறம், சிவந்த கண்கள் வியர்த்த மூக்கு, கால்கள் வலுவாகவும்.. முன்னங்கால்களில் ஜந்து நகங்களும் பின்னங்கால்களில் ஆறு நகம் வீதம் மொத்தம் இருபத்திரண்டு நகங்களும் வால் முதுகு தொடாமலும், காது கிழிய வள்வள்ளென்று குலைக்காமலும் ஆனால் புதிய மனிதர்கள் கண்டால் மெலிதான ஆனால் ஆக்ரோஷமான உறுமலும் மிக்க அவசியம்.
பாம்பு கண்டால் தொடை நடுங்குதல், தேள் கண்டால் துள்ளுதல் வேட்டை நாய்களுக்கு ஆகாது! அதனுடைய பாய்ச்சல் புலியின் பாய்ச்சலுக்கு ஈடானதாக இருந்தாலும் புலி போன்று கழுத்தைக் கவ்வினாலும் இரத்தம் ருசிக்கக் கூடாது, பல் பதியக் கூடாது, வட்டலில் நம் ஆணையை மீறி வாய் வைக்காது இரண்டு நாட்கள் ஆகினும்.
பெரும்பாலும் வேட்டை நாய்களின் வால்கள் முதுகு தொடுமுன் வெட்டி விடுவது நல்லது, இது நாள் வரை அதடு எந்த பிரச்சனையில்லாமல் இருந்தான் இரண்டு நாட்களாக அவனுடைய செயல்பாடுகள் சரியில்லை குருவி முடுக்குவதில்லை, சீழ்க்கையொலி கேட்பதில்லை... ஒரு மாதிரியாக திரிகின்றான் என்ன வென்று ஆராய்ந்தால் வள்ளியூரானின் பெட்டை நாயை மாட்டிவிட்டு வந்திருக்கின்றான், காலைத் தூக்கி அடிக்கடி குறியை நாவால் நக்கியபடி சுகம் அனுபவித்த கிறக்கத்தில் கிடக்கின்றான்...
இனி விடக் கூடாது என முடிவெடுத்து அடுப்பு சாம்பலும், சூப்பர் மேக்ஸ் புது ப்ளேடும் வாங்கி அசந்த நேரத்தில் அவனுடைய விரையை சரக்க்க்க்கென்று அறுத்து சாம்பலை அடித்து விட்டேன். விரையை மூணு முக்கு ரோட்டில் புதைத்து விட்டேன்....அதடு இப்பொழுதெல்லாம் சீழ்க்கையொலிக்கு உடனே அடி பணிகின்றான் ஆனால் என்ன மூணு முக்கு ரோட்டில் அவன் ஆண்மையைப் புதைத்த இடத்தை அடிக்கடி முகர்ந்து பார்த்து பெருமூச்சு விட்டுக் கொள்கின்றான்..!

Read more...

ஆண்டை பாண்டேவும்...பகுத்தறிவு வீரமணியும்

>> Monday, June 1, 2015


வழக்கமாக பாண்டேயின் எரிச்சலான கேள்விகளும்....எதிர் தாக்குதல் தர திராணியின்றி உளறுவதும் அந் நிகழ்ச்சி அவ்வளவு ஈர்ப்பில்லாமல் இருந்தது ஆனால் நேற்று அப்படியல்ல..பாண்டேவின் கேள்விகள் இந்துத்துவாவின் கேள்வி போல் இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல வீரமணி தடுமாறியது...பகுத்தறிவும், கடவுள் மறுப்பும் சும்மா வெத்து வேட்டா என்று கேள்வி எழுகின்றது.

வைக்கம் வீரர் என தி.கவினாரால் புகழப்படும் பெரியார் ஏன் தமிழ்நாட்டு கோயில்களில் ஆலயப் பிரவேசம் நடத்தவில்லை என்ற கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் கூற முடியாமல் நழுவிக் கொண்டார்.
தாலியறுப்பு போராட்டம் மாதிரி பர்தா பற்றிய விவாதம் நடந்த போது ஏற்பட்ட வன்முறையை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை என்று கேட்ட போதும் நழுவிவிட்டார்.
திகவினரும் தாலி கட்டிக் கொள்கின்றார்கள், அது கூடாது என்று சொல்லியும் பெண் வீட்டார் விருப்பத்திற்காக என்று சொல்லுகின்றார்கள் என்று கூறியும் அதிர்ச்சியடைய வைத்தார்!
கீழ்வெண்மணி போராட்டத்தின் போது இடதுசாரிகள் வன்முறையை தூண்டியதால் உயிர் இழப்பு ஏற்பட்டது, புரட்சி என்று வன்முறையை தூண்டிவிடாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு ஏற்ப்பட்டிருக்காது என்று பெரியார் சொன்னதை பாண்டே சொன்னபோது தடுமாறினார். அன்றைய சூழ்நிலையில் மக்கள் அனைவரின் கருத்தும் இதுவாக இருந்தது. அது கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வி என விமர்சிக்கப்பட்டது என்பது உண்மை! அதை வீரமணி கூறவில்லை!
ராமன் இல்லை என்னும் நீங்கள் ஏன் அல்லா இல்லை, ஜீஸஸ் இல்லை எனக் கூறுவது இல்லை என்ற கேள்விக்கு கடவுள் இல்லை என்றாலே அனைத்து கடவுளும் இல்லை என்பதாகும் என்ற பதில் ஜால்ஜாப்புதான்.
கிருத்துவமும், இஸ்லாமும் என் சகோதரனை அரவணைத்துக் கொள்கின்றன, வர்ணாசிரம கொள்கை, மனுதர்மத்தின் படி தாழ்த்தப்பட்டவன், சூத்திரன், வேசிமகன், கீழ்மகன் என்று கூறுவதில்லை, சாதியில்லை அதனால் அவர்களை அவ்வளவாக விமர்சிக்கப்படுவதில்லை என்றார்.
கிருத்துவத்தில் சாதி பாகுபாடு உண்டு, அது தொடர்பாக கலவரங்களும் நடந்து உள்ளது, இஸ்லாமிலும் பிரிவு உண்டு என்ற போது
வீரமணி கூறியது அவர்கள் பிராமணர்களையும், வருணாசிரம கொள்கையை அந்த மதத்திலும் தொடர்கின்றார்கள் என்றார் இதற்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

பெரியார் 45வயது வரை நாயக்கர் என்று அழைக்கபட்டார் ஏன்? 
நாயக்கர் என்பது அக்காலத்தில் மரியாதை நிமித்தம் அழைப்பது ராஜாஜியை ஆச்சாரி என்று அழைப்பதைப் போல என்று கூறி ஒரு குண்டைப் போட்டார்.

திருமாவளவன் ஆசிரியராக இருக்கும் பத்திரிக்கையில் வீரமணி ஒரு பேட்டியில் ஆமாம் தலித்துகளை திகவிலும் கீழ்நிலையில்தான் வைத்திருக்கின்றோம் என்று கூறியதாக உள்ள செய்தியை சுட்டிக் காட்டியதற்கு பதிலே கூறவில்லை!
அம்பேத்கர் மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்று வலியுறுத்தியவர், (அதற்கு காரணம் புத்தமதம் பால் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக என்பது உண்மை) அவருடைய பிறந்த நாள் அன்று மாட்டுக்கறி உண்ணும் சடங்கு வைப்பது நியாயமா..? என்ற கேள்விக்கும் சரியான பதில் இல்லை!
திகவிலும் வருணாசிரம முறைப்படிதான் பதவிகள் வழங்கப்படுகின்றது என்ற கேள்விக்கும் பதில் இல்லை! இஸ்லாம், கிருத்துவம் பற்றிய கேள்விகளுக்கு மிகக் கோபப்படுகின்றார், நீங்க விவாதத்தை திசைமாற்றி கொண்டு போகின்றீர்கள்....என்று பதறுகின்றார் வீரமணி அய்யா அவர்கள்! பார்க்கும் நமக்கு இந்து என்கின்ற மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மக்களை கடத்திச் செல்லும் வேலையை திக தீவிரமாக செய்கின்றதோ என்கின்ற ஐய்யம் ஏற்படுகின்றது அது உண்மையா? இல்லை நிகழ்ச்சி நடத்திய பாண்டேவின் திறமையா? என காலம் பதில் சொல்லும்.
0000

Read more...

பேஸ்புக் கவிஞர்கள்

வீதியெங்கும் சைக்கிளில்
சைட்டடித்த காலம் போச்சு!
கோயிலில் காத்திருந்து
காதலித்த காலம் போச்சு!
50ரூபாய் டாப் அப்
இண்டர் நெட் கனெக்ஷன்
மொபைலில் கிடைக்குது
பேஸ்புக்குல
பிகர மடக்குலாமுன்னு
பொய்யான தகவல நம்பி!
அங்கங்கே போட்டா ஷாப் டச்சப்
ப்ரபைல் படத்தில் அஜித்தாய்
கண்ணுசாமி
பேக் ஜடியான்னு தெரியல...
கெழட்டு ஐடியான்னு தெரியல...
சமந்தா போட்டா வச்சிருகாளுக
அம்மத்தாவா இருக்காளுக...
என்றபடி தினப் புலம்பல்கள்
இன் பாக்ஸில்
கருப்பு அழகிகள் கடல
போடுறாளுக...
ஒண்ணும் வௌங்கல..
என்கின்ற அலம்பல்கள்
நயன்தாரா படம் வச்சவ
நாலு நாளு லைக் போட்டா
இரண்டு போட்டா கமெண்ட்
ஒரு சிரிப்பான்
அடிங் மடங்கும் போலன்னு
இன்பாக்ஸில் நூலு விட்டேன்
அப்புறம்தான் தெரிஞ்சது அது
ஊல மூக்கு கருவாச்சின்னு..!
என்றும் புலம்பலில்
கவிஞர் கண்ணுசாமி

Read more...

கீ.வீரமணியின் தாலியறுப்பு ஒரு எதிர்வினை!

ப்ரேவ்பெல் ஏரி தடத்தில் தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் வந்து கொண்டிருந்தார், ஒரு புறம் ஏரித் தண்ணீர் மறுபுறம் வயல். ஒரு மாடு மேக்கி உதாரணமாக வௌங்காதவன் மாட்டை அந்த தடத்தில் கட்டி வைத்து விட்டு ஒரு பின்நவீன நாவலை மும்மரமாக படித்துக் கொண்டிருந்தார்.
ப்ரேவ்பெல் வந்த சமயம் பார்த்து மாடு கயிறை இழுத்துக் கொண்டு தடத்தை மறித்து புல்லை மேய்ந்து கொண்டிருந்தது. ஹாரன் அடித்துப் பார்த்தார், நகர வில்லை முட்டாள் மாடு! கடும் கோவத்தில் வண்டியை நிறுத்தி விட்டு
”ஏ...மாடே நகர்ந்து விடு நான் ஒரு சமூக போராளி தாலியையே அறுத்தவன் உன் மூக்கணாங் கயிறை அறுப்பதற்கு சில நொடிகள் போதும்” என்று கர்ஜ்ஜித்தார்!
மாடு வாலை தூக்கியது சொத்தென்று சாணி போட்டது.
”அந்த பயம் இருக்கட்டும் உடனே விலகு நான் செல்ல வேண்டும்” என்றார்.
மாடு அது பாட்டுக்கு மறுபடியும் மொசுக் மொசுக்கென்று புல்லைக் கடித்தது!
கடுங் கோபத்தில்
”ஓ ஆரிய மாடே பிராமண வந்தேரியே...இந்துத்துவா விலங்கே விலகு...மனித நேயருடன் வந்து பிரியாணி போட்டு விடுவேன்” என்றார்.
சொர்ர்ர்ர்ர்....என்று மூத்திரம் பெய்தது!
கோபம் தலைக்கேற பக்கத்தில் இருந்த ஒரு கம்பை எடுத்து விளாசினார்!
அப்பொழுதும் நகரவில்லை..!
சோர்ந்து போய் அங்கேயே அமர்ந்திருந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பின் அந்த வழியே ராசு தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் மணிக்கு 15மைல் வேகத்தில் வந்து கொண்டிருந்தார்...
ப்ரேவ்பெல் அமர்ந்திருப்பதைப் பார்த்து ”என்ன அய்யா ஆச்சு” என்றார்.
”இந்த ஆரிய மாடு நகர மறுக்கின்றது இது இந்துத்துவா சதி” என்றார்!
ராசு ”புர்ர்ர்ர்ர் ட்விட் ட்விட் ஹைஹை என்று சத்தமிட மாடு சமர்த்தாய் நகர்ந்து அந்தப்பக்கம் போனது!
தலைவரே மாட்ட முடுக்க ”டுர்ர்ர் ட்விட் ஹைஹை” அப்படிங்கற வார்த்த போதும் அதை அடிக்கக் கூட வேண்டியதில்ல அப்படித்தான் இந்து மதமும் அதில் உள்ள குறைகளைக் களைய சமூக மாற்றமும், கல்வியறிவும் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு தடியால் அடித்தால் மாடு மூத்திரம்தான் பெய்யும் எ்னறார் தோழர் ராசு!

Read more...

உத்தமவில்லன் ஒரு கூத்தாடியின் பார்வை!

“நால்வரைக் கடித்த நாகம் அய்ந்தாம் ஆளைக் கடிக்கையிலே
பையில் விஷமில்லையே அதனால் பல் பட்டும் பிழைத்து விட்டான்.
உத்தமன் பிழைத்த கதை பகுத்தறிவாளர்களுக்கு விளங்கிவிடும்”

அதாகப்பட்டது என்ன வென்றால் உத்தமவில்லன் திரைப்பட விமர்சனத்தில் ஒரு சக இணைய மொண்ணை இது ஹாஸ்யப்படம் என்றும் ஓரிடத்திலும் அத்தகைய ஹாஸ்யத்தை தான் காணவில்லையென்றும் புலம்பியிருந்தார். அவருடைய விமர்சனம் படித்து அவருடைய நகைச்சுவை உணர்வு கண்டு யாம் விழுந்து விழுந்து சிரித்தோம். நிற்க அதில் என்ன நகைச்சுவை என்று நீங்கள் வினவலாம், ஜிகர்தண்டா திரைப்படம் கண்டிருக்கின்றீர்களா..? அதில் அசால்ட் சேது நடித்த அ.குமார் திரைப்படத்தில் அவ்வளவு நகைச்சுவையில்லையென்று எழுதினால் எப்படியிருக்கும்...அப்படித்தான் எமக்கும் தோன்றியது.

நானொன்றும் பெரிய அறிவுஜீவியோ உலகத்திரைப்படம் கரைத்துக் குடித்த அதி மேதாவியோ கிடையாது சராசரி கூத்துகளை ரசிக்கும் ரசிகன். அதிலும் கூத்தாடி கமல் படங்களை விரும்பிப் பார்க்கும் சராசரி ரசிகன்!

இதில் எனக்கு தோன்றிய சில அல்லது என் சிற்றறிவுக்கு எட்டிய சில விசயங்களை சொல்லாம் என்று எனக்கு கையறிப்பு ஏற்பட்டதால் எழுத்தாணியில் கிறுக்கி வைத்த்தை இங்கே பதிவிடுகின்றேன்.

இந்தக் கூத்தில் எப்பொழும் கமலுடன் இருக்கும் அதே குழுவும் இதில் இருக்கின்றது, நாசர், K.விஸ்வநாத், டெல்லி கணேஷ் மன்னிக்கவும் அவர் இல்லை அதற்கு பதிலாக M.S.பாஸ்கர் புதிதாக இணைந்திருக்கின்றார், ”அழுகாதிங்க உங்க மூஞ்சிக்கு செட்டாகல” என்று கமலே சொல்லி நம் விமர்சனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது கண்டதுக்குறியது.

பூஜா குமாரி ச்சே.. பூஜா குமார் அவர்கள் நடனமாடும் போதெல்லாம் பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா உயிரே…உயிரே…பாட்டில் ஓடிவரும் பொழுது ஏற்படுகின்ற அதே அதிர்வுகள் என் போன்ற இளைஞர்களுக்கு! ஏற்படுகின்றது.
கமல்ஜீ புகை, மது எவ்வளவு தீங்கானதோ அதே போல் பூஜா குமாரிகளைக் காண்பது சராசரி ரசிகனின் கண்களுக்கு தீங்கானது என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் என நம்புகின்றேன், ஜநாக்ஸ் திரையில் உங்களுடைய புழு வெட்டு விழுந்த மீசை எவ்வளவு அப்பட்டமாக தெரிகின்றதோ அதே போல் பூஜாவின் விடைத்த நாசியும் தளர்ந்த தொடையும் வயதை காட்டிக் கொடுக்கின்றது அரே சம்போ!
பார்வதியை நம் தமிழ் கூத்துகளில் கருப்பாக காட்டியே தமிழ் சமூகத்திற்கு மிகப் பெரிய அவப்பெயரை உண்டாக்கி விட்டார்கள்..இந்த தமிழ் கூத்தாடிகள். புதிதாக பறித்த ரோஜா மலர் போன்று தன்னுடைய உண்மையான தந்தையின் மீதான வெறுப்புடன் அவர் பேசுவதும்/ அவர் பேசுவதை விட கண்கள் பேசுகின்றது… எழுந்து கை தட்ட வேண்டுமென்று தோணுகின்றது. குடோசு மோளே...!
ஆண்ட்ரியா அம்மணி கண்களில் கமல் மீதான காதலும் காமமும் ஒரு சேர உதடுகளை கவ்வும் இடங்களில் ஏனோ கமல் மீது சற்று இல்லை...இல்லை மிகப் பெரிய ஒரு கண்டத்தின் அளவு பொறாமை மேலிடுகின்றது. காருக்குள் இரண்டு ஆண்களுக்கு நடுவில் இருவரும் காமம் மேலிட குற்றவுணர்வுடன் அணைத்துக் கொள்வது ஆண்ட்ரியா ஒரு மிகச்சிறந்த கூத்தி ச்சே கூத்தாடி என்பதில் ஐயமில்லை.
நாசரும் கமலும் மாறி மாறி கூத்தாடும் போது நாசரின் சாயல் கமலிடம் தெரிவது எனக்கு மட்டுமா என அறியவில்லை மக்காள்! ஆனாலும் பரவாயில்லை கமலுக்கு அது இழுக்கு அல்ல செருக்குதான். 
பாலசந்தர் சில காட்சிகளில் வருவார் என நினைத்திருந்தேன் படம் முழுக்க வருகின்றார், “பின்னிட்டடா டேய்...” என்று அடிக்கடி அவர் சிலாகிப்பது உறுத்துகின்றது. கதைப்படி ஒரு கமர்சியல் நடிகர் கூத்து கலைஞனாக நடிப்பது சாவாலான காரியம் உடனடியாக சிறப்பாக நடிப்பதென்பது இயலாததாகும் ஆனால் இயக்குநரான மார்கதரிசி(பாலசந்தர்) ஒவ்வொரு காட்சியிலும் சிலாகிப்பது எப்படி சாத்தியமாகும்.

எந்த நடிகனுக்கு கிடைக்காத விஷயம் நமக்கிருக்கும் சுதந்திரம், மகனுக்கும் தந்தைக்கும் உண்டான புரிதல் பாசப்பிணைப்பில் அச்சுதந்திரத்தை கலைக்கும் விதமான இரசிகர்களின் கூச்சல்…கமல் சற்றே அழுகையுடன் இது பிரைவேட்ப்பா போங்கப்பா…என்று மன்றாடுகின்றார், ஒரு உட்ச நட்சத்திரம் குடும்பத்தைப் பொறுத்த வரை வெறும் பல்புதான் என்பது உணருமிடம்.
ஒரு தீவிர இலக்கியவாதி கமல் படம் வரும் பொழுது மட்டும் ரஜினி ரசிகராக மாறி கமல் படங்களை குறை கூறிக் கொண்டேயிருப்பார், மாஜிக்கல் ரியலிசம், சங்க இலக்கியம், கூத்துக்கள் பற்றி விடிய..விடிய…பேசுவார். கமல் படத்தில் இதை கண்டாரா எனத் தெரியவில்லை…இல்லை அவருக்குப் புரியவில்லையா..? யாராவது அவரை படத்தைப் பாக்கச் சொல்லுங்க..மக்காள்!
வானம் நிமிடத்திற்கு ஒரு தரம் ஏதோ ஒரு ஓவியத்தை வரைந்து கொண்டேயிருக்கின்றது..அதே போல்தான் கலைஞனும் கைதட்டலுக்காக தன்னையே சுவராக்கி நடிப்பு எனும் தூரிகையால் வரைந்து கொண்டேயிருக்கின்றான்...இன்று இல்லையென்றாலும் காலம் சொல்லும் கமல் கமல் என்று!

Read more...

கலைஞர் மு.கருணாநிதி எனக்கும் பிடிக்கும்!

எங்க தாத்தா சொல்வார் இந்திராகாந்தி பீரியட்ல மிசா சட்டம் நடைமுறையில் இருந்தது, திமுக ஆட்களைக் கண்டாலே போலீஸ் அடித்து நொறுக்கும் சூழ்நிலையில் நானும், என் அண்ணனும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கையில் போலீஸ் படை தடியுடன் திமுக ஆட்களை அடித்து விரட்டிக் கொண்டிருக்கையில் ஓடி வந்தவர் எங்களை தூக்கி வைத்துக் கொண்டாராம்...! குழந்தைகளை வைத்திருந்ததால் அன்று அடியில் இருந்து தப்பித்தாராம்!
தீவிர திமுக அனுதாபமுள்ள எங்கள் தாத்தா எங்களிடம் கலைஞர் பற்றி சொல்லியே வளர்த்தார், ஒரு முறை சத்தி கூட்டத்திற்கு வந்தவர் நேராக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டார், இரவு பத்து மணி அப்பொழுது டீக்கடை வைத்திருந்தோம், சாப்பிடுங்க என்று தொண்டர்கள் சொல்ல...சரி என்று சொல்லிவிட்டார் அவசரஅவசரமாக எங்கள் டீக்கடையில் உப்புமா கிண்டியிருக்கின்றார்கள் அதை சாப்பிட்டு இருக்கின்றார் அவருடன் தொண்டர்களும் சாப்பிட்ட அந்த புகைப்படம் இன்னும் எங்க ஊர் திமுக ஆட்கள் அனைவர் வீட்டிலும் உண்டு. இப்படி நிறைய கதைகளை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்!

கருணாநிதி பேச வருகின்றார் என்றால் அதிமுக ஆட்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து விடுவார்கள் அந்த கரகர குரல் அனைவரையும் ஈர்த்து விடும்.
அதிமுக கோலோச்சிய எங்களது மாவட்டத்தில் திமுக ஆட்கள் மிக குறைவு, தூக்கநாயக்கன் பாளையம் டி.கே.சுப்பு ஒவ்வோரு முறையும் தோல்வியடைவார் ஆனாலும் உற்சாகமாக நிற்பார் பிரச்சாரம் செய்வார். பிரச்சாரம் செய்யும் போதே ”கருணாநிதி ஒழிக” என்று குரல் வரும், டி.இராஜேந்தர் பேசும் போதெல்லாம் கல் வீச்சு சம்பவம் நடை பெறும். ”கட்கட் கம்மரக் கட் கருணாநிதிய ஒழிச்சுக் கட்டு” என்று அவர் பிரச்சார வேன் வரும் போதே கூச்சலிடுவார்கள், சுவற்றில் ”நாசுவன் கருணாநிதி ஒழிக” என்று எழுதி வைப்பார்கள், ஆனால் அதையெல்லாம் துச்சமாகக் கடந்து தன் பேச்சால் மகுடி ஊதுவார்.
நால்ரோட்டில் ஒருமுறை கூட்டம் நடந்தது. ”என் பேச்சுக்கு கூட்டம் சேரும் ஆனால் ஓட்டு விழாது” என்றார். இரட்டைப் புறா, சேவல் என அதிமுக பிரிந்த போது நீண்ட காலங்களுக்குப் பிறகு திமுக ஆமோக வெற்றி பெற்றது, பழைய ஆட்கள் ஓரங்கட்டப்பட்டார்கள், பணக்காரர்கள் நெருங்கினார்கள், சாதிக் கட்சியுடன் கூட்டணி வைத்தார்கள். ஊழல் திமுகவிற்கு புதிதில்லை சர்க்காரியா, புழு விழுந்த அரிசி புழுத்துப் போன மாவு என நிறைய கறைகள் இருந்தாலும் தமிழுக்காக போராடிய போராட்ட குணமும், அன்று நேரடியான விமர்சனங்களையும், இன்று முகநூல் விமர்சனங்களையும் எதிர் கொண்டு அரசியல் நடத்தும் திராவிட சாணக்கியன் கலைஞர் கருணாநிதி! எனக்கும்

Read more...

புறம்போக்கு - எதிர்வினை

விமர்சனம்

இயற்கை திரைப்படம் மூலம் அறிமுகமான காம்ரேட் ஜனநாதன் தமிழ் சினிமாவில் கப்பல் தொழிலாளர்களைப் பற்றி தமிழ் சினிமாவில் முதன்முதலாக எடுத்தார், அது ஒரு அழகான காதல் கதை பருவகிளர்ச்சியில் தவிக்கும் ஒரு பெண்ணின் மனப்போராட்டமும் அவளைக் காதலிக்கும் கப்பல் தொழிலாளியான ஒரு இளைஞனும் என மிக அழகாக செதுக்கியிருப்பார். அடுத்ததாக எடுத்த ஈ திரைப்படம் பேசியது முதலாளித்துவ நாடுகள் ஏழை நாடுகள் மீது பிரயோகிக்கும் வன்முறையான கிருமியுத்தம் பற்றியதாகும்! முதல் இரண்டாம் யுத்தம் போல் ஆயுத தாக்குதல் அல்ல கத்தியின்றி ரத்தமின்றி ஒரு ஊசி மூலம் நோய் பரப்பி எதிரிநாடுகளை அழிக்கும் அல்லது நிலைகுலைய வைக்கும் ஒரு மனிதாபிமானமற்ற ஒரு போர் முறையாகும்.அது நமது இந்தியாவில் பணத்தாசை பிடித்த மனிதர்கள் மூலம் எப்படி நிகழ்த்தப்படுகின்றது என்பதை மிக தெளிவாக எடுத்துரைத்த மிகச்சிறந்த படம்.

அடுத்தாக புறம்போக்கு படத்திலும் இதே மாதிரியான ஒரு விசயம் அனுகப்பட்டிருக்கின்றது, ஆயுத குப்பையாகும் இந்தியா! இதைப் பற்றி பல இயற்கை ஆர்வலர்கள், போராளிகள் நிறைய எழுதி விட்டார்கள், சிலர் இதை தூக்குத் தண்டனை தேவையா இல்லையா? என்று அலசுகின்ற படமாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால் முக்கிய நோக்கம் அதுவல்ல ஆர்யா(தோழர் பாலு)என்னைப் போர்க் கைதியாக பாவித்து சுட்டுக் கொல்ல வேண்டும் எனக் கேட்கின்றார்.அவர் செய்த குற்றம் இந்தியா ஆயுத குப்பையாகிக் கொண்டிருக்கின்றது என்கின்ற விசயத்தை நாட்டு மக்களிடையே தெரியப்படுத்தவும் கவனம் பெற மனிதகுண்டாக மாறி ஆயுதம் வரும் இராணுவ வாகனங்களை அழிக்க முயல்கின்றார். உயிருக்கு பயப்படாத மனிதவெடிகுண்டு தூக்குத் தண்டனைக்கு எதிராக இல்லை என்பதும் விளக்கமாக தெரிகின்றது. ஆனாலும் தூக்குப் போடும் தொழிலாளிகளின் உளவியலை அலசுகின்றது.

சிங்கம் திரைப்படத்திற்கும் இதற்கும் என்ன சம்மதம் என்று ஒருவர் என்னைக் கேட்டார், பார்வைதான் ஷாம் பார்வையில் இந்த திரைப்படத்தை ஒரு இயக்குநர் பார்த்தால் இது பக்கா போலீஸ் படம், சிங்கம் படத்தில் போலீஸ் நிலையத்தை சூறையாடி கைதியை தப்ப வைப்பார்கள், இது ஆந்திராவில் நக்சலைட்டுகள், நக்சல்பாரிகள் அடிக்கடி நடத்தும் விசயம். நமது தமிழகத்தில் கூட வெள்ளித் திருப்பூரில் வீரப்பன் சில வருடங்களுக்கு முன் சூறையாடி ஆயுதங்களை கொள்ளையடித்தான் பிறகு விசாரனையில் அவனுடன் சில தமிழ் தீவிரவாத அமைப்புகள் இணைந்தது தெரிந்தது.அதை இயக்குநர் ஹரி பயன்படுத்தியிருப்பார்.அதை வைத்துதான் சொன்னேன்.
ஆனால் ஒன்று காம்ரேட்டுகள் முதலாளித்துவ நாடுகள் என எதைக் குறிப்பிடுகின்றார்கள் எனப் புரிவதில்லை...அமேரிக்காவையா..? பேரான்மை, ஈ,புறம்போக்கு படத்தின் மையக் கரு நமது நாட்டின் மீது நிழல் யுத்தம் நடத்தும் நாடுகளைப் பற்றிய சரடுதான்! அப்படி நடத்தும் நாடுகளில் முதன்மையானது சீனா. இந்தப் படம் கூட மாவோயிஸ்ட்டுகளைத்தான் ஞாபகப்படுத்துகின்றது. புரட்சி, போராட்டம், முதலாளித்துவம் என தீவிரவாதம் புரியும் இவர்கள் செயலில் நியாயம் இருப்பதைப் போல் தோன்றினாலும் அவர்களில் பின்னால் கட்டப்பட்டிருக்கும் நூலின் மறுமுனை சீனாவில் இருந்து இயங்குகின்றது. சீனா கூட ஆயுத குப்பையை திபெத்தில் கொட்டி வருகின்றது. இந்திய எல்லைப் பகுதியில் இரும்புச் சாலைபோடுவதின் அவசியம் இது போன்ற ஆயுத குப்பைகளை கழிவுகளை இந்திய பகுதியில் கொட்டுவதற்குத்தான் எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. காம்ரேட்டுகள் இன்னமும் அமெரிக்காவை வையாமல் சீனா என்கின்ற ஏகாதிபத்திய, முதலாளித்துவ, ஆக்கிரமிப்புத்துவ நாட்டை கவனிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

எதிர்வினை


  • Rasu Rasu மாவோயிஸ்ட்டுகள் கூலிப்படை என்ற கருத்தை அழகாக முன்வைத்துள்ளீர்கள் . அதுபோக பொருளாதார ரீதியாக நமது அரசின் துணையுடன் நாட்டுக்குள் ஊடுருவி உறிஞ்சும் அமெரிக்க அரக்கனை விடுத்து ராணுவ ரீதியாக ஆக்கிரமிக்க தொடங்கியிருக்கும் சீனாவின் மீது தோழர்கள் தங்கள் பார்வையை திருப்ப வேண்டும் என்றும் யோசனை சொல்லியிருக்கிறீர்கள் . இன்னும் பாகிஸ்தான் பங்களாதேஷ் ஊடுருவல் போன்றவற்றையும் தோழர்கள் கவனத்தில் கொண்டால் நலம் . 

    ஜம்மு காஷ்மீரின் நிலப்பரப்புக்குள் மையம் கொண்டிருக்கும் ராணுவம் அதை காப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்த இது உதவக்கூடும் .
    Unlike · Reply · 7 · May 18 at 9:31pm · Edited
  • வீடு சுரேஸ் குமார் அமேரிக்கா என்கின்ற ஒட்டகம் கூடாரம் புகுந்த கதையும் உண்டு, இப்பொழுது ஒட்டகம் அமேரிக்கா மட்டும்தானா..? என்பது என்னுடைய கேள்வி தோழர் Rasu Rasu
    Like · Reply · 4 · May 18 at 7:54pm
  • Rasu Rasu சீனா இந்தியாவை நேரடியாக எதிர்க்கிறது . அதுவும் ராணுவ பலத்தின் மூலம் . இதை இந்திய அரசு தான் எதிர்கொள்ள வேண்டும் . ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது நமது அரசின் ஒத்துழைப்புடனே நடைபெறுவது உங்களுக்கு தெரியும் . அதை இந்திய ராசாக்கள் எக்காலத்திலும் எதிர்க்கப் போவதில்லை . 

    இப்படியான எதிரிகளில் ஒரு சாமானிய போராளி யாரை எதிர்த்து போராடுவான் என்பது தான் என் கேள்வி ?
    Unlike · Reply · 6 · May 18 at 7:59pm · Edited
  • வீடு சுரேஸ் குமார் சீனா நம் மீது போர் நடத்தியிருக்கின்றது, அதை இந்திய காம்ரேட்டுகள் ஆதரித்தும் இருக்கின்றார்கள்...! ரஷ்யாவும் ஒதுங்கிக் கொள்ள நமக்கு அமேரிக்கா உதவியது சீனா பின்வாங்கியது, இது வரலாறு! அப்பொழுதே தெரியும் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மாட்டார்கள்... கியூபா கூட சற்று நெகிழ்ந்திருக்கின்றது...! தோழர்! அமேரிக்கா வரவுக்கு..!
    Like · Reply · 1 · May 18 at 8:05pm
  • Rasu Rasu அமெரிக்கா உதவியிருக்கிறது //

    அமெரிக்காவின் உதவிகள் பற்றி உங்களுக்கு தெரியாததல்ல . ஒசாமாவுக்கு உதவியது கூட அமெரிக்கா தான் . 


    நான் கேட்க வந்ததின் சுருக்கம் இதுதான் . பழங்கதைகளை தவிர்த்து விடுவோம் . 

    எதிரிகள் இரண்டு பேர் . ஒருவன் எல்லையில் ஆயுதங்களுடன் சண்டைக்கு நிற்கிறான் . இன்னொருவன் ஆயுதங்களுடன் முழு சுதந்திரத்துடன் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு விட்டான் . இந்த நிலையில் மக்களுக்காக போராடுபவன் யாரை எதிர்ப்பான் . 

    த�விர இவ்வளவு காலம் அந்த ஒட்டகத்தை எதிர்த்து வந்தவனை இன்று அவன் இரும்பு சாலை போடுகிறான் அவனை எதிர்த்து� போராடுங்கள் என்று சொல்வது எவ்வகை நியாயம் ?

    முகநூல் போராளிகள் மனக்கண்ணில் வந்து போகிறார்கள் . உத்தமவில்லன் போதும் இனி புறம்போக்கை ஒரு கை பார்ப்போம் என்று ஆயுதத்தை விநாடியில் திசை மாற்றுபவர்கள் . 
    • வீடு சுரேஸ் குமார் தோழர் சீனா பொருளாதாரரீதியாகவும் உள்ளே நுழைந்தாகிவிட்டது, அதுவும் விஷத் தன்மையுடன் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக், சிலிகான், பொம்மை...செல்பேசி என...
      Like · Reply · 2 · May 18 at 8:24pm
    • Rasu Rasu அதன் மேலான தடைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன . சீன பட்டாசுகள் கூட தடை செய்யப்பட்டாகி விட்டது . 

      ஆனால் ஒரு அமெரிக்க பல்பொருள் அங்காடியை தடை செய்ய ஒரு மத்திய அரசின் அங்கீகாரத்தை மீறி ஒரு மாநில அரசு தான் தன் மாநிலத்தில் தடை பிறப்பித்தது உங்களுக்கு தெரியும் .
      Unlike · Reply · 4 · May 18 at 8:27pm
    • Rasu Rasu நான் சொல்ல வந்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை . தடம் மாறுகிறது . 

      சீனா காரன் நல்லவன்னு சொல்ல வர்ல . ஒரு எதிரிய எதிர்த்து சிறிய குழு ஒன்னு போராடிட்டு இருக்கும் போது இதோ புதுசா ஒருத்தன் வந்திருக்கான் அவன எதிர்த்து போராடுனு சொல்றது எவ்வகை நியாயம் ?:-P
      Like · Reply · 4 · May 18 at 8:32pm
    • Murugesan Puliyur விவாதத்தில் பகத்சிங் பற்றியும் பேசலாமே தோழர் வீடு, தோழர் ராசு.
      Unlike · Reply · 1 · May 18 at 9:34pm
    • வீடு சுரேஸ் குமார் நான் சொல்லவந்ததை நீங்க புரிஞ்சுக்கல...வீதி நாடகம் முதல் செல்லுலாய்ட்டு வரை அமேரிக்க ஏகாதிபத்தியம் என பேசும் காம்ரேட்டுகள் ஏன் சீனாவைப் பற்றி பேசுவதில்லை, இறைச்சிக் கழிவுகளை கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆளும் போது தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டினார்கள்...உள்ளூர் பிரச்சனையில் குரல் எழுப்பிய காம்ரேட்டுகள் அதில் மௌனம் சாதிப்பது ஏன்..? முல்லைப் பெரியாறு, மற்றும் கோவை எல்லையில் அணை கட்டியதை எதிர்த்து அறவழியில் போராடிய விவசாயிகளை மாட்டை அடிப்பது போல் அடித்த கேரள அரசை ஒரு முக்கல் முனகலில் கூட விமர்சனம் செய்யாதது ஏன்..? சீனா கடை விரிப்பதை துளி கூட கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? சீனாவை எதிர்த்த போராட்டங்கள் அனைத்தும் சிவகாசி பட்டாசு உட்பட வியாபாரிகள், தொழிலாளர்கள், மற்றும் தனிப்பட்ட மக்கள் இயக்கங்களின் எதிர்ப்பு மூலமே விரட்டியடிக்கபட்டது ஒழிய காம்ரேட்டுகளால் அல்ல...! புதுசா வருபவன் கம்யூனிச நாடு என்பதால் நீங்கள் எதிர்ப்பதில்லை அதுதான் உண்மை!
    smile emotic

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP