Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

ஆப்பாயில் சாப்பிடுவது எப்படி?

>> Monday, October 8, 2012


நான் கொஞ்ச நாள் பதிவுலகில் இருந்து விலகியிருக்கலாம் என்று நினைத்திருந்தேன். தினம் மூன்று போன்! நான்கு சேட்! ஏழு டுவிட்! என்று என் வாசகர்கள் கதறி அழுததால் சரி ஒரு பதிவு போடலாமே என்று.......கர்ர்ர்ர்ர்ர்ர்தூ.......இங்க பாரு வயலன்ட் ஆகாது நீங்க காரித் துப்பியது என் வீட்டைத் தாண்டி, கடலைத் தாண்டி, மலையைத் தாண்டி உகாண்டாவுல ஒரு காலைத் தூக்கி?! இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த ஒரு சொரி நாய் தலையில் விழுந்து நாய் சம்பவ இடத்திலேயே மரணம் அது அந்த ஊர் தினத்தந்தியில் கூட வந்து விட்டது. உகாண்டாவில் ஏது தினத்தந்தி? என்று நீங்கள் கேட்கலாம் அங்கியும் "லாரி டயர் டமார்! பத்தொன்பது உயிர்கள் பனால்!" என்று எழவு செய்தியையும் எகனை மொகனையா எழுதுகின்ற பத்திரிக்கை இருக்கும் அதை விடுங்க….மேட்டருக்கு வருவோம்.
 பிளீஸ் கவுச்சி பிடிக்காதவங்க ஆப்பாயில் என்று இருக்கும் இடத்தில் பாயாசம் போட்டுக்கங்க.பாயசம் பிடிக்காதவங்க....வேற நல்ல ஃபிளாக்கா போய் படிங்க....இந்த ஆப்பாயில் சாப்பிடறது ஒரு கலை…..!ஆயகலைகள் அறுபத்திநான்கேமுக்கால் கலையை கத்தவனும் ஆப்பாயிலை லொபக்குன்னு முழுங்க முடியாது! அதுக்கும் தனி திறமை வேனும் இல்லை சட்டை நாறிடும். அது கூட பரவாயில்லை சார்....!வீட்டுக்காரம்மா பாஸ்டன் பிராண்டேடு ஆயிரத்து ஐநூறு ரூவா சட்டையா இருந்தாலும் ஆப்பாயில் விழுந்த சட்டைய துவைக்க கொண்டு போகையில் செத்த எலிய கொண்டு போற மாதிரியே குச்சி வெச்சு தூக்கிட்டுப் போறதை பார்த்தா கண்ணுல பீரு....பீரா வருது சார்!
 கடைக்கு நண்பர்களுடன் போனால் பெரும்பாலும் நான் புல்பாயில், இல்லை ஆம்லட்தான் சாப்பிடுவேன், ஆப்பாயிலை பொறுத்தவரை நமக்கு அலர்ஜி! "அந்தோணி" அப்படிங்கிற நண்பர் ஒருவருடன் சாப்பிடப் போனபோது எனக்கும் சேர்த்து ஆப்பாயில் சொல்லிட்டார்! அழகா சின்னதா இலைய கட் செய்து ஒரு தட்டுல வெச்சு பூப்போல ஆப்பாயில எடுத்து கொண்டு வந்து வச்சிட்டாங்க…நான் ஆப்பாயில் வந்திருச்சு அந்தோணி எப்படிச் சாப்பிடறாருன்னு பார்ப்போம் அப்படியே சாப்பிட்டுக்கலாம்ன்னு இருக்கேன் அவரும் வந்த ஐட்டங்களை எல்லாம் சாப்பிட்டு முடிச்சிட்டு கடைசியா ஆப்பாயிலுக்கு வந்தார்.
 ஒரு நாட்டை சூழ்ந்து தாக்குற ஒரு படையோட லாவகத்தில சுத்தியும் இருக்கின்ற வெள்ளை கலர் பாகத்தை கொஞ்சம்…..கொஞ்சம் பிச்சு வட்டத்தை சின்னதாக்கி அப்படியே பூப்போல எடுத்து லபக்குன்னு உள்ள தள்ளிட்டாரு…..!அட்ரா சக்க….! இவ்வளவுதானா…? நானும் முயற்சி செய்து சேதாரம் துளியும் இல்லாம சாப்பிட்டுவிட்டேன்! "ஆஹா நான் ஆப்பாயில் சாப்பிட்டுடேன்....." என்று கத்தியதைக் கேட்ட பக்கத்தில் இருந்த குண்டு பெண்மணியின் வாயில் தினித்த பூரி அதிர்ச்சியில் வெளிய வந்து விழுந்தது கடுப்பான ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
 மறுபடியும் ஒரு ஆப்பாயில்….ஆர்டர்..! இப்படியாக நான்கு, ஜந்து, பத்து என்று ஆப்பாயில் சாப்பிட்டுப் பழகினேன்! அந்தோணி கடுப்பாயிட்டார் அவரால எட்டுத்தான் சாப்பிட முடிந்தது. இப்படியாக ஆப்பாயில் சாப்பிட்டதின் விளைவாக அடுத்த நாள் வயிற்றைக் கெடுத்து நிற்காமல் போனதால் அலுவலகம் போகாமல் அறையிலேயே கிடந்தேன் அது வேற விசயம்! ஆனாலும் ஆப்பாயில் சாப்பிட்டு நானும் ரௌடியாயிட்டேன்….! நானும் ரௌடியாயிட்டேன்….!
 இப்ப என்ன விசயம்ன்னா….! ஒரு நாள் மதியம் அடையார் ஆனந்த பவனுக்கு சாப்பிடப்போனேன் அங்க அந்தோணிய ரொம்ப வருசத்துக்கு பிறகு சந்திச்சேன் "என்னப்பா இங்க ஆப்பாயில் கிடைக்காதே...!" என்றார் சிரித்தபடியே...!"இப்ப சாப்பாடே அதிகமா சாப்பிடறது கிடையாது அந்தோணி இதுல எங்க ஆப்பாயில் சாப்பிடறது" அப்படினேன் "அப்ப புல்லா சரக்குதானா…?" அப்படினார் அதுவும் இல்லை நண்பர்கள் கூடினால் மட்டுமே…என்றேன்..! ஆமா ஃபிளாக்கெல்லாம் எழுதற போல……! நான் படிச்சேன் உன் புரபைல் போட்டா பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன் என்றார் ஏதோ பொழுது போகலைன்னா கிறுக்குவேன் என் ஃபிளாக்கெல்லாம் படிக்காதே அப்புறம் ஒரு மாதிரியாயிருவே என்றேன்…! நான் எப்பமே ஒரு மாதிரிதானே என்றார் ஐய்யா நீவீர் வாழ்க என விடு ஜூட் என்று பறந்து வந்து விட்டேன் இல்லாத இறகை விரித்து.

ஆப்பாயில் : ஆப்பாயில் அப்படின்னு போட்டு கூகுள்ல தேடியதில் வந்த படங்கள் ஆகவே  இதற்கும் எனக்கும் எந்த சம்மதமில்லீங்கோ.......!

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP