பேச்சிலர் வாழ்க்கை- ஒரு அய்யாச்சாமியின் டைரி!

>> Wednesday, July 31, 2013

ம்ம வாழ்க்கையில பேச்சிலர் வாழக்கைங்கறது ஒரு அழகான ஒரு கட்டம்ன்னு சொல்லுவாங்க....அந்த அழகான கட்டத்துல நல்ல நண்பர்கள் கெடைச்சுட்டா சந்தோஷம்தான். ஆனா அதுவே அராத்து புடிச்ச அப்பிரண்டிசு பசங்களா அமைஞ்சிட்டா நம்ம பாடு ரொம்ப கஸ்டமுங்க.....! எங்கூர்ல இருந்து திருப்பூர்க்கு வந்ததும் கொஞ்ச நாளு ஆபிஸ்ல தங்கி வேல பாத்தேன். அதுக்கப்பறம் நாலு பிரண்டு சேந்ததும் ஒரு ரூமு புடிச்சு தங்குனோம், அந்த காம்பவுண்டே ஒன்லி பேச்சிலர்தான், வழக்கமான பேச்சிலர் ரூம் போல பாலிவுட் ஊர்மிளா, மணிசா, கோலிவுட் நமீதா, ஹாலிவுட் கேட்வின்ஸ்லெட், ஏஞ்சிலினா ஜோன்ஸ் படங்கள் ஒட்டப்பட்டு, வண்ணத்திரை, போன்ற சினிமா புக்கும் மருதம் போன்ற சரோஜாதேவி வகையராவாகவும் இறைந்து கிடந்த அறையாகத்தான் இருந்தது. அந்த காம்பவுண்டில் உள்ள ரூம்ல ஒவ்வொருத்தனும் ஒரு ஊர்க்காரன் மதுர, திருச்சி, தஞ்சாவூரு, திருநெல்வேலின்னு பல ஊர்க்காரனுகளால நெறைஞ்சு இருக்கும் அதே மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு செய்கையில நம்ம உசிர எடுப்பானுக....அது மட்டுமில்லாம பக்கத்து ரூமு பக்கிக அதுக்கும் மேல சாவடிப்பானுக!
ஹேய் நில்லுய்யா.......மஞ்சசட்டை

ரூமுக்கு போயி மொத நாளு நல்ல மணக்குற பியர்ஸ் சோப்பு வாங்கி வச்சிருந்தேன். காலையில எந்திருச்சுப் பாக்குறேன் சோப்பக் காணம்...! எலி..கிலி...தூக்கிட்டுப் போயிருச்சான்னு தேடிப் பாக்குறேன் எங்கயும் காணல...சரின்னு பாத்ரூம் போனா சோப்பை ஒரு பன்னி எடுத்து தண்ணித் தொட்டிக்கிட்ட எடுத்து வச்சு தேய்ச்சு...தேய்ச்சு குளிச்சிட்டு இருக்கு அதுவும் ஜட்டிக்குள்ள வுட்டு பிளக்கு...பிளக்குன்னு நுரை வர தேச்சுக்கிட்டு இருக்கு கருமம் 

“அடேய்.....அடேய்.....இனி அந்த சோப்ப நான் எப்பர்ரா எம்பட மூஞ்சிக்குப் போடுவேன்....! ”

“மாப்புள பியர்ஸ் சோப்பு நல்லா மணக்குடா“ன்னு வேக்காணம் வேற பேசுறான் சங்கி மங்கி! அவன் குளிச்ச பிறகு அந்த சோப்பு செத்த எலி மாதிரி தூக்கியெறிஞ்சுட்டேன்.

அடுத்தது டூத்பேஸ்ட் நூறு கிராம் பேஸ்ட் வாங்கிவச்சேன் நல்ல குர்குரேய் பாக்கெட்டு மாதிரி உப்பலா இருந்துச்சு...! ஒரே மணி நேரத்துல சரக்கடிச்சுட்டுப் போட்ட சைட் டிஸ் ஊறுகா பாக்கெட்டு மாதிரி சப்பி வச்சுடுவானுக....“ஏண்டா பேஸ்டே வாங்க மாட்டிங்களா...? நானும் வாங்கலைன்னா என்னடா பண்ணுவீங்கன்னு..?” கேட்டா “பேஸ்ட்டு இல்லாதப்ப எதுக்கு பல்லு வௌக்குறோம்ப்பானுக....” இவணுககிட்ட பீர் பாட்டில மூடிய வாயில ஒடைச்சு வாங்கிக் குடிச்சத நெனைச்சா குடிக்காமியே வாந்தி வாந்தியா வருது கருமம். கருமம்..! ஒரு நாளு சோப்பாயில் வாங்கி காலியான டூத் பேஸ்ட்டுல ஊத்தி வச்சுட்டேன் அதையும் பிதுக்கி பல்லு வௌக்கி வாயக் கொப்புளிச்சு கலர் கலரா பப்புள்ஸ்...விடுறானுக....!

சின்ன டிவியிலதான்டா மாப்புள தெளிவா தெரியுது.

அப்புறம் பக்கத்து ரூமுக்காரனுக இருக்காங்களே....! அவங்க அதுக்கு மேல குளிப்பானுக அப்படியே பேசிட்டே வந்து பாராசூட் தேங்கெண்ணைய கை நெறைய ஊத்தி வௌக்கெண்ணை கூட பாக்காத தலை, உடம்பு எல்லாம் பூசிட்டு “தேங்காண்ணை தேச்சாத்தா நல்லா இருக்குலே அப்படிம்பாங்க...” “நன்னாரிப் பயலே காசு குடுத்து வாங்கி தேய்க்கணும்டா...!” அப்படிம்பேன் “விடுலே மக்கா...! சவம் இதுக்கு கணக்கு பாக்க.....”அப்படிம்பாங்க. டூத்ப் பேஸ்ட் மாதிரியே தேங்காண்ணையில பினாயில கலந்து வச்சுட்டேன் அதையும் தேய்ச்சுட்டு இன்னிக்கு நல்லா மணக்குதுங்கறானுக........வெறுத்துப் போயிட்டேன்.

இந்த சட்டை, பேண்ட் இருக்கே....அதுக்கு வாயிருந்தா கதறி அழும். காலையில நான் முழிக்கும் போதே நல்லா குளிச்சிட்டு அயரன் பண்ணி வச்ச சட்டைய போட்டுக்கிட்டு “எலே...எப்பர்ரா இருக்கு எனக்கு அப்படிம்பாங்க....” என்னடா மதுரக்கார இன்னிக்கு  கலக்குறானேன்னு பாத்தா பயபுள்ள நம்ம சட்டைய போட்டுக்கிட்டு இருப்பான் கரைட்டா நம்மை விட அடுத்தவனுக்கு செட்டாகற மாதிரியே சட்டை தெக்குற இந்த டெய்லர ஒதைக்கணும்ன்னு தேவையில்லாம நெனைப்பேன். சட்டயப் போட்டாக் கூட பரவாயில்ல அதுல பீடி குடிச்சு ஓட்ட பண்ணி வச்சிருவானுக...இல்ல சரக்கடிக்கப் போயி தக்காளி சாஸூ சிக்கன் பிஸூன்னு கறையாக்கிருவானுக கேட்டாக்கா “மாப்பு கர நல்லது அப்படிம்பானுக” அறை கூட நல்லதுதான்னு செவுட்டுல ஒண்ணு அறையலாம் போல இருக்கும்.
ஏண்டா சோப்பை பிளேடு மாதிரி ஆக்கி வச்சிருக்கிங்க.....நான் எங்க குளிக்கறது

ஊருக்குப் போயிட்டு வரும்போது எங்கம்மத்தா போட்டுர்ற நார்த்தங்கா ஊறுகா, அரிசி முறுக்க ஒரு வாரத்துல சரக்கடிக்க சைட் டிஸ்சா பயன்படுத்தி முடிச்சுருவானுக அதுவும் மப்புல ஊறுகாய வழிச்சு..வழிச்சு நக்கறதப் பாத்தா எனக்கு கடுப்பாயிரும்.

இதெல்லாம் விடுங்க புது ஜட்டியப் பாத்தா பொறையக் கண்ட நாய் மாதிரி கவ்விருவானுக....சில சமயம் நாம போட்டு கழட்டிய ஜட்டியக் கூடத் தெரியாம போடுற மாதிரி போட்டுக்குவாங்க அதுக்காக ஜட்டியில நம்ம பேரையாங்க அடிக்க முடியும்...?

அவனுக வாங்கற வண்ணத்திரை மாதிரி டைம்பாஸ் புத்தகங்களை பத்திரமா வச்சுக்குவானுக நாம வாங்குற இலக்கிய புத்தகங்களை படிக்கறேங்கற பேர்ல எடுத்துட்டுப் போயி பிலிம் காட்டுவானுக கொஞ்சம் படிச்சு பாப்பாங்க புரியலைன்னா கடுப்பாயி டீகடையில எடைக்குப் போட்டுட்டு போண்டா வாங்கி தின்னுடுவானுக.... கரைக்ட்டா நாம கடைக்குப் போயி போண்டா வாங்கும் போது சாருவோ, ஜெயமோகனோ நான் திங்கற போண்டா பேப்பர்ல எண்ணைப் பிசுக்கோட பரிதாபமா சிரிச்சிட்டு இருப்பாங்க....! 

“ஏம்ப்பா ஒரு பெட்டி போட்டு பூச்சி வச்சிருக்கலாமில்ல அப்படின்னு நீங்க கேட்குறீங்க....!”

உக்கும்...அந்தக் கதைய சொல்றன் கேளுங்க....

அதையும் செஞ்சு பாத்தனே! ஒரு பெட்டி போட்டு பூட்டி வச்சேனே! அதையும் கள்ளச்சாவி.....கள்ளச்சாவி எங்க பின்னூசி, ஆணி வச்சு அழகா திறந்துடுவானுக கடைசிக்கு எதுவும் கிடைக்கலைன்னா பல்லாலியே கடிச்சு துப்பிருவானுக கிரிமினல் பசங்க.....சார் இவனுக...!

கருமம் புடிச்சவனே ஜட்டிய தொவைச்சுத் தொலை....
நல்லா தூங்கிட்டு இருப்பேன் கனவுல நமீதா ஸ்முவிங் டிரஸ்ல (சில சமயம் டிரஸ் இல்லாம....துண்ட மட்டும் கட்டிக்கிட்டு) வந்து  வந்து உதட்டைக் குவிச்சு என்ற உதட்டை லிப்லாக் பண்ண வருவா சரியா அவ ஒதட்டுக்கும் எம்பட ஒதட்டுக்கும் .5MM இருக்கும் போது படுபாவி பசங்க சரியா மூஞ்சியில தண்ணியத் தெளிச்சு எந்திர்ரா அப்படின்னு எழுப்பி விடுவாணுக “மொதோ ராத்திரியன்னிக்கு பக்கவாதம் வரணுமடா ஒங்களுக்கு”ன்னு சாபம் உட்டுட்டே எந்திரிப்பேன்! ஆனா சரக்கு, சைட் டிஸ்ஸூ புரோட்டா, சிக்கன்னு வாங்கிட்டு வந்து சாப்பிர்ரா...சாப்பிர்ரான்னு பாசத்தை பொழிவானுக போதையில....சாபத்தை வாபஸ் வாங்கிட்டு சாப்புடுவேன் ஆனா ஒண்ணுங்க நம்மள இப்படியெல்லாம் இம்சை பண்ணினாலும் இந்த பேச்சிலர் பசங்க நமக்கு காச்சல் தலவலின்னா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போறதைலியும் செரி...! எதாவது பிரச்சனைன்னா லுங்கிய தூக்கிக்கட்டிட்டு சவுண்டு குடுக்கறதிலியும் செரி இவங்கள மிஞ்ச ஆளே கெடையாது பிரச்சனை பெரிய எடம்ன்னா எஸ்கேப்பாயிருவானுக அத விடுங்க ஆனா பாசக்காரப் பசங்கய்யா.....பாசக்காரப் பசங்க.....சாவுற வரைக்கும் மறக்க முடியாத ஒரு லைப்பு பேச்சிலர் லைப்புதானுங்க என்னங்கண்ணா நாஞ்சொல்றது...!

11 comments:

cheena (சீனா) 1:47:00 AM  

அன்பின் சுரேஷ் குமார் - அருமையான பதிவு - அய்யாச்சாமியின் டைரி சூப்பர் - படங்களும் அருமை - நானும் ரெண்டு வருசம் திருவ்னந்த புரத்துல பேச்சிலர் லைஃப் - ரூம்ல அட்டகாசம் தான் போங்க - எஞ்சாய்ட் ...... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

திண்டுக்கல் தனபாலன் 1:51:00 AM  

"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்று சொல்லலாம் என்று நினைத்தால்... சீனா ஐயா அவர்கள்... கலக்கல்... என்னமோ போங்க...

Robert 3:12:00 AM  

எவ்ளோ சின்ன ரூமு...அதுல எவ்ளோ பெரிய டீவி!!!

Robert 3:14:00 AM  

சாவுற வரைக்கும் மறக்க முடியாத ஒரு லைப்பு பேச்சிலர் லைப்புதானுங்க என்னங்கண்ணா நாஞ்சொல்றது...!// சரிதான்.அதுவும் அந்த மொதவார பேச்சிலர் லைப் ஆஹா ஒஹோ தான் போங்க........

”தளிர் சுரேஷ்” 3:40:00 AM  

பேச்சிலர் லைப் சுவாரஸ்யங்களை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் 5:11:00 AM  

வீடு....நாலு பேருக்கு டீ ஆத்துற போல...ஆத்து...ஆத்து....!!!

சக்தி கல்வி மையம் 7:04:00 AM  

மச்சி எப்படி இப்படியெல்லாம்..?

சக்தி கல்வி மையம் 7:06:00 AM  

ஆமாம் சாகிற வரைக்கும் மறக்க முடியாத லைப் ... நானும் அனுபவித்து இருக்கேன்.

MANO நாஞ்சில் மனோ 5:54:00 PM  

அடடா நம்ம பேச்சுலர் காலத்தை நினைவு படுத்திட்டியே மக்கா..!

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP