பதிவர்சந்திப்பில் பச்சைக்குதிரை தாண்டிய பதிவர்!

>> Monday, August 27, 2012



டிஸ்கி : நான் பதிவர் சந்திப்புக்கு போகலைங்கறது எல்லாருக்கும் தெரியும்..! சில காரணங்களுக்காக நான் போகமுடியாத சூழல் ஏற்பட்டாலும் எனக்கு ரன்னிங் கமெண்ட்ரியா ஒரு பிரபல பதிவர் கம் அலக்ஸா ரேங் கம் பிகாஸோ என ரவுண்டு கட்டியடிக்கும் நாய்-நக்ஸ் எனக்கு அவருடைய வாக்கி டாக்-கி யில் சொல்லிக் கொண்டே வந்தார் அது............



நான் இப்போ இரயில்வே ஸ்டேசன்ல இருக்கிறேன் டிக்கட் வாங்கப் போறேன் அங்கே நடந்த சம்பாஷனைகள்



''சென்னைக்கு முதல் வகுப்பு இருக்கா..?''

''இல்லை…!''

''இரண்டாம் வகுப்பு இருக்கா…?''

''இல்லை..!''

''வித்தவுட் இருக்கா…?''

''ஙே…''

''சரி…!சரி….!முறைக்காதே அன் ரிசர்வ் ஒன்னு கொடு…!''

டிக்கெட்டை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து சில்லுன்னு ஒரு ''பீர்'' அடித்துக்கொண்டு நாலு மசாலா தோசைய சாப்பிட்டு வண்டிக்கு வந்தேன், வண்டி கிளம்பியது.

சென்னை வந்து ''எழும்பூர்'' இரயில் நிலையத்தில் இருந்து அண்ணன் ''ஆயிரத்தில் ஒருவன் மணி'' என்னைக் கூட்டிக்கிட்டு போனார், அண்ணே..! நீங்க ''எம்.ஜி.ஆர்'' மாதிரியே இருக்கீங்க என்றேன், இடுப்பில் வைத்திருந்த சாம்பார் கரண்டியால் ''பொய் சொன்னே போஜனம் கிடைக்காது...!'' என்று, மொடோர்…!மொடோர்…!என்று என் மண்டையில் வைத்தார், தலையை தடவி முடிக்கும் நேரத்தில் ஹோட்டல் ரோகினி வந்தது. ''ஏண்ணே…! இந்த ஹோட்டலா..? தாஜ்ல போடலையான்னேன்..?''  மறுபடியும் அவர் கை கரண்டிக்கு போக குண்ட்ரு..! குண்ட்ரு..! என்று ஹோட்டலுக்குள் ஓடிவிட்டேன்.

எனக்கான அறையில் ஈரோட்டு வக்கீல் நண்டுநொரண்டு இருந்தார்…! அவரிடம் போன் நெம்பர் வாங்கி அங்கியே போன் போட்டு பேசினேன். டென்சனான அவர் ''உன் மேல கேஸ் போட்டிடுவேன் ராஸ்கோல்'' என்றார்…ஹிஹி…! பழக்க தோசம் சார் என்றேன்.

ஆருர்மூனாவுக்கு போன் போட்டேன்….''என்னய்யா பதிவர் சந்திப்புன்னு போட்டாலே சைட்டிஸ்க்கு கருவாடு வறுத்துட்டு வர்ற ஆளுக நாங்க... நீ…சரக்கே கிடைக்கும்ன்னு போஸ்ட் போட்டுட்டு இன்னும் வரலை..!'' என்றேன் அதுக்கு அவர் ''நக்கீரர் இருய்யா வருகிறேன்'' என்றார்.

நாலு பாட்டில் பிசிலரி பாட்டிலோடு வந்தார் ஆருர்மூனா. எங்கியா சரக்கு என்றேன்..! ''யோவ் நக்கீரரே உம் சிவந்த கண்ணை நன்றாக திறந்து நன்றாக பாரும் அத்தனையும் பாகார்டியா ஒயிட் ரம்,''என்றார் இரண்டு அடி துள்ளிக் குதித்த நான் தீர்த்த சாந்தியில் இறங்கினேன். முடிந்த பிறகு அப்படியே தூங்கிவிட்டேன்.

நடிகை சரோஜாதேவி இரண்டு இன்ச் மேக்கப்போடு கோ…..பால்…….எழுந்திருங்கள்..!கோ………..பால் என்று கையில் வைத்திருந்த பன்னீர் குப்பியில் இருந்த பன்னீரை என் முகத்தில் தெளித்தார்…..இன்னுமொரு குவளையில் இருந்த சந்தனத்தை முகத்தில் பூச…….அடச்சே.....! அத்தனையும் கனவு! 

மெட்ராஸ் பவன் சிவா பாட்டில் தண்ணீரை முகத்தில் புளிச்….புளிக்சென்ற அடித்தபடி நக்கி மாமா…நக்கி மாமா எழுந்திரி நக்கி மாமா என்றார். கனவை கலச்சிட்டாங்களே அப்படின்னு சிரமப் பட்டுக்கிட்டே எழுந்து ரின் சோப்பு போட்டு குளித்து விட்டு பிளீச்சிங் பவுடர் போட்டுக் கொண்டு பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்தை நோக்கி பொடி நடையாகப் போனேன்.

மண்டபத்தின் வாசலில் அஞ்சா சிங்கம் நின்று கொண்டு ரோட்டில் போகும் ஆட்களை எல்லாம் நிறுத்தி சார்….நீங்க வவ்வாலா….? சார் நீங்க வவ்வாலா…?என்று கேட்டுக் கொண்டிருந்தார்(வவ்வால் நோட்ஸ் திஸ் பாயிண்ட்) அவர்கள் டெரராகி நாங்க மனுசங்க..என்றபடி பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடினார்கள். என்னைக் கண்டதும் ''வாய்யா…..!வாய்யா….!தனியா உள்ள போக ஒரு மாதிரியா இருந்தது அதான் வவ்வால் அண்ணாச்சியா இருந்தா கம்பனிக்கு ஆள் சரியா இருக்குன்னு பார்த்தேன்….அவரு வரலை நீ வா…''என்றபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

மேடையில் என்னுடைய சிஸ்யர்கள் சிபி, கேபிள், ஜாக்கி உக்கார்ந்து ஒவ்வொரு பதிவராக அழைத்து அறிமுக உரையாற்ற உதவிக் கொண்டிருந்தார்கள்..! என் பெயரும் வந்தது, என்னை மிஸ்டுகால் நக்கீரன் என்று பெருமையாக கூறினார்கள், நான் மேடைக்கு சென்றபோது என் ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தில் கோபாலபுரத்தில் டுவிட்டுக் கொண்டிருந்த தலைவரே ஜெர்க் ஆனதாக உளவுத்துறை தெரிவிக்கின்றது.

மதுமதி எனக்கு சர்ச்சை பதிவு புகழ் ஆசிக்கை அறிமுகப் படுத்தினார் ''ஆள் பல்கா இருந்தார் நானும் கொஞ்சம் ஜெர்க்கானேன்..!'' ஆனாலும் கமல் மாதிரி கட்டிப்புடி வைத்தியம் செய்து இருவரும் நண்பேன்டா ஆயிட்டோம்...!

கேபிள் வந்து என்னை ஒரு கவிதை படிக்குமாரு அழைத்தார் வீனாக கொலைப்பழி விழும்மென்று தவிர்த்து விட்டேன்.மதியம் திவ்யமான சைவ உணவு. ஆனாலும் நமக்கு சைவம் சாப்பிட்டு பழக்கமில்லாததால்...! பாக்கெட்டில் வைத்திருந்த ''நெத்தலி கருவாடை'' சாம்பாரில் போட்டு நான் மட்டும் அசைவம் சாப்பிட்டேன் என இங்கே கூறிக் கொள்கிறேன். முடிந்தால் மெரினாபீச்சில் அண்ணா சமாதிக்கு பக்கத்தில் ஒரு கல்வெட்டில் பொறித்து வைக்கவும், வரலாறு தெரிந்து கொள்ளட்டும் என்று பிலாசபியிடம் கூறினேன்! சங்ககால இலக்கிய வார்த்தையொன்றை என்னை புகழ்ந்து கூறினார்.(கருவாடு கொடுக்கலைன்னு பொறாமை)

மயிலன் கவிதை வாசித்தார் கவிதை அனைவரையும் கவர்ந்தது, நான் போய். அவரை டாக்டர் பேசிட்டு மட்டும் வந்துட்டிங்க கவிதை எங்க? என கலாய்த்தேன்..!அவர் பத்து ரூபாய் எடுத்து கீழே போட்டார், நான் எதார்த்தமாக குனிந்து எடுக்க, என்னை பச்சகுதிரை தாண்டி விட்டு ஓடிவிட்டார். சரி பத்து ரூபாய் மிச்சம் என்று வைத்துக் கொண்டேன், பிறகுதான் தெரிந்தது அது செல்லாத நோட்டு என்று வடை போச்சே..! என்று நானே சொல்லிக் கொண்டேன். அடுத்தது கேபிள் கவிதை வாசிப்பதாக சொன்னார்கள், எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ரென்று சுற்ற, மணமகன் அறையில் போய் படுத்துக் கொண்டேன், நான் போதையில் படுத்திருப்பதாக புரளியை கிளப்பி விட்டார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகர் உரையாற்றினார். தனிமனித தாக்குதல் கூடாது என்றார், நல்ல விசயம், அவரிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கிவிட்டு…சார் உங்க கதையில் வருகிற நந்தகுமாரன் கூழாங்கல்லுல இருந்து மின்சாரம் கண்டுபிடிச்சா சொல்லுங்க சார்….! எங்க ஊர்ல கரண்டு அடிக்கடி போயிடுது என்றேன். சொல்றேன்….!சொல்றேன்….!என்றபடி போய் விட்டார். அவரிடம் யாரோ என்னைப் பத்தி சொல்லிட்டாங்க போல, போன் நெம்பர் கொடுக்காம போயிட்டார்.

இவையாவும் கற்பனையே...!


Read more...

காஜல் ஒரு டொக்கு பிகரு- அஞ்சலி பேட்டி!

>> Sunday, August 12, 2012



“இந்தி படமான ‘டெல்லி பெல்லியின் ரீமேக்கான ‘சேட்டை’யில் ரொம்ம சேட்டை பண்ண வேண்டியிருக்குமே?”

“டெல்லி பெல்லியில் கொஞ்சம் வல்கரா, ஓவர் கிளாமரா இருக்கும் அந்தப்படத்தை அப்படியே எடுத்தால் நண்பர்கள் ராஜ் மற்றும் பல பதிவர்கள், குஷியா இருப்பாங்க…!ஆனால் "சின்ன ஷகிலா" என்று எதிரிகள் பெயர் வைத்து விடுவார்கள் என்பதால் அளவோடு காட்டுகிறேன்! இதில் மாடர்ன் ஜர்னலிஸ்ட் கேரக்டர். டிரெஸ்ஸிங்கில் கொஞ்சம் கிளாமரா இருப்பேன். சுடிதார்க்கு துப்பட்டாவே கிடையாதுன்னா பார்த்துக்கங்க….!காமெடியில் சந்தானத்துக்கு தனி டிரேக் ஸ்பாட்ல ஆர்யாவும் நானும் நடிச்சதை விட சிரிச்சதுதான் அதிகம். படம் கலர்புல்லா இருக்கும்.”

“கேரக்டர் ரோல்ல பாந்தமா நடிக்கிறீங்க…திடீர்னு கிளாமர்ல புகுந்து விளையாடுறீங்க….அறிமுக இயக்குனர் படத்திலயும் நடிக்கிறீங்க…அஞ்சலி கேம் பிளான் என்ன?”

“அஞ்சலின்னா இப்படித்தான் இருப்பாள்…இப்படித்தான் நடிப்பாள் என்று கிடையாது உதாரணம் காஜல் அகர்வால் மாதிரி பார்பி மொம்மை நான் கிடையாது. அது மாதிரி! புது இயக்குனர் படத்தில் நடிச்சா நான் சொன்னபடி கேட்பாங்க….மொத்தத்தில் நான் லேடி விஜய்காந்த்”


“விசால்,வரலட்சுமி ரெண்டு பேரும் லவ்ல இருப்பதா பேசிக்கிறாங்களே…ஸ்பாட்ல அப்படி எதுவும் உங்களுக்கு தெரியுதா?”

“ஏங்க நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? ரெண்டு பேரும் நல்ல ஃபிரண்ட்ஸ். எனக்கும் வீடுவுகும் இருக்கிற மாதிரி வெறும் நட்புதான்”

“போயும்…போயும்….சுந்தர்.சி யோட அஞ்சலி நடிக்குது அப்படின்னு உங்க ரசிகர்கள் வெப் சைட்ல அழுவுறாங்க அதைப் பற்றி?”

“ஓ……எனக்கும் அழுகையாதான் வருது, என்ன பண்ணுவது…எனக்கு என் மேல் உள்ள அக்கரைய விட அவங்களுக்குத்தான் அக்கரை அதிகம். எங்கேயும் எப்போதும் கிளைமாக்ஸ்சில் நான் இறக்கும் படியான காட்சியப் பார்த்து ஒரு பிரபல முதலிடப் பதிவர் மண்ணுல புரண்டு அழுததா கேள்விப் பட்டு எனக்கு அழுகையே வந்திருச்சு.”


“உங்க ராசி சென்டிமென்ட் என்ன?”

“நிறைய. சிலது ரொம்பக் காமெடியா இருக்கும். மயிலன்…பிரபாகரன்…போன்ற எதிரிகளுக்கு போன் போட்டு காஜல் ஒரு டொக்கு பிகரு அப்படின்னு சொல்வேன் அவிய்ங்க புரண்டு…புரண்டு…அழுவாய்ங்க…..அதை பார்த்திட்டு பட பூஜைக்கு போவேன் மனசு அன்னிக்கு புல்லா சந்தோசமா இருக்கும்”

“திடீர்னு ஸ்கிரீன்ல குண்டாத் தெரியுறீங்க…அடுத்த படத்தில ஒல்லியா இருக்கீங்க?”

“காலைல அஞ்சலி ரசிகர்கள் கழகம் சாயங்காலம்  வெட்டி பிளாக்கர்….  சிரிக்க…கும்மியடிக்க…! மனசு சிறகடிச்சுப் பறக்கும் இதுதான் ஸ்லிம் அஞ்சலியோட சீக்ரெட்!”



Read more...

இந்நாட்டின் சுதந்திர அடிமைகள்!

>> Monday, August 6, 2012


ரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம், தேவை! சொந்த வீடு இருப்பவர்களுக்குக் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் திருப்பூர், கோவை, சென்னை, போன்ற தொழில் நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வெளியூரில் இருந்து வந்து தங்கி வேலை செய்து தனக்கானப் பிழைப்பைக் கொண்டிருக்கின்றார்கள்.
சாமீய்! வாங்க சாமீய்! சாப்பிட்டு போலாம் வாங்க சாமீய்!
இங்கு இவர்கள் வாடகை வீட்டில் சந்திக்கும் பலப் பிரச்சனைகள் வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவுக்கு உள்ளது, வருடத்திற்கு ஒரு முறை வாடகை ஏற்றுவது, அநியாய கரண்டு பில் வசூல் செய்வது, மட்டுமில்லாமல் அதைச் செய், இதைச் செய், அங்க போகாதே! இங்கப் போகாதே! குழந்தைகள் சத்தம் போடாமல் இருக்க வேண்டும், விளையாடக் கூடாது, உறவினர்கள் வந்தால் ஒரு நாளுக்கு மேல் தங்கக் கூடாது! டிவிச் சத்தம் அதிகமாக வைக்கக் கூடாது என் பல சில கண்டிசன்களோடு ஒரு மாதிரியான வாழ்க்கை வாழ வேண்டியதாக உள்ளது.

இந்த மாதிரி நகரங்களில் முக்கியமாக திருப்பூர்க்கு இடம் பெயரும்….வெளியூர் மக்களை மண்டைக் குடைச்சல் கொடுக்கும் விசயம் வாடகை வீடு! கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட எளிமையாக….கர்வம் இல்லாமல் இருப்பான்! ஆனால் நகரத்தில் கோமணம் மாதிரி இடம் வைத்திருப்பவன் பண்ணுகின்ற அலம்பலும், அலப்பரையும் தாங்க முடிவதில்லை.

உதாரணத்திற்கு எனக்கு நடந்த ஒரு சம்பவம்! ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த போது புதிதாக பைக் வாங்கினேன், நூறு ரூபாய் வாடகை ஏறிவிட்டது. வேலைக்கு போயிட்டு இருந்த நான் சுயமாக தொழில் தொடங்கினேன், இருநூறு வாடகை ஏறிவிட்டது. கார் வாங்கினேன் வாடகை கணிசமாக ஏறியதில்லாமல்…வசையும் வேறு! வெளியூர்காரன் இங்கு முன்னேறக் கூடாது "போடா நீயும் உன் வீடும்" என்று காலி செய்து வந்துவிட்டேன்! இதுவே வெளியூர்காரன் தன் சாதியை சேர்ந்தவன் என்றால் இந்த தொந்தரவுகள் கிடையாது, வீடு விடும்போதே நம் சாதியை கண்டுபிடிக்க பல கேள்விகளை கேட்பார்கள்! நான் ஒரு முறை சிந்திப்பது உண்டு நாம் தலித் என்றால் வீடு கொடுப்பார்களா என்று? அதற்கான விடை ஒரு நண்பர் மூலம் கிடைத்தது!
ஊசி..பாசி...வித்தாலும் யார் காசுக்கும்
ஆசைப்படமாட்டோம் சாமீய்!
என் நண்பர் ஒருவர் தலித் பெண்ணை காதலித்து திருமணம் முடித்தார், அவர் இங்கு திருப்பூரில் நல்ல பணியில் இருந்தார், அவர் ஒரு உயர் சாதியினரின் வீட்டில் குடியிருந்தார், எப்படியோ வீட்டு சொந்தக்காரருக்கு இந்த உண்மை தெரிய வந்த போது வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டார், அவரே காலி செய்துவிட்டு ஓடும்படி அவர்களின் செயல்கள் இருந்தது. இவர்களைப் போன்றவர்களிடம் வெளியூர்காரர்களும், பிறசாதியினரும் இருப்பது நரகத்தில் இருப்பதுக்குச் சமம்!

நான் ஒரு முறை பேருந்தில் பயணம் செய்த போது, பேருந்து பழுதடைந்து நின்று விட்டது, நின்று கொண்டிருந்தோம். சாலையோரத்தில் ஒரு டென்ட் அடித்து நரிக்குறவக் குடும்பங்கள் சில இருந்தது, அதில் ஒரு டென்ட்டை கவனித்த போது சுவாரஸ்யமாக இருந்தது, ஒரு நரிக்குறவன் அந்த டென்ட்டுக்குள் அழுக்கு மூட்டையின் மீது தலை வைத்து அருகில் ஒரு டிரான்ஸ்சிஸ்டரில் மிக சத்தமாக எம்.ஜி.ஆரின் காதல் பாடலை கண்ணை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தான், ஓரத்தில் அவன் விற்பனை செய்யும் ஊசி, பாசிகள் கிடந்தன, ஒரு சிறிய டிவியும், பேட்டரியும் இருந்தது.
நம்ம பேமிலி போட்டா சாமீய்!
வெளியே அவன் மனைவி மூன்று கல்லைக் கூட்டி காடையோ, கவுதாரியோ, கறிக்குழம்பு வேகவைத்துக் கொண்டிருந்தாள், சில சமயம் காகமாகக் கூட இருக்கலாம்!? அவன் போட்டிருந்த பச்சை நிற டிராயரின் பாக்கெட்டில் ஒரு மதுப்புட்டி தலைகாட்டியபடி இருந்தது!

கொஞ்சம் நிதானமில்லாமல் தூக்கத்தில் விழித்து எழுந்து நின்று விட்டால் அவன் மொத்தக் குடிசையும் கலைந்து விடும் மண்டியிட்டபடிதான் அவன் அரண்மனைக்குள் நுழைய முடியும் அப்படிப்பட்ட இடத்தில் அவன் தன் சுதந்திரத்தை எவ்வளவு அழகாக அனுபவிக்கிறான். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கின்றது, நாலாயிரம், ஐயாயிரம் என வாடகை கொடுத்து நாம் வாழ்ந்தாலும் சுதந்திர அடிமைகள் நாம் என்பது உண்மைதானே…!


Read more...

மதுரை ஹோட்டல் போகலாம் வாங்க.......!

>> Sunday, August 5, 2012


வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு உங்களை நான் கூட்டிட்டுப் போறது ஹோட்டல்  மரண விலாஸ்,   என் பின்னாடியே வாங்க....! அதோ கல்லாவுல உக்காந்து  இருக்காரே அவருதான் முதலாளி.சத்தம் போடாம என் பின்னாடி வாங்க...!ரொம்ம வருசமா இந்த ஹோட்டலை நடத்திட்டு வருகிறார்.

சரி....! என் பின்னாடியே வாங்க....! உங்களை நான் சமையல் செய்யும் இடத்துக்கு கூட்டிட்டுப் போகிறேன், இந்த ஹோட்டல் டைனிங் ஹாலுக்கு பின்னாடிதான் இருக்கு வாங்க அப்படி ஓரமா நின்னுட்டு நடப்பதை பார்க்கலாம்!

இப்ப மணி மூனாச்சு..! புரோட்டாவுக்கு மாவு பிசையிற நேரம்...! ஆங் அதோ வந்திட்டார் பாருங்க...! அவருதான் புரோட்டா மாஸ்டர், பாருங்க அவர் குளிச்சு ஒரு மாதம் ஆச்சு...! வெறும் உடம்பு, ஒரு அழுக்கு லுங்கி, நைந்து போன ஒரு சிகப்புத் துண்டு, இதுதான் அவர் யூனிபார்ம்..! சரி மாவு மூடைய தூக்கி தோள்ல போட்டுட்டு வெளிய போகிறார், வாங்க..! நாமளும் வெளிய அவர் பின்னாடியே போவோம்....!

எப்பவும் புரோட்டாப் போடுற இடம், கடைக்கு வெளியதான் இருக்கும்! இரவு ஊர் சுத்தும் தெருநாய்கள் இந்த புரோட்டா கல்லு மேல படுத்துதான் தூங்கும்...!அதுல படுத்திருந்த நாய்களை விரட்டிவிட்டு லைட்டா தண்ணீரை தெளிச்சு ஒரு கழுவு...! கழுவி விடுறாரு!


மாவை அதுல கொட்டி, நடுவுல குழி பறிச்சு, தண்ணீர் அழுக்கு டிரம்ல இருந்து கொஞ்சம் ஊற்றி, எண்ணெய், டால்டா, முட்டை, எல்லாம் உடைத்து ஊற்றி பிசையறார்! நல்ல பக்குவமா மாவு வருது.....இடையில் மண்டைய வேறச் சொறிஞ்சுக்கறார். அப்பப்ப கொசுவையும் அடிப்பார்.

மாஸ்டருக்கு வாய் நமநமங்க.. அண்டர்வேர் பாக்கட்ல இருக்கின்ற பான்பராக் பாக்கெட்டை எடுத்து கையில கொட்டி, தூ...ன்னு ஊதி வாயில போட்டுக்கிறார். கைய சும்மா அப்படி..இப்படின்னு தட்டிட்டு மறுபடியும் மாவை பிசையிறாரு..!

ஓனர் பக்கத்துல வருகிறார் என்ன சொல்றாருன்னு கவனமா கேளுங்க மக்கா..!

“ஏம்பா இன்னிக்கு எத்தனை கிலோப் போட்டிருக்கே....”

“ஐஞ்ழ்சு கிழ்லோ  முதழ்லாளி”

“எலேய் அந்த கருமத்தை துப்பிட்டுத்தான் வேலை செய்யுல....”

முதலாளி பான்பராக் எச்சில் மாவுல தெரிச்சதைப் பார்த்தாரு ஆனா கண்டுக்கலை...! மாவை மறுபடியும் பிசைஞ்சான், அடுத்தது அவன் செய்வதை நல்லாப் பாருங்க...! மாவை அப்படியே உருட்டி விக்கிரமாதித்தன் வேதாளத்தை தூக்கிட்டு போகிற மாதிரி தோள்ல போட்டுட்டு உள்ள போகிறான்....! என்ன... மக்கா இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி!? வாங்க உள்ள அவன் பின்னாடி போவோம்.

அங்க கிடந்த ஒரு அழுக்குத் துணிய எடுத்துப் நனைச்சுப் புழிஞ்சு புரோட்டா மாவுக்கு முக்காடு போட்டுட்டுப் போயிட்டான், இன்னும் ஒரு மணி...நேரம் இல்ல இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து மாவை உருட்டி புரோட்டாப் போடுவான். அதுல இடையில் பீடி குடிப்பான்! பான்பராக போடுவான்!, சிறுநீர் கழிக்கப் போவான்! ஆனால் நல்ல மனுசன் கை மட்டும் கழுவமாட்டான்!?


அடுத்தது நான் உங்களுக்கு காட்டப் போவது இட்லி சுடும் இடம்! வாங்க..! அதோ இட்லி பாத்திரத்துக்கிட்ட....கரண்டி தேடிட்டு இருக்காரு...பாருங்க அவர்தாம் இட்லி மாஸ்டர்..! “அண்ணே! இதுக்கெல்லாம் கைதட்டக் கூடாது சைலண்டா வாங்கண்ணே! நாம பாக்கறமுன்னு தெரிஞ்சா நம்மளை கைமா பண்ணிருவானுக!”

அதே சேம்! புரோட்டா மாஸ்டர் யூனிபார்ம் இவருக்கும், அவரு மண்டைய சொரிஞ்சாரு இவரு அக்குள்ளச் சொரியறாரு...! எங்க கரண்டிய காணம் அப்படின்னு தேடுறாரு கிடைக்கல....தன் கையே தனக்குதவி அப்படிங்கிற மாதிரி கையில மாவ எடுத்து இட்லி தட்டு குழியில அழகா விடறாரு பாருங்கண்ணே! மாவ ஊத்தி முடிச்சதும் பக்கத்துல இருந்த பக்கெட் தண்ணியில கைகழுவுறாரு...! இட்லி வெந்ததும் அதே தண்ணீரை தெளிச்சு இட்லிய பூப்போல எடுக்கிறாரு. பூப்போலதான் எடுக்கிறாரு ஆனால் இட்லி ஓங்கியடிச்சா ஒன்ரை டன் வெயிட்டு!

ஆங்...!அங்க பாருண்ணே...!இட்லிக்கு சாம்பார் எப்படி ரெடி பண்றாங்க பாருண்ணே! பூசணிக்காயச் சீவி கிரைண்டல்ல அரைச்சுப் பருப்புக்கு பதிலா போடுறாங்க, சாம்பார் கெட்டியா புளிப்பும் இனிப்பும் சுவையா இருக்கும்! 

இங்க பாருண்ணே இங்க தேங்காய் துருவற அழக...! காலை V மாதிரி வச்சுக்கிட்டு..!காலுக்கு நடுவுல தேங்காய் துருவி....துருவி...போட்டிருக்காண்ணே தேங்காய் துருவலை அவன் கால்ல அணைக் கட்டி வச்சிருக்காண்ணே!

அங்க பாருண்ணே டீ வடிக்கிறதுக்கு ஒரு வேட்டியப் பயன் படுத்துவாங்க..அது பாதையில கிடக்கு, எல்லாரும் அதை மிதிச்சிட்டு போறாங்க.., அதையே எடுத்து ஒரு பெரிய அண்டாவுல டீ வடிக்கிறாங்க...!

புரோட்டா குருமாவுல கார எசன்சஸ ஊத்தி, பச்சை கடலை எண்ணெய கலந்து வச்சிறாங்க....நாம பார்சல் வாங்கி வந்தா எண்ணையா நிற்குமே! அதுதான் காரணம்! இது அல்சர்ல கொண்டு போய் விட்டிடும்!

சரி...!போதும் வெளிய போலாம் வாங்க குமட்டிக்கிட்டே நிக்கிறீங்க....!முதலாளி பார்த்திருவான் வாந்தி கீந்தி எடுத்து வச்சிறாதிங்க....நம்மளையே முதலாளி பார்க்கிறான் வாங்க மெதுவா வாங்க.....“என்ன அண்ணாச்சி சாப்பிடலையா...?” (பயபுள்ள முதலாளி..! சாப்பிடாம போறவங்களை எப்படித்தான் கண்டுபிடிக்கிறானோ!)

“இதோ வருகிறோம் அண்ணாச்சி! வெளிய ஒருத்தரு இருக்கிறாரு... காணம் கூட்டிட்டு வருகிறோம்...”

“சீக்கிரம் கூட்டிட்டு வாங்கண்ணாச்சி! புரோட்டா சூடா போட்டிட்டு இருக்கம்ல.....”

“என்னாது புரோட்டாவா...?”

“அட ப்புரோட்டா வேணாமா...? இட்லி சூடா இருக்கு..! வாங்க...!”

“எது இட்லியா.......!”

”அட இட்லி சாப்பிட்டு டீ குடிங்க நல்லாயிருக்கும்....”

“டீ......யா..? சரி இதோ இந்தப் பதிவ படிச்சிட்டு இருக்காரே அவருக்கு கொடுங்க.....!” 

நன்றி : (ஒரு ஹோட்டலை துப்பறிந்து நமக்கு சொன்ன) தமிழ்வாசி! பிரகாஷ்


படம் : கூகுள் தேடல்!

Read more...

தி யங் தொழில்அதிபர் மாரிச்சாமி!

>> Thursday, August 2, 2012



மாரிச்சாமி இரண்டு நாளா தொண்டையில பச்சத்தண்ணி குடிக்காம சோந்து போயி ஒக்காந்துட்டு இருக்கிறாரு! கெழவி செத்த பொறவு எல்ஏசி பணம் ரண்டு லட்சம் வந்தது பேங்கில போட்டு வச்சிருந்தாரு...! ஒரு நாள் உண்டுட்டு புள்ளா கோவில் வாசல்ல துண்ட விரிச்சு போட்டுத் தூங்கிட்டு இருந்தவரு...யாரோ ரவுசு போட்டுக்கிற மாரி சத்தம் கேட்டு முழிச்சு பார்த்தாரு ரோட்டுக்கு அவடத்தால ஒரு பெரீய பிளக்ஸ் பேனர்  வச்சிட்டு இருந்தானுக நாலைஞ்சு பசங்க...!

"என்ராது எதாவது சின்மா போஸ்ட்ரான்னாரு....!மாரிச்சாமி"

இல்லீங் கீமுக் கோழிப் பண்ணை வௌம்பரம்முங்க...பன்னாடி அப்படின்னாங்க,

என்ரா...! கீமு கோழியா....அப்படின்ட்டு அவனுக மூங்கி கம்புல மாட்டி வச்சிருந்த வௌம்பரத்தை எழுத்துக் கூட்டி படிச்சாரு..! அடங் ஒ...னோளி! கறவை வளர்த்தாக்கோட இவ்வளவு வருமாணம் வராது..! ஒடக்கா முட்டை வுடாத நம்ம காட்டுல வளர்த்தா நாலுகோழிக்கு வருசம் நாலு ஒன்னு நாலு தேறும் போல....கணக்கு போட்டது  மனசு! விதி ஆர வுட்டுது! அட்ரஸை குறிச்சிட்டு காத்தாலயே பண்ணைக்காரன் கடைக்கு முன்னாடி குந்த வெச்சு ஒக்காந்தாரு...!

காளை மாட்டுலயே பாலை கறக்கிற கீமு கோழிக்காரங்க....எச்சக்கையில காக்கா ஓட்டாத மாரிச்சாமிய எப்படியோ பேசிச் சாய்ச்சுப் புட்டாங்க...பேங்கில இருந்த ரண்டு லச்சத்தை முள்ளங்கி பந்தையாட்டம் கொண்டாந்து கொடுத்தாரு...! அப்பவே அவன் சொன்னான் மாரிச்சாமி "நீங்க நல்லா வருவீங்க...!" அப்படின்னு. ஒரு கல் ஒரு கண்ணாடி சின்மாவ பொறவுதான் பார்த்தாரு மாரிச்சாமி. அப்பவே மனசுல சம்சயம் உன்டாகி கண்ணைக் கட்ட பாதி சின்மாவுல போயி கீமுக்காரன் இருக்கானான்னு பார்த்தாரு.


கடையில உக்காந்து அக்குல சொறிஞ்சிகிட்டு கீமு கோழி மாறியே கொட்டாவி வுட்டுட்டு இருந்தான்! ஓனரு! அவனை எழுப்பி "ஏம்பா...! தீவனம் கொடுத்து நாலு மாசம் ஆச்சு...! எம் கைக்காசப் போட்டு தவுடு வாங்கி உருட்டி கொடுத்துட்டு இருக்கிறேன் ரண்டு நாளு வேண்டா வெறுப்பா தின்னுச்சு...!இப்ப அதுவும் உங்கறது இல்ல தவுட்டை கொண்டு போனாலே எம் மண்டையில கொட்டுது எம் மண்டையப் பாரு..!" அப்படின்னு உருமாவ கழட்டி காட்டுறாரு "இன்னும் செத்த இல்லை மூளையே வெளிய வந்திருக்கும்..." கோழிய புடிச்சிட்டு போங்கப்பா, செட்டை கழட்டிக்கப்பா...!எம் பணத்தைக் குடு அப்படின்னு வெரசா கேட்டாரு!

அவன் எருமை மாட்டு மேல மல பேஞ்ச மாரி "சரிங்க மாரிச்சாமி நான் ஆள் அனுப்புகிறேன் எல்லாத்தையும் எடுத்துட்டு பணத்தை கொடுக்குறேன்" அப்படின்னு அவன் சொல்லிட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சான், மன்சு நிம்மதியாகி வீட்டுக்கு வந்தாரு..., ஒரு மாசமாச்சு. போன் போட்டும் ஆளும் வரலை, கோழியையும் புடிக்கலை...!, பாவம் அந்த ஜீவனுக படுற பாட்டைப் பார்த்து கொடுமை தாங்காம...நேரடியா போனாரு. அங்க கடையும் இல்லை கிடையும் இல்ல, ரவையோட ரவையா பொட்டிய கட்டிட்டு ஓடிப் போயிட்டா ஓனரு......ஓனரு பொண்டாட்டியும். அங்கியே தலையில துண்டைப் போட்டு ஒக்காந்தவர்தான்.

கெழவி ஆலும்....பாலும்....ஊத்தி கொஞ்ச...கொஞ்சமா எல்ஏசி கட்டியது இப்ப ராமத்தை போட்டுட்டு போயிட்டா .....டோலி பைய இதையே திரும்ப...திரும்ப.....புலம்பிக்கிட்டு கிடக்கிறாரு! அவரு சம்சாரம் ராமதாயி "அட வுடு நம்ம தலையில கவருமெண்டு காச நாம உங்கக்கூடாதுன்னு எழுதியிருக்கு...! அதான் எல்ஏசி பணம் இப்படி போயிடுச்சு.....அப்படின்னு ஆறுதல் சொல்லி இத்துனூன்டு பலசாவது குடி..!" என்று மோரை கரைச்சு பழைய சாதத்தை அவர் முன் வக்கிது. கொஞ்சூண்டு குடிச்சிட்டு நாக்கை நனைச்சிட்டு அப்படியே கவுத்துக் கட்டில்ல சாயுறாரு...

"ஐய்யா......!ஐய்யோவ்..!"

ஆரோ எழுப்ப மாரிச்சாமி ஒறக்கம் கலஞ்சு பாக்குராரு...ரண்டு பேரு நல்ல வெள்ளை சட்டைய புல் அங்கராக்குள்ள வுட்டுட்டு, கோமணத் துணி மாதிரி கழுத்துல கட்டிக்கிட்டு, நம்ம அஞ்சா சிங்கம் செல்வின் கணக்கா நிக்குறாங்க.....ஆருப்பா நீங்க என்ன வேனும்...? என்று கேட்கிறார். அதுல ஒருத்தன் சொல்றான், ஐய்யா...!நாங்க எஸ்.கே.எப்.எஸ் பிரைவேட் லிமிட்டேட்ல இருந்து வர்ரமுங்க, நீங்க ஒரு பத்தாயிரம் கட்டினா மாசம் ஆயிரம் பத்து மாசம் தருவோம்...,கடைசியில  பத்து மாசம் கழிச்சு, உங்க பத்தாயிரத்தை அப்படியே திருப்பி கொடுத்திருவோம்..., நீங்க நம்பலைன்னா இங்க பாருங்க அப்படின்னு ஒரு போட்டாவை காட்டுறான் ஒரு செவத்த பையன் இந்த ஆளு கூட நிக்குது..! "இது ஆரப்பா எனக்கு வௌங்கலையே...." அப்படிங்கிறாரு....அவருதாம் ஐய்யா "லிலைன்ஸ்" முதளாளி கும்பானி இந்தியாவுலியே பெர்ரீய பணக்கார்ரு ஆராயிரம் கோடி போட்டிருக்காரு...! இதைப்பாருங்க இவர்தான் ஃபுருனோ சுல்தான்........அவர்கள் பேசப்....பேசப்.....ஆ.....ன்னு வாயப் பொளந்துகிட்டே அடுத்த தொழிலில் பணம் போட ஆயத்தம் ஆகிறார் தொழில்அதிபர் மாரிச்சாமி!

Read more...

திருப்பூர் சாப்பாட்டுகடை டுவின்..டுவின்...

>> Wednesday, August 1, 2012


எச்சரிக்கை

இது ஒரு அருவருப்பான பதிவு தைரியம் உள்ளவர்கள் மட்டும் இந்த வரியை தாண்டவும் மீறி வந்தால் கம்பனி பொறுப்பில்லை......

வணக்கம் நண்பர்களே திருப்பூர் வரும் நண்பர்கள் இந்த பதிவை படித்துப் பார்த்து பயன் பெறுவதற்காக?! எழுதிய பதிவு. முக்கியமாக ஹோட்டல் காக்ரோச்! இது நவீன ஓட்டல்! பெயிண்டு அடிச்சு..!பாத்திரங்களைக் கழுவி பல மகாமமம் ஆச்சு!? தோசைக்கல்லை சொரண்டுனா ஒரு லாரி நிறைய அழுக்கு சேரும்! இட்லி பாத்திரத்தை பார்த்தா கல்யாணம் ஆகாத பொண்ணுக கூட வாந்தியெடுப்பாங்க...அவ்வளவு சுத்தம்! டம்ளர் எவர்சில்வர் டம்ளர் ஹோட்டல் முன்னாடி ஓடுற கால்வாயிலதான்  கழுவுவாங்க, அதனால பளிச்சுன்னு கருப்பா பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கும். இலையை இவங்க வேஸ்ட் செய்வதே இல்லை  கழுவி...கழுவி...போடுவாங்க வாரத்துக்கு ஒரு முறை கிழிஞ்ச இலையை மட்டும் மாற்றுவார்கள் அவ்வளவு நேர்த்தியான பராமரிப்பு.

இங்க ஸ்பெசல் ஐயிட்டமே காக்ரோச் சிக்கன்தான்..! சப்பாத்திக்கு நடுவில சிக்கன் வருவலை வைத்து அழகாக அதன் மேல் ஒரு காக்ரோச்சைப் பிடித்து அழகாக வைத்திருக்கிறார்கள்! நான் ஒரு முறை போனபோது கரப்பானை தூக்கி வீசினேன் பக்கத்து டேபிளில் இருந்தவர் தட்டில் விழுந்து விட்டது. அதை கவனித்த அவர் டேங்ஸ் என்றார்! நான் நோமென்சன் என்றேன்! இல்ல...இல்ல...போதும் நான் டயட்ல இருக்கிறேன் என்றார்! அந்த ஆளுக்கு இந்தி தெரியாது போல......


அடுத்தது எலிக்கறி & நாய்கறி பட்டர் டோஸ்ட்! அதுவும் எலிக்கறிக்கு தேவையான தூய....தெள்ளிய நீராக ஓடும் கூவத்தின் தம்பி நொய்யலாற்றுக் கரையில் பிடித்தது, நாய்கறி பல்லடம் ரோட்டில் வாகனங்களில் அடிபடும் நாய்களைக் கொண்டு வந்து சுத்தமான முறையில் தயார் செய்வது. அதனால் சுவை அதிகம் கூட்டம் அலை மோதும்! இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் சாப்பிட்டு வாந்தி பேதியானவர்கள் வைத்தியம் பார்க்க பக்கத்தில் இந்த ஹோட்டல் நடத்துபவரின் தம்பியே மருத்துவமனை வைத்துள்ளார்.


இதுல பாருங்க இங்க ஸ்பெசலே பல்லிக்காப்தான்! ஒரு மாசத்துக்கு முன்னால் செத்த முழு கோழிய கிரில்ல வறுத்து அதுமேல ஒரு பல்லியை வைத்து அழகாக பரிமாறுவதுதான்! 1946ம் வருடம் ஒரு வெள்ளைக்காரன் இங்கு சாப்பிட வந்தான் இவர்கள் தயார் செய்து வைத்திருந்த கோழி மீது உத்தரத்திரத்தில் லவ்விக் கொண்டிருந்த ஒரு பல்லி கோழி மீது விழுந்து விட்டது, அதை சாப்பிட்ட வெள்ளைக்காரன்! டுவின்....டுவின்....என்றான் அதிலிருந்து இங்கு வியாபார விசயமாக வரும் அமெரிக்கர்கள் இதை விரும்பி சாப்பிட்டு பேதியாகி திருப்பூரே வரமாட்டார்கள்! அதனால்  மெயிலில் மட்டும் டிலீங் காட்டுவதால் சீக்கிரம் ஆர்டர் ஓகே ஆவதால் இந்த கடை ஓனர்க்கு பாராட்டு விழா கூட நடத்தினார்கள் சில தொழில்அதிபர்கள்.

அப்பவும் கொடைச்சல் கொடுக்கும் சில பையர்களை இந்த கடையில் சிக்கன் வாங்கி கொடுத்திருவேன் என்று மிரட்டியே காரியம் சாதிக்கின்றார்கள்,  இந்த கடை பெயரை கேட்டு நடுங்கி இவர்களுக்கு அடிபணிந்து போகிறான் வெள்ளைக்காரன்! இதனால் திருப்பூர் வரும் பதிவர்கள் இங்கு உணவு உண்டு குறைந்தது பத்து பதிவாவது போடலாம் நேரமிருந்தால் வாருங்கள்! அட வாங்க சார் ஏன் சார் ஓடறீங்க.....?????

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP